Thursday, March 31, 2022

மகள் திருமதி உமாபாலு


மகள் திருமதி உமா பாலு அனுப்பியது!


கவிதை ஆக்கம்!


நமக்குத் தெரியாதா கேட்டுத் தெளிவோம்!

நமக்கெல்லாம் ஏற்காதா பேசித்தான் தீர்ப்போம்!

நமக்குப் பிடிக்காதா! பண்புடன் சொல்வோம்!

நமக்குள்ளே நாமே அமைதியாய்த் தீர்ப்பை

வழங்குதல் நல்லதல்ல சொல்.


மதுரை பாபாராஜ்

 

அறிவோ அறிவு

 அறிவோ அறிவு!


மெய்யறிவு பட்டறிவு மற்றும் பகுத்தறிவு

தெள்ளத் தெளிவான நுண்ணறிவு, நல்லறிவு

கெட்ட அறிவென்றே மாந்தர் பயன்படுத்தும்

சுற்றில் அறிவுவகை பார்.


மதுரை பாபாராஜ்

நாங்களும்தூங்குகிறோம்

 நாங்களும் தூங்குகிறோம்!


தூங்கலாம் என்றே படுக்கின்றோம்! ஆனாலும்

தூக்கம் வரவில்லை! வேதனை எங்களை

ஆட்டிப் படைக்கின்ற நேரத்தில் தூங்கவா?

மாறிமாறி நாங்கள் புரண்டே  படுத்திருப்போம்!

தூக்கமோ எங்களையும் மீறி வரவேண்டும்!

தூங்குகிறோம் நாங்களும் என்று.


மதுரை பாபாராஜ்

வசந்தா


நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


கவிதை ஆக்கம்!


மனமோ அலைபாய காரணங்கள் இங்கே

தினந்தோறும் ஆயிரம் உண்டெனினும் நாளும்

மனதை நிலைநிறுத்தி வைக்கும் கடமை

நமக்குண்டு! நம்கவனம் சிந்தாமல் பார்த்தே

சிதறாமல் வாழவேண்டும்! நாமிதை  வாழ்வில்

கடைபிடித்தால் நிம்மதிதான் சொல்.


மதுரை பாபாராஜ்

Wednesday, March 30, 2022

தமிழினியன் ஐயாவுக்கு வாழ்த்து



 தமிழினியன் ஐயாவுக்கு வாழ்த்து!


புறம் 192


பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே


– கணியன் பூங்குன்றனார்


கணியன்பூங் குன்றன் கவிதைக் கருத்தைக்

கனிரசமாய் இன்சுவை குன்றாமல் தந்த

தமிழினியன் ஐயாவை வாழ்த்தி வணங்கு!

அமிழ்தினை விஞ்சும் புறம்.


மதுரை பாபாராஜ்

தொடர் ஓட்டம்

 தொடர் ஓட்டம்!


RELAY RACE!


உடன்சென்று பள்ளியிலே விட்டுவிடும் வாழ்க்கை

கடந்துபோகும்! வந்துவிடும் கல்லூரி வாழ்க்கை

நடைபோடும் பேரழகைக் கண்டேதான் 

நாமும்

படைபோன்ற கம்பீரம் கொள்வோம்

ரசித்து!

அடலேறாய்ப் போய்வருவார் பார்.


படிப்பை முடித்துப் பணிக்களம் செல்வார்!

படிப்படியாய் முன்னேற்றம் இல்லறம் காண்பார்!

வியந்தேதான் பார்ப்போம் வளர்ச்சியைப் பார்த்து!

அவரவர் வாழ்க்கையே மூச்சு.


வாழ்க்கை தொடர்ஓட்டம் போலத் தொடர்ந்திடும்!

ஆட்கள்தான் மாறுவார் ஓட்டமோ மாறாது!

காட்சிகள் மாறமாற நாளும் இயங்குவார்!

மாற்றமே மாறா தது.


மதுரை பாபாராஜ்

Tuesday, March 29, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!


எடுத்த பணியை முடிக்கும் வரைக்கும்

செயல்திறனை மற்றும்நம் வல்லமை  தன்னை

அயராமல் காப்பதே நாம்காட்டும் ஆற்றல்

செயல்திறனுக்  கென்றுமே வேர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் வீதி விடங்கன்

 நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதன் கவிதை ஆக்கம்!


பகுத்தறிவே துணை!


