Thursday, June 30, 2022

சந்திப்போம் பிரிவோம்

 சந்திப்போம் பிரிவோம்!


MEETING AND PARTING IS LIFE!


வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்தோர் ஏராளம்!

பாதி வழியில் பிரிந்தவர்கள் ஏராளம்!

நாள்தோறும் நாமிங்கே சந்திப்போர் ஏராளம்!

யார்யார் பிரிவார்கள்? எப்போது என்றுதான்

யாரறிவார்? என்றேங்கும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Wednesday, June 29, 2022

வாழ்க்கையின் சொத்து

 வாழ்க்கையின் சொத்து!


இணையர் இணையருக் காகவே வாழும்

மனநிலையின் காலகட்டம் ஒன்றாகும் வாழ்வில்!

குழந்தைகளைப் பெற்றபின் வாழ்விலே அந்தக்

குழந்தைகளுக் காகவே வாழவேண்டும் பெற்றோர்!

குழந்தைகளே வாழ்க்கையின் சொத்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் சுந்தரம் அனுப்பியது


நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


நேர்மறை எண்ணமற்ற வெற்றியோ ஆகூழ்தான்!

நேர்மறை எண்ணமுடன் கூடிய வெற்றியே

சாதனை என்றிங்கே கூறப் படுகிறது!

நேர்மறை  எண்ணம் வளர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களை நேரத்தில் செய்யும் கலையைத்

தயங்காமல் கற்கவேண்டும்! செய்யும் செயலை

நயமாக முன்கூட்டி நாமோ முடித்தால்

மகிழ்ச்சி அதிகமாகும்! நீங்கள் ரயில்கள்

வருமுன்னே போன மகிழ்ச்சி நிறைந்த

அனுபவ முண்டா? உரை.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சார்ந்திருக்க நேரும் பொழுதில் சிலநேரம்

தீர்வுகள் சிக்கலுக்குத் தோன்றாது!

சார்பினை

நாமோ தவிர்க்க முடிவதில்லை என்றாலும்

மேம்படுத்த வேண்டும் இணங்கவைக்கும் ஆற்றலை!

நாமிங்கே கற்பது நன்று.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, June 28, 2022

மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


மற்றவரை வாழ்த்திப் புகழ்வதில் பாதிவாழ்வை

மற்றவர்கள் உண்டாக்கும்  உள்ள உளைச்சலால்

மிச்சமுள்ள மீதிவாழ்வை

இங்கே இழக்கின்றோம்,!

இத்தகைய ஆட்டமே போதும் நிறுத்திவிடு!

சற்றே உனக்காக வாழ்.


மதுரை பாபாராஜ்

 

பெற்றோரைப் பேணுதல்

 பெற்றோரைப் பேணுதல்!


கொடுத்துப் பழகியோர் கேட்கத் தயங்கி

எடுக்க மறுப்பார்! கொடுப்போர் அறிந்து

கொடுத்தால் மகிழ்வார்! குறிப்பறிந்து 

தந்தே

கொடுத்துப் பழகியோரைப் போற்று.


மதுரை பாபாராஜ்

மகள் சுபா ரவி பிறந்தநாள் வாழ்த்து


மகள் திருமதி சுபாதேவி ரவி பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 29.06.22


மருமகன்: சி.ரவி

பேரன்: சுசாந்த்  சிரிராம்


நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்க! மகிழ்ச்சியாக வாழ்க!

மகத்தாக வாழ்க! குறள்போல வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் அஷ்ரப் பிறந்தநாள் வாழ்த்து

 Happy birthday ASHRAFF

28.06.2022

A.agility reverberates in his actions!

S sincerity is his approach

H onesty is his attitude

R reality reflects in his friendship

Authenticity glitters in his arguments

Faculty of  multi talented erudition

Feather of kural adorns his personality

Happy birthday friend!

S.P.Babaraj

வீஓவி அஷ்ரப் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத்திருநாள்: 

28.06.2022


அனைத்துக் குறள்கள் கருத்துக்கும் ஏற்ற

மனங்கவரும் சித்திரத்தை அஷ்ரப் புதிராய்

அனுப்பியே பங்குபெறச் செய்தார்! மகிழ்ந்தோம்!

