Saturday, June 25, 2022

நண்பர் ராஜூ சுந்தர்ராஜன் கணிப்பு



கால்கட்டு..


தன் வலக்கை கொண்டு, 

அவள் வலக்கை பற்றி,

கால்கட்டை விரல் பிடித்து , 

கீழே அம்மி மிதித்து, 

மேலே அருந்ததி காட்ட. 

ஆரணங்கு,அகம் வந்தாள் !


ஆசை அறுபது நாள்,

மோகம் முப்பது நாள் ...

நாட்களை நகர்த்தி,

ஆண்டுகளை கடந்து... 

குற்றம், குணம் பார்த்து

குலாவி, குலம் செழிக்க, 

கோபம், தாபம், போகம்,ரோகம்... 

முற்றுமடங்கி போய்ச் சேர்ந்த நாளில்... 


மீண்டும் கட்டு, மூன்று கட்டு...


தாடை தொங்கி விடாது நாடிக் கட்டு ,

இருபுஜம் விரியாது, இருகை விரல் கட்டு, 

அந்திமத்தில்,நாலு பேர் நகர்த்தி தூக்க,  

மீண்டும், காலிரண்டும் சேர்த்துக் கட்டு !

ஆரம்பம் கைவிரல்கள் சேர்க்கை..

முடிவோ, கால் விரல்கள் சேர்க்கை.. 

இடையிலே வந்த அந்த கால்கட்டு, 

இயற்கை சேர்த்தது:: காலம் தொட்டு!


ராஜுவின் எண்ணங்கள் ஏழாயிரம் - 150626



 

0 Comments:

Post a Comment

<< Home