தேவைகள் இல்லாமல், சிக்கல்கள் இல்லாமல், 

ஈவிரக்கம் இன்றியே புண்படுத்தல் இல்லாமல், 

வாழ்வில்லை! ஆனாலும் நம்மை வழிநடத்தி 

அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பூவுலகில் காண்பதற்கே

உள்ளத்தைப் பக்குவ மாக்கும் பகுத்தறிவு

நம்மிடமே உள்ளதை நம்பு.


மதுரை பாபாராஜ்

அன்பு அவர்களுக்கு நன்றி


அன்பு அவர்களுக்கு நன்றி!


வெயிலின் கடுமை தெரியாமல் வாழ

குளிரவைக்கும் காற்றிங்கே மின்விசிறி மூலம்

சுழன்றடிக்க வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி!

வளமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நா காக்க

 நாகாக்க!


பல்லறம் காப்பதால் நாவிங்கே பாதுகாப்பாய்

உள்ளது! நாள்தோறும் தன்னறம் பின்பற்றிச்

சொல்லறம் காத்தலே நாவுக்கு நன்மைதான்!

இல்லையேல் தீமைதான் செப்பு.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன்சொல்லோவியம்!

கவிதை ஆக்கம்!


எப்போதும் நாமோ பணம்பண்ண மட்டுமே

எச்செயலும் செய்வது கூடாது! மன்பதை

முன்னேற்றம் மற்றும் புதுப்பித்தல்

என்பதிலும்

அக்கறை கொண்டே திருப்திகொள்தல் நல்லது!

மன்பதையில் நாமொரு கூறு.


மதுரை பாபாராஜ்

Monday, March 28, 2022

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


புதிதாய் மலர்கின்ற ஒவ்வொரு நாளும்

புதுப்புது நம்பிக்கை , வாய்ப்பைக்  கொடுக்கும்!

அவற்றைப் பயன்படுத்தப் பார்.


மதுரை பாபாராஜ்

 

மாற்றம்

 வளர்ச்சி மாற்றம்!


சின்னக் குழந்தையாய் நாள்தோறும் கைபிடித்து

வந்தவர்கள் இன்று வளர்ந்துவிட்ட காரணத்தால்

அங்கங்கே கையசைத்துச் செல்கின்றார்  பார்த்தேதான்!

அன்பின் பரிமாற்றம் பார்.


மதுரை பாபாராஜ்

ஐயா தமிழியலன் பேச்சின் சாரம்


ஐயா தமிழியலன் காணொளிப் பேச்சின் சாரம்!


இல்லறம் சிக்கல் நிறைந்ததே! என்றாலும்

இல்ல உறவுகளைக் காக்கின்ற நல்லறத்தில்

தள்ளாமல் ஈடுபட்டே சந்தித்து வாழவேண்டும்!

தள்ளி ஒதுங்குதல் தீது.


மதுரை பாபாராஜ்

: புறநானூறு

பாடல் 193

பாடியவர்: ஓரேருழவர்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக் காஞ்சி


அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,

ஓடி உய்தலும் கூடும்மன்;

ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. 


வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது. அதள் = தோல்பறை எறிதல் = அடித்தல் களர்நிலம். நீண்ட களர்நிலம். வெண்ணிறக் களர்நிலம். களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும். இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான். தட்குதல் = தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும். இதுதான் வாழ்க்கை. மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர். தளைதல் = கட்டுதல் பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை. மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.

 

Sunday, March 27, 2022

ஐயா தமிழியலன் பேச்சுக்கு வாழ்த்து


ஐயா தமிழியலன் காணொளிப் பேச்சுக்கு வாழ்த்து!

இலக்கியநெறிச் சிந்தனைகள்--2

முந்நீர்!

ஊற்றுநீர் ஆற்றுநீர் வேற்றுநீர் என்றிணைந்தக்

கூட்டுநீர் இங்கே கடலென்ற முந்நீராய்த்

தோற்றம் உருவெடுக்கும் என்றேதான் சங்ககாலப்

பாட்டில் அறிவியல் சிந்தனையைச் செந்தமிழர்

காட்டிவிட்டார் என்றே தமிழியலன் பேசியதைக்

கேட்டேன்! மகிழ்ந்தேன்நான் இன்று.


மதுரை பாபாராஜ்

 

கணியன்,தென்காசி

 கம்பராமாயணம்!