இணையற்ற தொண்டினை வாழ்த்து.


ஒப்பீடு செய்வதில் பன்முக ஆற்றலின்

விற்பன்னர் அஷ்ரப் ! மிகையில்லை! உண்மைதான்!

அற்புத நண்பர் அகங்குளிர வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

 

Monday, June 27, 2022

காக்கும் கரம்

 காக்கும் கரம்!

அம்மாவின் அன்பில் உருகாத உள்ளமுண்டோ?

அப்பா அரவணைப்பில் துள்ளாத உள்ளமுண்டோ?

அப்பாவும் அம்மாவும் வாழ்வின் இருவிழிகள்!

எப்போதும் காக்கும் கரம்.


மதுரை பாபாராஜ்

சம்பந்தி ஐயா தெய்வத்திரு இராமகளஞ்சியம்



 சம்பந்தி ஐயா தெய்வத்திரு இராமகளஞ்சியம் அவர்களுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

வாழ்க்கை இருவரையும் சம்பந்தி என்றுதான்

சேர்த்தே உறவினைத் தந்தது! வாழ்ந்திருந்தோம்!

காலம் பிரித்தபோதோ உங்களை மட்டுமே

ஏனோ பிரித்தது? நானும் வருவதற்குக்

காத்திருக் கின்றேன்! வருவேன் அழைப்புவரும்!

மண்ணகம் நம்மைப் பிரித்தாலும் நாமிருவர்

விண்ணகத்தில் சந்திப்போம் அன்று.


திருவள்ளுவர் கழகம்,தென்காசி

கவியரங்கம்! 01.06.2018 


தென்காசி ஊரிலே எந்தன் கவியரங்கம்

என்றவுடன் வந்திருந்து கேட்டு ரசித்ததை

என்னால் மறக்க முடியுமா? வெள்ளந்தி

உள்ளமுடன் பேசுகின்ற பண்பை மறப்பேனோ?

கம்பீர மாக நடந்துவரும் காட்சியைக்

கண்கள் படம்பிடித்து வைத்திருக்க பார்க்கின்றேன்

எந்தன் அகக்கண்ணால் தான்.


இந்தப் பிறவியில் சந்திக்க வைத்திட்ட

பொன்னான காலமோ நன்றிக் குரியதுதான்!

உங்கள் புகழ்நிலைக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

Sunday, June 26, 2022

நண்பர் BSNL இராமசாமி அனுப்பியது


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியது!


ஒவ்வொரு நாளும் கதிரவன் தோன்றுவது

அன்பளிப்பே! ஏற்றுநாம் வாழவேண்டும்! நேர்மறையாய்

இன்புற்றே நாம்தான் அனுபவிக்க வேண்டுமிங்கே!

மண்ணகத்தில் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

வினாடிக்கவி பாபாராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

🙂👍🙏

இராமசாமி

 

நல்லொழுக்க வேர்!

 நல்லொழுக்க வேர்!


மரியாதை தந்தால் மரியாதை உண்டு!

மரியாதை நாளும் ஒருவழி அன்று!

மரியாதை என்றும் இருவழிப் பாதை!

மரியாதை நல்லொழுக்க வேர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எரிச்சலூட்டும் சூழல் உதவாது நாளும்!

அதனுடைய உள்ளீடைக் கொண்டேதான் நீங்கள்

அதைத்தான் சமாளிக்க வேண்டுமிங்கே வெற்றி

நடைபோட்டு முன்செல்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


சமநிலையைப் பின்பற்றி வாழ்தல் அருமைச்

செயலாகும் மற்றும் மகிழவைக்கும் இங்கே!

ஒருசிக்கல் உங்கள்முன் வைத்தால் நியாயம்

நடுநிலை காத்துவிட்டால் காலத்தின் போக்கில்

சமநிலையைப் பின்பற்றும் ஆற்றலில் தேர்ச்சி

நிறைந்தவராய் மாறலாம் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, June 25, 2022

நண்பர் ராஜூ சுந்தர்ராஜன் கணிப்பு



கால்கட்டு..


