Sunday, May 11, 2025

சாவே வா!

 சாவே வா!


சாவே சாவே வாராயோ!

விரைந்து விரைந்து வாராயோ!

மனதில் உளைச்சல் நீங்கிவிடும்

நாளும் வேதனை இருக்காது!


எங்கே எப்போதும் வருவாயோ!

எனக்கு கொஞ்சம் சொல்லிவிடு!மதுரை

கண்ணீர்த் துளிகள் சிந்தாது!

விரக்தி எண்ணம் தோன்றாது!


அங்கே வந்து காத்திருப்பேன்!

கைகள் நீட்டி அணைத்திருப்பேன்!

நன்றிப் பாதான் தந்திடுவேன்!

நிம்மதி யாகத் துயில்கொள்வேன்!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home