கவிதைச்செறிவை எடுத்துக் காட்டியவர் கணியன் கிருஷ்ணன், தென்காசி


இல்லறம் துறந்த நம்பி,

      எம்மனோர்க்காகத் தங்கள்

வில் அறம் துறந்த வீரன்

      தோன்றலால், வேத நல் நூல்

சொல் அறம் துறந்திலாத

      சூரியன் மரபும், தொல்லை

நல் அறம் துறந்தது' என்னா,

     நகை வர நாண்   

     உட்கொண்டான்.....4014


அருமை அருமை


இல்லறம் வில்லறம் சொல்லறம் நல்லறம்

சொல்லாடல் கொண்டே படைத்திட்டார் கம்பரென்றே

தென்காசி போற்றும் கணியன் எடுத்தாண்டார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Saturday, March 26, 2022

நண்பர் எசக்கிராஜன்


அனுப்பியவர் நண்பர் எசக்கிராஜன்

நண்பர் அனுப்பியதற்குக் கவிதை!


ஆகூழை நாமோ பதிவேற்றம் செய்யலாம்!

காலத்தை நாமோ பதிவிறக்கம் செய்தலோ

வாழ்வில் முடியாது! கூகிளால் வாழ்க்கையின்

கேள்வி களுக்கெல்லாம் தீர்வளிக்க ஏலாது!

நாமிங்கே மெய்ப்பொருளைக் காண நுழையவேண்டும்!

வாழ்வின் நிலைமையை ஏற்றுவாழக் கற்கவேண்டும்!

வாழ வளைந்து கொடு.


மதுரை பாபாராஜ்



 

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!


இந்த அழகான காலைப் பொழுதிங்கே 

மென்மேலும் பேரழகைச் சேர்க்கட்டும்! வாழ்க்கையில்

அன்பாய் மகிழ்ச்சியைத் தூவட்டும்! என்றுவாழ்த்தும்

நண்பரின் பண்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

வள்ளுவம் பொதுமுறை


மிகவும் அருமை அய்யா. 


முகவரிகளே மிகவும் தெள்ளந்தெளிவாக மக்களின் போக்கையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லி

அம்மை அப்பனின் சிறப்பை கூறி மனதைக்கவர்கின்றீர்கள்..👏👏👌👌🙏🙏🙏

 எழில் புத்தன்,பெங்களூரு

வசந்தாவின் கருத்து


என்உடலில் கால்சியம் ஊறுவதுபோல் கவிதைகள் ஊறி வருகிறது என்றேன்!

மனைவி வசந்தாவின் கருத்தைக் கவிதை ஆக்கினேன்!


வசந்தாவின் கருத்து:


கால்சியம் உங்கள் உடலிலே ஊறினால்

கால்சியம் கல்லாய் சிறுநீ ரகத்திலே

சேர்ந்தேதான் தொல்லை கொடுக்கும்! கவிதைகள்

ஊறிவந்தால் நல்ல கருத்துகள் சேர்ந்துவரும்!

கால்சியம் ஊறவேண்டாம் நாளும் கவிதைகள்

ஊறட்டும் என்றாள் சிரித்து.


மதுரை பாபாராஜ்

நண்பர்கள் கருத்து

Engengum Kavidhai

Ellamum Kavidai

Jadikketha moodi

Moodiketha Jadi

Fenner venugopal

கம்பர் வீட்டு  தறியும் ( தாரகையும்) கவி பாடும் .

VOV C Anbu


நாங்கள் தங்களை நாளும்

பாராட்ட

நற்கவிதையால் எங்களை

நாளும் இன்புறச் செய்யவும்.

படத்தைப் பார்த்தேன்

புன்னகையால் பூரித்தேன்.

கணியன் கிருஷ்ணன்

தென்காசி

பாபாவின் கவிதை மழையில் நனைவதே

வசந்தமாம் காரணம்

வசந்தாம்மா அவர்களின்

வாழ்த்துச்செரிவால்

என்று உணர்வாய்

கண்டு.

வேலு முனியப்பன்

மதுரை

ஜோடி நல்ல ஜோடிதான் 😀

VOV CR

அதுவும் சரி.

கா.இராமசாமி

பெரியகுளம்


அம்மாவின் கருத்து!

அருமையான கருத்து!

கவிதைகள் ஊறட்டும்!

கவித்தேனாய் மாறட்டும்!

களிப்புடன் படித்து

கவிதையாய் பருகுவோம்!

VOV இமயவரம்பன்

💐🙏🌹🙏🌷🙏🌺🙏🌸🙏🤝

 

கிளி


முயற்சி கூலி தரும்!


