Sunday, May 15, 2022

பழமொழிகள்

 மதியாதார் வாசல் மிதியாதே!

(அயலார் இடத்தில்!)


அன்பு மரியாதை இல்லா இடத்திலே

நெஞ்சம் படபடக்க வாழ முடியாது!

பண்பற்ற கூட்டத்தை விட்டே ஒதுங்கவேண்டும்!

அந்த இடத்தைத் தவிர்!


குற்றம் பார்க்கின் சுற்றமில்லை!

(உறவுகள் இடத்தில்!)


விட்டுக் கொடுக்கும் விவேகமான பண்பிருந்தால்

குற்றத்தை நாளும் பெரிதாக்கிப் பார்க்காமல்

சுற்றத்தைக் காக்கும் பெருந்தன்மை போற்றலாம்!

சுற்றமே வாழ்க்கையின் மூச்சு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home