Monday, March 18, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மற்றவரைப் பற்றியே எண்ணுதல் நம்மையோ
மற்றவர்கள் என்ன நினைப்பாரோ இவ்வுலகில்
என்றெண்ணி உங்களது வாழ்வை மகிழ்ச்சியை
இங்கே இழக்கவேண்டாம்! உங்களுக்கு நீதிபதி
என்றுமே நீங்கள்தான் என்றுணர்ந்து நாள்தோறும்
உங்கள் செயல்களில் ஆர்வத்தைக் காட்டுங்கள்!
என்றும் மகிழ்ச்சியே உண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் பன்னீர்செல்வம்


 நண்பர் பன்னீர்செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மழலையின் புன்னகை கோப்பைக் குளம்பி

அழகை ரசித்திருந்தேன்! நண்பரின் காலை

வணக்கத்தில் மெய்மறந்தேன் நான்


மதுரை பாபாராஜ்

Sunday, March 17, 2024

YOU ARE UNIQUE


 

Saturday, March 16, 2024

நண்பர் மாரிசாமி



 நண்பர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையும் காலமும் இவ்வுலகின் ஆசான்கள்!

வாழ்க்கையோ காலத்தை நன்கு பயன்படுத்த,

காலமோ வாழ்வின் மதிப்பை உணர்த்திட

ஞாலத்தில் கற்றுத் தருகிறது கற்கவேண்டும்!

பாடத்தைக் கற்றால் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

B.வசந்தா-- R.ஜோதி


 வசந்தாவும் திருமதி ஜோதி ராஜ்குமாரும்


அத்தை மருமகள் அட்டகாச மாகத்தான்

நிற்கின்றார் ஆகா! ரசித்து.


மாமா பாபா

நண்பர் லிங்கராஜ்


 நண்பர் லிங்கராஜ் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பியை ஊதா நிறப்பூவைக்

காட்சிப் படுத்தியே காலை வணக்கத்தை

நாட்டமுடன் தூதனுப்பி நட்பினை லிங்கராஜ்

ஊற்றெடுக்க வைத்திட்டார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Friday, March 15, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பணந்தான் மகிழ்ச்சியிங்கே  என்று பலரும்
பொருள்தான் மகிழ்ச்சியிங்கே என்று சிலரும்
ஒருசிலரே பண்பும் அணுகுமுறைப் போக்கும்
இவற்றைவிட உள்ளதென்பார் சொல்.

மதுரை பாபாராஜ்

Thursday, March 14, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கிடைத்திருக்கும் எந்தவொரு வாய்ப்பினையும் நாமோ
கொடுத்தும் உதவியும்  எண்ணிமுன் வந்தே
நடைமுறை யாக்கு! வலிமை கிடைக்கும்!
கிடைத்துள்ள வாய்ப்புதான் பொன்.

மதுரை பாபாராஜ்

Monday, March 11, 2024

பேரன்கள் வளர்ச்சி


 பேரன்கள் சுசாத்த்-- நிக்கில்-- வருண்


நடைவண்டி-- மகிழுந்து!


நடைவண்டி, சக்கரங்கள் மூன்றுள்ள சின்ன

மிதிவண்டி, பின்னர் டயர்வண்டி, பின்னர்

மிதிவண்டி சக்கரங்கள் ரெண்டுடன் ஓட்டி

கதழுந்து சிற்றுந்து என்றேதான் மாறி

மகிழுந்தை ஓட்டும் கோலத்தை வாழ்வில்

மகிழ்ச்சியுடன் காண்போம் வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணங்கள் என்றும் வலிமை உடையவை!
நம்செயல் பாட்டைத் துணைபுரிந்து மேம்படுத்த
அன்றி சிதைக்க முடியுமிங்கே! நேர்மறை
எண்ணமும் ஆக்கபூர்வ எண்ணமும் நல்லது!
எண்ணம்போல் வாழ்க்கை உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, March 10, 2024

பல்லி ஒலி!

 

பல்லி ஒலிவைத்து நல்லதா கெட்டதா

சொல்லித்தான் வாழ்கின்றார்! இங்கே பகுத்தறிவின்

சொல்கேட்க மாட்டாரோ? சொல்.


மதுரை பாபாராஜ்

என் வாழ்க்கைக் கணக்கு!

 என்வாழ்க்கைக் கணக்கு!


வாழ்க்கைப் பயணத்தைக் கூட்டிக் கழித்தேதான்

பார்க்கின்றேன்! வாழத் தெரியாத ஏமாளி

நானென்றே எண்ணிக் கலங்குகிறேன் என்னென்பேன்!

வானத்தைப் பார்க்கின்றேன் நின்று.


ஏக்கப் பிழிவு மனதைப் பிசைகிறது!

தேக்க நிலைகளோ தேகத்தை மொய்க்கிறது!

ஊக்கமும் உற்சாக வேகமும் கானலாகும்

காட்சியில் என்இறுதி நாள்.


நாய்களும் பூனைகளும் வாழ்கின்ற மண்ணகத்தில்

வாழும் முறையறிந்து வாழவில்லை நானிங்கே!

வாழ்க்கைக் கணிதமே தப்பாகிப் போனதோ?

நாள்தோறும் வாடுகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்