கிளிக்குத் தாகம் எடுத்ததாம்

தென்னை மரத்தில் அமர்ந்ததாம்


இளநி தன்னைப் பார்த்ததாம்

அலகால் கொத்தி எடுத்ததாம்


கொத்திக் கொத்தித் துளையிட்டே

இளநி தன்னைத் தலைகீழாய்ப்


பிடித்தே வாயில் வைத்தேதான்

இளநீர் தன்னைக் குடிக்கிறதே!


பார்க்கப் பார்க்க அழகுதான்!

கிளிக்கும் இளநீர் சுவைதானே!


தேவை என்றால் முயற்சிவரும்

முயற்சி திருவினை ஆகிடுமே!


முயன்றால் வாழ்வில் வெற்றியுண்டு!

முயன்றே நாமும் வாழ்ந்திடுவோம்!


மதுரை பாபாராஜ்

 

Friday, March 25, 2022

மூத்தோர் சொல் அமிர்தம்!

 

மூத்தோர் சொல் அமிர்தம்!

பெரியவர்கள் சொல்லைப் புறக்கணிக்காதே!


பெரியவர்கள் சொல்வது நல்லதற் கென்றே

வழிமொழிந்தே ஏற்று நடப்பதே நன்று!

பெரியவர்கள் சொல்லைப் புறக்கணித்து வாழ்ந்தால்

தெளிவின்றித் தத்தளிப்பார் செப்பு.


மதுரை பாபாராஜ்



ஓவியர் அன்பு


ஓவியர் நண்பர் அன்பு அவர்களுக்கு வாழ்த்து!


பண்பாளர் அண்ணாவின் ஓவியத்தை அப்படியே

அன்புவின் கைவண்ணம் தீட்டிய ஆற்றலைக்

கண்குளிரக் கண்டு ரசித்தேன் மகிழ்ந்தேதான்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி இனுப்பியதற்குக் கவிதை வடிவம்!


நேர்மறை எண்ணத்தால் நாளைத் தொடங்குங்கள்!

நாளை முடிக்கின்ற நேரத்தில் மன்னிக்கும்

மாண்பினைக் காட்டுங்கள்! உள்ளம் மகிழ்ச்சியில்

நாளைத் தொடங்கி முடிவில் அகங்குளிரும்!

வாழ்வின் பொருளே இது.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மற்றவர்கள் இங்கே இசைவாக இல்லையென்று

எப்போதும் நீங்கள் கவலைப் படுவதில்

அர்த்தமே இல்லை தெளிவாய் விளக்குமட்டும்!

மற்றவர்கள் தானாய்ப் புரிந்துகொண்டு  நாளும் 

இணங்குவார்கள் என்று கருதுகின்றோம்! ஆனால்

சரியல்ல அந்தநிலை தான்.


மதுரை பாபாராஜ்

Thursday, March 24, 2022

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராசாமி அனுப்பியதற்குக் கவிதை!


கற்றல் மனதில் நிரம்பத்தான் செய்யுமிங்கே!

எப்போதும் காலியாகிப் போகும் நிலையில்லை!

வற்றாத ஊற்றாக உள்ளந்தான் மாறிவிடும்!

கற்பதே வாழ்வின் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் பன்னீர் செல்வம்!


நண்பர் பன்னீர்செல்வம்,

வேளச்சேரி, அனுப்பிய படம்!


சிந்திக்கும் பாப்பாவே! என்னதான் சிந்தனையோ?

உன்னைத்தான் பார்க்காமல்

பெற்றோர் பணிக்களம்

சென்றனரோ? எல்லாம் உனக்காக! மாலையிலே

வந்துசேர்வார் ஆடலாம் பாடலாம் உண்ணலாம்!

இன்றோ இதுதான் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதற்குக் கவிதை:


நிகழ்வது நாளும் அனுபவ மல்ல!

நிகழும் பொழுதில் அணுகுமுறை ஒன்றே

அகத்தில் அனுபவ மாகும் உணர்வோம்!

நிகழ்வை மனதில் நிறுத்து.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


கட்டுப்பா டென்கின்ற மாயையை நீங்களோ

விட்டுவிட்டால் எல்லா நிகழ்வுகளும் அங்கங்கே

தானாக தன்னிடத்தைத் தக்கவைக்கும் அற்புதத்தைக்

கண்டே வியப்பீர்கள் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்


மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் துபாய்பயணம் வாழ்த்து!


24.03.22--28.03.22


உடன்செல்வோர்:

எம்.எம். அப்துல்லா எம்.பி., முதலமைச்சரின் தனி செயலாளர்கள் 


தரணிபுகழ் ஈட்டும் முதல்வராம் ஸ்டாலின்

தளபதி வாழ்க! முயற்சிகளை வென்று

தலைநிமிர்ந்து நாள்தோறும் வாழ்க மகிழ்ந்து!

