Sunday, March 27, 2022

ஐயா தமிழியலன் பேச்சுக்கு வாழ்த்து


ஐயா தமிழியலன் காணொளிப் பேச்சுக்கு வாழ்த்து!

இலக்கியநெறிச் சிந்தனைகள்--2

முந்நீர்!

ஊற்றுநீர் ஆற்றுநீர் வேற்றுநீர் என்றிணைந்தக்

கூட்டுநீர் இங்கே கடலென்ற முந்நீராய்த்

தோற்றம் உருவெடுக்கும் என்றேதான் சங்ககாலப்

பாட்டில் அறிவியல் சிந்தனையைச் செந்தமிழர்

காட்டிவிட்டார் என்றே தமிழியலன் பேசியதைக்

கேட்டேன்! மகிழ்ந்தேன்நான் இன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home