Saturday, March 26, 2022

வசந்தாவின் கருத்து


என்உடலில் கால்சியம் ஊறுவதுபோல் கவிதைகள் ஊறி வருகிறது என்றேன்!

மனைவி வசந்தாவின் கருத்தைக் கவிதை ஆக்கினேன்!


வசந்தாவின் கருத்து:


கால்சியம் உங்கள் உடலிலே ஊறினால்

கால்சியம் கல்லாய் சிறுநீ ரகத்திலே

சேர்ந்தேதான் தொல்லை கொடுக்கும்! கவிதைகள்

ஊறிவந்தால் நல்ல கருத்துகள் சேர்ந்துவரும்!

கால்சியம் ஊறவேண்டாம் நாளும் கவிதைகள்

ஊறட்டும் என்றாள் சிரித்து.


மதுரை பாபாராஜ்

நண்பர்கள் கருத்து

Engengum Kavidhai

Ellamum Kavidai

Jadikketha moodi

Moodiketha Jadi

Fenner venugopal

கம்பர் வீட்டு  தறியும் ( தாரகையும்) கவி பாடும் .

VOV C Anbu


நாங்கள் தங்களை நாளும்

பாராட்ட

நற்கவிதையால் எங்களை

நாளும் இன்புறச் செய்யவும்.

படத்தைப் பார்த்தேன்

புன்னகையால் பூரித்தேன்.

கணியன் கிருஷ்ணன்

தென்காசி

பாபாவின் கவிதை மழையில் நனைவதே

வசந்தமாம் காரணம்

வசந்தாம்மா அவர்களின்

வாழ்த்துச்செரிவால்

என்று உணர்வாய்

கண்டு.

வேலு முனியப்பன்

மதுரை

ஜோடி நல்ல ஜோடிதான் 😀

VOV CR

அதுவும் சரி.

கா.இராமசாமி

பெரியகுளம்


அம்மாவின் கருத்து!

அருமையான கருத்து!

கவிதைகள் ஊறட்டும்!

கவித்தேனாய் மாறட்டும்!

களிப்புடன் படித்து

கவிதையாய் பருகுவோம்!

VOV இமயவரம்பன்

💐🙏🌹🙏🌷🙏🌺🙏🌸🙏🤝

 

0 Comments:

Post a Comment

<< Home