தளபதி வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியம்!


கவிதை ஆக்கம்!


என்ன விரும்பினாலும் இங்கே நடந்துவிடும்!

கொஞ்சம் செயல்களோ தாமத மாகலாம்!

வந்துவிடும் இங்கே சரியான நேரத்தில்!

உங்கள் முயற்சிகளை நேர்மையாய்

மேற்கொள்க!

வென்றேதான் சாதிக்க லாம்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, March 23, 2022

KRS என்ற நண்பர் தம்பா

 

KRS K.R.SUNDARRAJAN

மாசற்ற நட்பின் விழுது பேராசான் தம்பா!


காரைக்குடியில் 1966 களில்அரும்பிய நட்பு இன்றும் தொடர்கிறது.


காலை வணக்கத்தை நாள்தோறும் கூறுகின்ற

காரைக் குடிதம்பா நட்பில் திளைக்கின்றேன்!

ஆசானாம் தம்பா நலமுடன் வாழ்கவே!

மாசற்ற நட்பின் விழுது.


மதுரை பாபாராஜ்

நண்பர் திரு


நண்பர் திரு அவர்கள் அனுப்பிய ஆங்கிலத்தின் கவிதை ஆக்கம்!


அன்பு மொழிதன்னைப் பார்வையற்றோர் பார்க்கவும்

இங்கே செவித்திறன் அற்றோர்கள் கேட்கவும்

என்றும் முடியும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

வளைந்து கொடு


சூழ்நிலைக்கு வளைந்துகொடு!


வைபவ் வளாகம்!


21.03.22 இரவு 10.00 மணி


ஒற்றை மரங்களோ அங்கங்கே நின்றிருக்க

சுற்றிலும் உட்கார  கல்லிருக்கை போட்டிருக்க

உட்கார்ந்தேன் கல்லிருக்கை தன்னிலே! மின்தூக்கி

பார்த்தேன் வசந்தா வரவில்லை! 

ஆனாலும்

மாடிப் படியில் இறங்கிவந்தாள்! 

போயழைத்தேன்!

ஏனோதான் மின்தூக்கி அங்கே இயங்கவில்லை!

சூழ்நிலையின் சொற்படிதான் நாம்.


மதுரை பாபாராஜ்


 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை ஆக்கம்!


வெளிப்படைத் தன்மை வளைந்து கொடுத்து

நெளிவு சுளிவாய் நடத்தல் குணங்கள்

இலக்கை அடைய அடிப்படை யாகும்!

இவைகளோ மாற்றத்தை ஏற்கும் மனதின்

நிலைக்கு வழிவகுக்கும்! ஏற்காத தாலே

உருவாகும் உள்ள உளைச்சலை விட்டே

விடுதலை காணவைக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, March 22, 2022

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியது:


கவிதை ஆக்கம்!


அவரவர் ஆற்றல்  தனிச்சிறப்பே!


கத்தியோ கூர்மைதான் ஆனால் மரத்தையோ

வெட்ட முடியாது! கோடர வெட்டுகின்ற

பக்குவம் கொண்டதே! ஆனால் தலைமுடியை

வெட்ட முடியாது! ஆற்றலுக் கேற்றவாறு

எல்லோரும் முக்கியந் தான்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்

 


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் கவிதை ஆக்கம்!


தனிநபர் சார்பென்ற ஒன்றில்லை நெஞ்சே!

பணிநிமித்தம் மற்றும் செயல்முறை  சார்ந்து

மனிதருக்கு நாம்கொடுக்கும் முக்கியம் என்றே

மனதால் புரிந்துகொண்டால் உங்கள் இலக்கை

அடைய உதவும்! உணர்.


மதுரை பாபாராஜ்

Monday, March 21, 2022

பத்மஸ்ரீ சிற்பி ஐயாவுக்கு வாழ்த்து



 

இந்தியக் குடியரசு தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கிய விருது!

பத்ம விருதாளர் சிற்பி ஐயாவுக்கு வாழ்த்து!

ஆழ்ந்த புலமை, புதுமை,எளிமையும்
சூழ்ந்த இலக்கிய ஆளுமைதான் சிற்பியாவார்!
வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்த்தி வணங்குகிறேன்!
வாழ்கபல் லாண்டு சிறந்து.

ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்

தம்பி Dr. இராம்குமாருக்கு வாழ்த்து


தம்பி Dr. இராம்குமாருக்கு வாழ்த்து!