தன் வலக்கை கொண்டு, 

அவள் வலக்கை பற்றி,

கால்கட்டை விரல் பிடித்து , 

கீழே அம்மி மிதித்து, 

மேலே அருந்ததி காட்ட. 

ஆரணங்கு,அகம் வந்தாள் !


ஆசை அறுபது நாள்,

மோகம் முப்பது நாள் ...

நாட்களை நகர்த்தி,

ஆண்டுகளை கடந்து... 

குற்றம், குணம் பார்த்து

குலாவி, குலம் செழிக்க, 

கோபம், தாபம், போகம்,ரோகம்... 

முற்றுமடங்கி போய்ச் சேர்ந்த நாளில்... 


மீண்டும் கட்டு, மூன்று கட்டு...


தாடை தொங்கி விடாது நாடிக் கட்டு ,

இருபுஜம் விரியாது, இருகை விரல் கட்டு, 

அந்திமத்தில்,நாலு பேர் நகர்த்தி தூக்க,  

மீண்டும், காலிரண்டும் சேர்த்துக் கட்டு !

ஆரம்பம் கைவிரல்கள் சேர்க்கை..

முடிவோ, கால் விரல்கள் சேர்க்கை.. 

இடையிலே வந்த அந்த கால்கட்டு, 

இயற்கை சேர்த்தது:: காலம் தொட்டு!


ராஜுவின் எண்ணங்கள் ஏழாயிரம் - 150626



 

நண்பர் திருமலைக்கு வாழ்த்து


நண்பர் திருமலைக்கு வாழ்த்து!


விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்

மகிழ்ச்சியுடன் நண்பர் திருமலை நாளும்

அகங்குளிர காலை வணக்கத்தைச் சொல்லும்

மகத்தான நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Friday, June 24, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஏதாவ தொன்றினைச் செய்ய திறனுண்டு

தோதாக  என்பதில்லை! உள்ளம் உறுதியுடன்

தாகமும் அர்ப்பணிப்பும்  கொண்டே சிறப்பாக

நாளும் செயல்படுதல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை:


போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு

வேலைகள் செய்வதோ ஆர்வம் நிறைந்ததுதான்!

வேலையைத் தேர்வுசெய்தே முக்கியத்தைப் பார்த்துணர்ந்து

வேலையில் எந்தச் சமரசமும் இல்லாமல்

நாமோ நிறைவுசெய்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, June 22, 2022

ஆழ்மனம்

 ஆழ்மனம்!


வாழ்க்கையே கேள்விக் குறியாக நொந்துபோய்

வாழ்பவரைக் காணும் பொழுதெல்லாம் வாடுகிறேன்!

வாழ்க்கையின் சிக்கல் முடிந்து மகிழ்ச்சியுடன்

வாழ்க்கை வியப்புக் குறியாக மாறவேண்டும்!

ஆழ்மனத் தூதே இது.


மதுரை பாபாராஜ்

படம் அனுப்பியவர் லிங்கராஜ்


படம்அனுப்பியவர்:

லிங்கராஜ் கண்ணன்


கூடைப்பந்தும் எருவும்!


எந்தப் பயிற்சியும் இல்லாமல் சாணியைத்

தட்டி எருவாய் உருமாற்றி நின்றேதான்

அட்டகாச மாக சுவரில் எறிகின்ற

வித்தையைக் கண்டு மலைக்கின்றோம் இங்குதான்!

ஓடியோடி பந்தையும் தட்டிதட்டிக் கூடையைப்

பார்த்தே எறிவார் விளையாட்டு வீரர்கள்!

வீரராக நாளும் கடும்பயிற்சி செய்திருப்பார்!

பார்த்தால் வியப்புதான் பார்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, June 21, 2022

ஆதித்யா அம்மா


ஆதித்யா அம்மா இன்று அனுப்பிய படங்களுக்குக் கவிதை!


