Monday, March 21, 2022

உலகக்கவிதைநாள் வாழ்த்து


உலகக் கவிதைநாள் வாழ்த்து!


21.03.22


உள்ளத் துணர்ச்சியைத் தெள்ளத் தெளிவாக

அள்ளி வழங்கும் கலையே கவிதையாம்!

எல்லைகள் தாண்டி இதயத்தை ஈர்க்கின்ற

சொல்லே கவிதையாம்! செப்பு.


கருத்தை விதைப்பதே என்றும் கவிதை!

வரம்புக்குள் நாளும் படைக்கலாம்! தாண்டி

வரம்புமீறி நின்று படைக்கலாம்!ஆனால்

கவித்துவம் ஏந்தும் கவி.


தென்றலாய் நாளும் வருடும் கவிதையுண்டு!

வன்புயலாய்ச் சீறவைத்துப் பார்க்கும்

கவிதையுண்டு!

பாவினங்கள் வாளின் முனையினைக் காட்டிலும்

கூராகும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home