21.03.22

படிப்படியாய் எல்லாப் படிகளையும் வென்றே

படிப்படியாய் ஏறிச் சிகரத்தைத் தொட்டு

நிறைவுடனே வாழ்கின்ற ராம்குமார் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

உலகக்கவிதைநாள் வாழ்த்து


உலகக் கவிதைநாள் வாழ்த்து!


21.03.22


உள்ளத் துணர்ச்சியைத் தெள்ளத் தெளிவாக

அள்ளி வழங்கும் கலையே கவிதையாம்!

எல்லைகள் தாண்டி இதயத்தை ஈர்க்கின்ற

சொல்லே கவிதையாம்! செப்பு.


கருத்தை விதைப்பதே என்றும் கவிதை!

வரம்புக்குள் நாளும் படைக்கலாம்! தாண்டி

வரம்புமீறி நின்று படைக்கலாம்!ஆனால்

கவித்துவம் ஏந்தும் கவி.


தென்றலாய் நாளும் வருடும் கவிதையுண்டு!

வன்புயலாய்ச் சீறவைத்துப் பார்க்கும்

கவிதையுண்டு!

பாவினங்கள் வாளின் முனையினைக் காட்டிலும்

கூராகும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


கவிதை ஆக்கம்!


மறுவிநி யோகம் மறுசீ ரமைப்பு

சிறிதளவே நம்முடைய திட்டத்தில் 

செய்ய

முடிந்தாலும் நம்மிலக்கைச் சாதிக்க

லாம்நாம்!

அறைகூவ லாகவே தோன்றினாலும் நன்றே!

முறையாக சாதித்துக் காட்டு.


மதுரை பாபாராஜ்

 

கவிதைநாள் வாழ்த்து


கவிதைநாள் வாழ்த்து!

21.03.22

பெறுநர்: 

கவிஞர் முனியப்பன்


கவிஞர் முனியப்பன் உள்ளம் பொழியும்

கவிதைநாள் வாழ்த்தில் மகிழ்ந்தேன்! திளைத்தேன்!

கவிதைபோல் வாழ்க நிலைத்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, March 20, 2022

நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து


நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து.


அழகான கிண்ணத்தில் வண்ண மலர்கள்

உளங்கனிந்த அன்பின் வணக்கத்தைச் சொல்லும்

தரமான நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

வாழ்க்கைத்தேர்



வாழ்க்கைத்தேர்!

இப்படித்தான் வாழவேண்டும் எனறேதான் வாழ்ந்தாலும்

இப்படியும் அப்படியும் வாழ்க்கைத்தேர் 

ஓடித்தான்

எப்படியோ இங்கே நிலைவந்து சேர்வதற்குள்

அப்பப்பா! சோதனைதான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

முள்மேல் விழுந்த துணி

 முள்மேல் விழுந்த பட்டுத்துணி!


சிக்கல்கள் முள்மேல் விழுந்த விலையுயர்ந்த

பட்டுத் துணிபோல! பார்த்தே எடுக்கவேண்டும்!

சற்றே பிசகினால் முள்ளோ விரல்களைக்

குத்திக் கிழித்துவிடும் இல்லை துணிகிழியும்!

சற்றே பொறுமையாய்ப் பார்த்து கவனித்தே

சிக்கலுக்குத் தீர்வுகண்டால் நன்று.


மதுரை பாபாராஜ்

காலம் புகட்டும்


 காலம் புகட்டும் பாடம்!

சொல்லித் திருந்தலாம்! பட்டுத் திருந்தலாம்!

சொல்லியும் பட்டும் திருந்தவில்லை என்றாலோ

துல்லியமாய்க் காலம் புகட்டிவிடும் பாடத்தால்!

உள்ளத்தைப் பண்படுத்தும்! சொல்.

மதுரை பாபாராஜ்

Saturday, March 19, 2022

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!

மலரினங்கள் தோரணமாய்த் தொங்கும் அழகும்

புலர்காலை நேர வணக்கமும் நட்பை

வழங்கிய பண்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்!


கவிதை ஆக்கம்!


நீங்கள் இதனைப் படிக்கவும்! இந்தநாளில்

அன்பு மனங்களைக் கொண்டோர் வருவார்கள்!

புன்னகையும் வாழ்வில் எதிர்பாரா ஆசிகளும்

இந்தநாளில் தேடிவரும் சொல்.

மதுரை பாபாராஜ்

 

வாழ்க்கைப் படங்கள்


படங்களுக்குக் கவிதை!