இடம்: குரோவ் அடுக்ககம்

பிருந்தாவன் மாடி


மாலைப் பொழுதிலே மாடிக்குச் சென்றிருந்தேன்!

வானத்தில் கார்மேகம் வந்து திரண்டதால்

ஆகா! மழைவரும்  என்றே நினைத்திருந்தேன்!

வானம் பொழிந்தது நல்ல மழைதன்னை!

தேனமுதம் தானே மழை.


மதுரை பாபாராஜ்

 

Monday, June 20, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


பலவகை வேலைகளைச் செய்யவேண்டும் என்றே

களத்தில் நினைக்கலாம்! ஆனாலும் நாமோ

சிலவேலை மட்டும் நிறைவுசெய்வோம்! நாளும்

இவையிரண்டுக் குள்ள இடைவெளியை நாமே

குறைக்க முயலவேண்டும்! நாளும் இலக்கை

அடைய முயற்சித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

Saturday, June 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


மகிழ்ச்சியை உண்டாக்கும் சிற்பியாக மாறி

அகங்குளிரும் ஆதார மாகத்தான் நீங்கள்

மகத்தாக வாழும் நிலையிலே அந்த

மகிழ்ச்சியைத் தேடி அலையவேண்டாம்  இங்கு!

மகிழ்வித்து நாளும் மகிழ்.


மதுரை பாபாராஜ்

 

Friday, June 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒருவரின் முக்கியம் தொந்தரவைச் சார்ந்தே

இருப்பது நல்லதல்ல! ஆனால் மதிப்பும்

மதிப்பை உயர்த்துவதில் பங்களிப்பும் சார்ந்தே

இருந்தால் நிலைக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

மகள் திருமதி உமாபாலு அனுப்பியதற்குக் கவிதை


மகள் திருமதி உமா பாலு அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை:


குடும்பமென்றும் நண்பர்கள் நேர்மை இரக்கம்

பணிவென்றும் ஐவகைத் தூண்களால் வாழ்க்கை

அணிசெய்த போதும் தளமாக என்றும்

அனைத்திற்கும் காரணம்  அன்பு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, June 16, 2022

மருமகன் சரவணன் அனுப்பியதற்குக் கவிதை


மருமகன் சரவணன் அனுப்பியதற்குக் கவிதை!


வள்ளுவரும் விவேகானந்தரும்!


வாழ்வியலில் வானுயர்ந்த வள்ளுவரைப் பார்க்கின்றோம்!

ஆன்மிகத்தில் வானுயர்ந்து வாழ்கின்ற பண்பாளர்

வீரத் துறவியின் பாறையைப் பார்க்கின்றோம்!

சேர்ந்திருக்கும்  அற்புதத்தை வாழ்த்து


மதுரை பாபாராஜ்

அருமை மாமா! வார்த்தைகளைக் கோர்த்து உடனடி பாமாலை படைக்கும் மாமா அவர்களின் திறமைக்கு தலைவணங்குகிறேன்🙏🙏🙏

மு.சரவணப்பெருமாள்

 

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கீழ்வானில் காலைக் கதிரவன் தோன்றியே

வாழ்வை இயக்க உலகை உசுப்புகின்றான்!

வாழ்க்கை நிகழ்வுகள் எப்படியோ என்றெல்லாம்

கேள்வி மனிதனுக்குத் தான்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


பொறுப்புகளை ஏற்பதற்குக் கற்கவேண்டும்! அந்த

அருங்குணம் உங்களுக்கு உங்களைச் சுற்றிப்

பரந்திருக்கும் சூழலை ஏற்கும் துணிவை 

வலிமையைத் தந்தே சவால்களை நாளும்

எளிமையாய்ச் சந்திக்கும் ஆற்றலைக் கூட்டும்!

பொறுப்புகளை ஏற்கப் பழகு.


மதுரை பாபாராஜ்

நண்பர் சாமிநாதன்


நண்பர் சாமிநாதனுக்குப் பணிநிறைவு வாழ்த்து!


