Monday, March 28, 2022

ஐயா தமிழியலன் பேச்சின் சாரம்


ஐயா தமிழியலன் காணொளிப் பேச்சின் சாரம்!


இல்லறம் சிக்கல் நிறைந்ததே! என்றாலும்

இல்ல உறவுகளைக் காக்கின்ற நல்லறத்தில்

தள்ளாமல் ஈடுபட்டே சந்தித்து வாழவேண்டும்!

தள்ளி ஒதுங்குதல் தீது.


மதுரை பாபாராஜ்

: புறநானூறு

பாடல் 193

பாடியவர்: ஓரேருழவர்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக் காஞ்சி


அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,

ஓடி உய்தலும் கூடும்மன்;

ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. 


வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது. அதள் = தோல்பறை எறிதல் = அடித்தல் களர்நிலம். நீண்ட களர்நிலம். வெண்ணிறக் களர்நிலம். களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும். இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான். தட்குதல் = தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும். இதுதான் வாழ்க்கை. மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர். தளைதல் = கட்டுதல் பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை. மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.

 

0 Comments:

Post a Comment

<< Home