வாழ்க்கை கடந்துவந்த பாதை நிகழ்வுகளை

வாழ்வில் நினைக்கவைக்கும்  தோற்றப் படங்களின்

காட்சி அணிவகுப்பு! காண்பதே இன்பந்தான்!

தோற்றத்தின் மாற்றமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

இவையெல்லாம் படங்கள்

ஆனாலும்  நம்மைத் தூக்கிச் சுமந்த வாழ்க்கைப்

பாடங்கள்.எப்படி இருந்தோம் என்பது படம்

எப்படி இருந்துகொண்டு

இருக்கிறோம் என்பது

பாடம்.தாங்கள் அனுப்பி

உள்ளது படமல்ல.இப்படி

இருங்கள் என்று சொல்லும்

பாடம்...பாபா ஐயா.

கணியன் கிருஷ்ணன்

தென்காசி


 

Friday, March 18, 2022

நண்பர் திருச்சந்திரன்


நண்பர் திருச்சந்திரன் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை வடிவம்!


எப்போது நீங்களிங்கே யாரையும் சாராமல் 

இவ்வுலகில் வாழ்வதற்கு கற்றுவிட் டீர்களோ

எத்தகைய சூழலிலும் நீங்களிங்கே வாழலாம்!

இப்படி வாழ்வதே வாழ்வு.




மதுரை பாபாராஜ்

 

விருந்தோம்பல்

 விருந்தோம்பல்!


அழையா விருந்தாளி வந்தாலும் கூட

வரவேற்கும் பண்பே விருந்தோம்பல் பண்பு!

பகைவரையும் நண்பராக்கும் இப்பண்பே நம்மை

அகங்குளிர வைக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

அழலில் புழு

 அழலில் புழு!


சிலுவையில் என்னை அறைந்துவிட்ட கோலம்!

அழுதழுது வாழ்க்கையே புண்பட்ட கோலம்!

எழுகடலும் என்னைப் புரட்டிவிட்ட கோலம்!

அழலில் புழுவானேன் சாற்று.


மதுரை பாபாராஜ்


Thursday, March 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை வடிவம்!


நம்பிக்கை கொள்தல் அருமை உணர்வாகும்!

நம்பிக்கை தன்னை வளர்ப்பது  என்பதோ

என்றும் நிலையான மற்றும் தொடர்ச்சியான

பண்பட்ட வாழ்வின் முயற்சியாகும்! வாழ்க்கையில்

என்றும் சிறிய பணியில் தொடங்கவேண்டும்!

பின்னர் வரம்பை விரிவாக்கம் செய்யவேண்டும்!

என்றும் சிறப்பைத் தரும்


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக்

கவிதை ஆக்கம்!


அறைகூவல் வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டும்!

அதையே சமாளித்து வெற்றியைக் கண்டால்

உலகியல் வாழ்வு பொருளுள்ள தாகும்!

முறையாகச் சந்தித்து வாழ்.

மதுரை பாபாராஜ்

 

பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா


பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை வணங்குகிறேன்!


கம்பன்  இலக்கியத்தைக் கம்பன் கழகத்தில்

செந்தமிழ்த் தீங்கனிச்  சாறாய்ப் பிழிந்தளித்தே

என்றுமிங்கே பாமரரும் கேட்டு மகிழ்கின்ற

வண்ணமிங்கே பேசினார் வாழ்த்து.


பட்டிமன்ற பாப்பையா தூங்கா நகரத்தின்

ஒப்பற்ற பண்பாளர்! பண்பாட்டுக் காவலர்!

நற்றமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வர்

பேராசான்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

ஆதித்யா அம்மா


ஆதித்யா அம்மா அனுப்பியதற்குக் கவிதை!

திட்டமும் இலக்கும்


திட்டம் சரியில்லை என்றால் திருத்தலாம்

திட்டத்தை! ஆனால் இலக்கினை மாற்றவேண்டாம்!

திட்டத்தை மாற்றிச் செயல்படுத்து! வெற்றியோ

நிச்சயம்! சாதிப்போம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை வடிவம்!


உள்ளம் குறுக்கு வழிதன்னை என்றுமே

துள்ளித்தான் நாடும்! சிலநேரம் சாக்குபோக்கை

அள்ளித்தான் வீசும்! அவற்றைநாம் கட்டுக்குள்

வைக்கவேண்டும்! நம்முடைய வாழ்நாளைச் சாக்குபோக்கு

சொல்லாமல் வாழவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, March 16, 2022

நண்பர் எசக்கிராஜன்



 நண்பர் எசக்கிராஜன் அனுப்பியது!