பண்பாளர் சாமிநாதன் இங்கே பணிநிறைவில்

தன்னிறைவு கண்டுவிட்டார்! வாழ்வாங்கு வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இருக்கும் இடத்தைக் கலகலப் பாக்கும்

அருங்கலை கற்ற இயல்பான நண்பர்!

செருக்கற்ற நட்பில்  மகிழவைக்கும் அன்பர்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

 

Wednesday, June 15, 2022

மேஜர் குருச்சரன் பிறந்தநாள் வாழ்த்து

 மேஜர் குருச்சரன் அவர்களுக்குப் பிறந்தநாள் 

வாழ்த்து!


அகவைத் திருநாள்:

15.06.2023


மேஜர் குருச்சரன் மென்மேலும் முன்னேறி

ராஜநடை போட்டேதான்

கம்பீர மாகவே

தாய்நாட்டைக் காக்கின்ற

வீரனாக வாழியவே!

தாய்த்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

veethi: 

அருமை பாபா அவர்களே! வணக்கம்! தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

வீதிவிடங்கன் ஆர்.

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


தொடர்ந்து செயல்படுங்கள்! மேம்படுத்தும் வாய்ப்பால்

உயரும் நிலைவரும்! அந்த நிலைகள்

வளர்ச்சிக்கு வித்திட்டு நாளும் செயல்கள்

தொடர வழிவகுக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, June 14, 2022

அடக்கத்தின் சிறப்பு

 அடக்கத்தின் சிறப்பு!

அடங்காமல் வாழ்பவனின் தோற்றம் மலைபோல்

இருந்தும் மடுவே!அடக்கமாய் வாழும்

ஒருவரின் தோற்றம் மடுபோல் எனினும்

பெருமலை  என்றுதான் போற்று.


மதுரை பாபாராஜ்


Monday, June 13, 2022

அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து


அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!

ஓவியம் பேசுமா? அம்மாவின் ஆற்றலில்

ஓவியம் பேசும் கலையெழிலைக் கண்டுகொண்டேன்!

ஓவிய ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

ஜெகதீஷ் பிறந்தநாள் வாழ்த்து


ஜெகதீஷ் பிறந்தநாள் வாழ்த்து

அகவைத்திருநாள்: 13.06.22

பெற்றோர்:

திரு சூரிய பாபு 

திருமதி லதா


கலையுலகில் மென்மேலும் முன்னேறி வாழ்க!

மலைக்கவைக்கும் சாதனை நாட்டியே வாழ்க!

வளம்பல பெற்றே மகிழ்வுடன் வாழ்க!

வளர்தமிழ்போல்  வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

 

Sunday, June 12, 2022

திரு N S கோகுல்நாத் திருமதி சுமதிஸ்ரீ இணையருக்கு வெள்ளிவிழா மணநாள் வாழ்த்து!


திரு N S கோகுல்நாத் திருமதி சுமதிஸ்ரீ

இணையருக்கு  வெள்ளிவிழா     மணநாள் வாழ்த்து! 


நாள்: 11.06.2022

24/25 ஆண்டுகள்

இல்லறமுத்துக்கள்:

மகன்கள்:

யஷ்வந்த் G S

ஆதித்யா  G S


குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


இருபத்து நான்கை நிறைவுசெய்தே இன்று

இருபத்தைந் தாவது ஆண்டினைக் காணும்

சுமதிஸ்ரீ கோகுல்நாத்   அன்பு இணையர்

மகன்கள் மகிழ்ந்திருக்க வாழ்கபல் லாண்டு!

மகத்தாக  வாழ்க மகிழ்ந்து.


பெற்றோரின் ஆசிகளுடன் உற்றார் உறவினரின்

முத்தான வாழ்த்துடன் பல்வளங்கள் இல்லறத்தில்

எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்வாங்கு வாழியவே!

வள்ளுவம்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.



 


 

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம்,விசாகை அனுப்பியதற்குக் கவிதை!


தலைமைப் பொறுப்பு தருகின்ற போது

தலைக்கு மகுடம் கொடுக்கவில்லை! ஆனால்

மலைக்கவைக்கும் ஆற்றல் சிறப்பினைக் காட்ட

தருகின்ற வாய்ப்பென் றுணர்.


மதுரை பாபாராஜ்

 

இப்படிப் பேசு!

 இப்படிப் பேசு!

அன்பாகப் பேசினால் உள்ளம் மகிழ்ந்திருக்கும்!

பண்பாகப் பேசினால் உள்ளம் குளிர்ந்திருக்கும்!

வம்பிழுத்துப் பேசினால் உள்ளமோ வாடிவிடும்!

அன்பாக, பண்பாகப் பேசு.

மதுரை பாபாராஜ்

Friday, June 10, 2022

நண்பர் எழில்புத்தன் அவர்களுக்கு வாழ்த்து


நண்பர் எழில்புத்தன் அவர்களுக்கு வாழ்த்து!


புலமை திறமை இரண்டும் இருக்கும்

எழில்புத்தன் சொல்லோ வியங்கள் சிறப்பு!

வளர்தமிழ்போல் வாழ்க! மகிழ்ச்சியுடன் வாழ்க!

நலமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, June 08, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சிறிய செயலெனினும் வாழ்விலே நாமோ

புறக்கணிக் காமல் இருப்பதற்குக் கற்கும்

மதிவேண்டும்! அந்தச் செயல்தான் நமக்கு

மகிழ்ச்சியை துன்பத்தைத் தந்திருக்கும்! நாமோ

அவற்றை அடையாளம் கண்டே அணுகி

முறையாய்க் கவனித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

மகள் திருமதி உமாபாலு


மகள் திருமதி உமாபாலு அனுப்பியதற்குக் கவிதை!

முடிந்ததைச் செய்யும் பொழுது வலிமை

நமக்குள்ளே தேவை! முடியாத ஒன்றை

முயற்சிக்கும் நேரத்தில் நம்பிக்கை தேவை!

இரண்டுமே சாதனைக்கு வித்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

என்ன கவனமாக வாழ்ந்தும் சிதறுகின்ற

வண்ணமிங்கே வாய்ப்பு வரலாம்! சவால்களே

வந்தாலும் நீங்கள் கவனமுடன் சந்திக்கும்

அந்த அணுகுமுறை வாழ்வில் தொடரவேண்டும்!

என்றும் கவனமுடன் வாழ்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, June 07, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நன்றி உணர்வு நிறைந்திருக்கும் வாழ்க்கையை

இங்குநாம் வாழவேண்டும்! அத்தகையப் பண்பிலே 

கற்பதோ ஏராளம்! முத்தாய்ப் பணிவுமட்டும் 

அல்ல சிறப்பாக இங்கே வழிகாட்டி 

என்றும் அமையலாம்  நாம்.


மதுரை பாபாராஜ்

 

Monday, June 06, 2022

வேடம் கலையட்டும்

 வேடம் கலையட்டும்!

கூட இருந்தே குழிபறிக்கும் கூட்டத்தின்

வேடம் கலையட்டும்! உண்மை விளங்கட்டும்!

தூபம் இடுகின்ற கள்ளத் தனங்களின்

தூசி விலகட்டும் இங்கு.

மதுரை பாபாராஜ்


வக்கிரக் காரனுக்குப் புத்தி மட்டு

 வக்கிரக் காரனுக்குப் புத்தி மட்டு!


என்தலையில் பாறாங்கல் வைத்தது போதாமல்

மென்மேலும் கற்களை ஏற்றிக் கொக்கரிக்கும்

வக்கிரத்தை என்னென்பேன்? நாய்க்கிருக்கும்  நன்றிகூட

இத்தகையோர்க் கிங்கில்லை ஏன்?


மதுரை பாபாராஜ்


தமிழ்மொழி செம்மொழி நாள்


தமிழ்மொழியை செம்மொழியாக

அறிவித்த நாள்!


06.06.22

தமிழ்மொழி செம்மொழி யானநாள் இன்று!