கவிதை வடிவில்!


சிக்கல்கள் நீண்டநாள் தங்காது! வாழ்க்கையில்

வந்தே அனுபவ நூலிலே கையெழுத்தை

இட்டுவிட்டுச் சென்றுவிடும் பாடம் புகட்டித்தான்!

இங்கே அனுபவமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

தம்பி கெஜராஜுக்கு வாழ்த்து


தம்பி கெஜராஜ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்து!


புரட்சிக் கருத்துகளைப் போகிற போக்கில்

தரமாகக் காட்டியது தோழர்! படந்தான்!

அருமை நடிப்பில் இளவல் கெஜராஜ்

பெருமை உயரும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சில.லோவியம் தமிழாக்கக் கவிதை!


முன்னேற ஆற்றல் திறன்களுடன் உள்ளபோது

சந்தேகித் தல்மற்றும் சந்தேகம் உள்ளத்தில்

கொண்டே அலைவதேன்? சாதனை நாட்டுங்கள்!

முன்னேற்றம் என்றும் உனது.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, March 15, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச்சொல்லோவியம்!

உங்கள் மனப்பாங்கில் நேர்மறை மாற்றங்கள்
உண்டாக்கி நாளும் செயல்நிலை மேம்பாடு, 
அன்றாடம் போட்டிகளைச்  சந்தித்தல் மற்றுமிங்கே
புத்தம் புதிய தரங்களை நிர்ணயித்தல்
போன்றவற்றை மேற்கொள்ள எண்ணுவதை நீங்கள்
உடனடி யாய்ச்செய்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

Monday, March 14, 2022

அப்பா


 

அப்பா!

அப்பா சுமைகளோ வேறு விதங்கள்தான்!

எப்போதும் தன்கடமை தன்னைத் தவறாமல்

அப்பா பணிக்களத்தில் காணுகின்ற இன்பதுன்பம்

எல்லாம் குடும்பத்திற் கே!


வாழ்க்கையில் தென்றல் வருடுகின்ற நேரத்தில்

சார்ந்திருக்கும் தன்குடும்பம் கண்டே சிரித்திருப்பார்!

வாழ்க்கையில் வன்புயல் வீசுகின்ற நேரத்தில் 

சார்ந்திருக்கும் தன்குடும்பம் கண்டே மனத்திற்குள்

சோர்வும்  புறவெளியில் புன்சிரிப்பும் ஏந்துவார்!

ஏற்பார் பலவேடம் இங்கு.


மதுரை பாபாராஜ்


Vovkaniankrishnan:

குடி செயல் வகைக்காக

அதாவது குடும்பத்தை உயர்த்துவதற்காக குடும்பத்

தலைமைப் பொறுப்பில்

இருக்கும் அப்பாவின்

செயல்பாடுகள் இருக்கிறதே அதுதான்

அப்பப்பா!!!


பாபாவின் பாடலோ

அடேங்கப்பா! !!

அம்மா


 அம்மா!


பத்துமாதம் மட்டுமா வாழ்வில் சுமக்கின்றாள்?

எப்போதும் ஏதோ ஒருகோலம் ஏற்றேதான்

எப்படியும் நாளும் சுமக்கின்றாள் அம்மாதான்!

இல்லறத்தின் ஆணிவேர் தாய்.


விட்டுக் கொடுக்கும் தியாக மனப்பான்மை,

சுற்றம் சிறக்கவைக்கும் பக்குவப் பண்புகள்,

தன்னலத்தை விட்டே  குடும்பம் தலைநிமிர

என்றும் துணையாவாள் தாய்.


மதுரை பாபாராஜ்

VOV தீத்தாரப்பன்

தாய் ஒரு சுமைதாங்கி என்பதைக் காட்சிப் படுத்திவிட்டீர்கள்!  வள்ளுவரும் தாயைச் சொல்லும் இடங்களிலெல்லாம் ( குறள் எண்கள்: 69,656,923,1047) எவ்வளவு உயர்வு கொடுக்கிறார் என்பதைப் பார்க்கிறோம்! ஒருவர் துறவி ஆகிவிட்டால் வயதில் மூத்தோரும் தந்தையும் கூட அவர் காலில் விழவேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது! ஆனால் அந்தத் துறவி தன் தாயின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்ற சிறப்பு தாய்க்கு இருக்கிறது! பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் தங்கள் தாய் இறந்தபோது இறுதி மரியாதை செய்தனர்!