அமிழ்தின் சுவைவிஞ்சும் தாய்த்தமிழ் வாழ்க!

தமிழர்கள் என்றே தலைநிமிர்ந்து சொல்வோம்!

இமைபோல காப்போம் திரண்டு.


மதுரை பாபாராஜ்

 

பலியாடு

 பலியாடு!


பட்டதும் போதும்! படுவதும் போதுமே!

தொட்டதெல்லாம் சுட்டுப் பொசுக்கும்

நிலையெடுத்தால்

உள்ளம்  உளைச்சலுக்கே நாளும் பலியாடாய்த்

துள்ளித் துடிக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உங்கள் பொறுமையைச் சோதிக்கும் வண்ணத்தில்

என்ன நடந்தாலும்  நீங்கள் சமநிலையை

என்றும் இழக்காமல் வாழவேண்டும்! நாள்தோறும்

அன்பாய்ச் செயலாற்ற வேண்டும்! அதுவொன்றே

இங்கே முழுமை அடையவைக்கும் உங்களை!

என்றும் கடமையே கண்.


மதுரை பாபாராஜ்

 

Saturday, June 04, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


குறிப்பிட்ட நேரம் சிலசெயலை நாமோ

நிறைவேற்ற வேண்டி இருக்குமிங்கே! என்ன

விலைகொடுத் தேனும்நாம் செய்தாக வேண்டும்!

மலைக்காமல் முன்னுரிமை கூட தருவோம்!

செயல்வெற்றி ஒன்றே குறி.


மதுரை பாபாராஜ்

Friday, June 03, 2022

ஐயா பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்து


ஐயா பழனியப்பன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 04.06.22


அம்பத்தூர் கம்பன் கழகத்தை ஆர்வமுடன்

எண்பதிலும் ஐயா நடத்துகின்றார் ஆற்றலுடன்!

கம்பன் தமிழ்போல வாழ்க மகிழ்ந்தேதான்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

துருமதி நிலமங்கை துரைசாமி


அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி,விசாகை வரைந்த ஓவியம்!


ஆற்றோரம் வீடுகட்டி ஆற்றில் படகுவிட்டுக்

காற்றோட்ட மாகத்தான் வாழ்கின்ற வாழ்க்கையில்

நோய்நொடி அண்டா(து)  உணர்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, June 02, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒருநாளில் நூறு செயல்களைச் செய்வோம்!

ஒருசெயலை மற்றவர்க் காக முயன்றால்

திருப்தி கிடைக்குமே உண்மையி லேயே!

பெருமையும் உண்டாம் நமக்கு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, June 01, 2022

ரகு அமுதா திருமணநாள்


மருமகன் ரகுவீர கணபதி -- மகள் அமுதா

இணையருக்குத் திருமணநாள் வாழ்த்துப்பா!

மகள்: ரித்திகா ( எ) நான்சி

02.06.2022

ஆன்மிகம் வாழ்வாக நாளும் குறள்நெறியில்

வாழ்வை சிறப்பாக என்றும் நிறைவாக

நேர்மறைச் சிந்தனையைப் போற்றியே 

வாழ்கவே!

பார்போற்ற வாழ்கபல் லாண்டு.


இல்லறத்தில் நல்லறத்தை நாள்தோறும் பின்பற்றி

பல்வளங்கள் சூழ மகளுடன் பெற்றோரின்

நல்லாசி நல்வழி காட்ட மகிழ்ச்சியுடன்

பல்லாண்டு வாழ்க சிறந்து.


மதுரை பாபாராஜ்--வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வாழ்வின் அனைத்துச் செயல்களுக்கும் நேரமுண்டு!

நேரத்தைத் தாண்டி அனுபவிக்க அல்லது 

நாளும் செயல்படக் கூடாது என்றில்லை!

உள்ளம் திருப்தியுடன்  மற்றும் நிறைவடையும் 

வண்ணம் செயல்பட என்றும் தயாராக

தெள்ளத் தெளிவாய் உழை.


மதுரை பாபாராஜ்