Thursday, September 30, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


என்னென்ன வாங்கலாம் என்பதைக் காட்டிலும்

என்ன கொடுக்கலாம் என்பதைச் சிந்திப்போம்!

நன்றி மறவாதே வாங்கி மகிழ்ந்ததற்கு!

நன்றிசொல் உன்னால் கொடுக்க முடிந்ததற்கு!

என்றும் அதையோ நினைக்காமல் வாழவேண்டும்!

நன்றி மறக்காதே நீ.


மதுரை பாபாராஜ்

 

பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


யானையின் தும்பிக்கை வெண்மலரை ஏந்திவந்துக்

காலை வணக்கத்தைக் கூறும் அழகுகண்டேன்!

காலை மடக்கி அமர்ந்தேதான் பக்தியுடன்

தாள்பணியும் ஐந்தறிவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

CONGRATS! ALL THE BEST!


CONGRATS! ALL THE BEST!


NIKHIL ! SUCCESS IS YOURS!


First board exam for Xth std

Your diligence and relentless efforts

And concentraion with sincere involvement

Will fetch fruitful rich dividends!

Your glittering performance will be commended!

Guidance of your Teachers and 

Blessings of your parents are 

Guiding stars for your success!

Nikhil! This is your first jwel in your

Academic crown! 

More jewels are awaiting in the future!

Congrats! All the best! Success is yours!


With blessings

Grand father

Madurai Babaraj

Grand Mother

Vasantha

 

Wednesday, September 29, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


எந்த உயரம் பறந்தாலும் வேர்களை

என்றும் மறக்காதே! உன்குடும்பம் உன்னுடைய

நண்பர்கள் சுற்றமுடன் தங்கிப் பழகவேண்டும்!

உன்னுடைய சாதனையைத் தூண்டுகின்ற ஊக்கத்தின்

சின்னம் இவர்களே! நம்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் கவிஞர் இராஜேந்திர பாபு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் கவிஞர் இராஜேந்திர பாபு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


உன்வாழ்க்கை நூலின் படைப்பாளி  நீதானே!

அந்தநூலை மாற்ற, திருத்திட அஞ்சாதே!

உன்வாழ்க்கை உந்தன் உருவாக்கம்! நேர்மறைச்

சிந்தனைகள் என்றுமே நன்று.


மதுரை பாபாராஜ்

 

பிடிவாதம் வேண்டாம்!


என் முயலுக்கு மூன்றுகால்தான்!


பிடிவாதம் வேண்டாம்!


சொன்னாலும் கேட்காமல் தன்னால் புரியாமல்

தன்னலப் போக்கிலே வாழ்பவர்கள் வாழ்க்கையில்

ஒன்றும் தெரியாமல் தங்கள் முயலுக்கோ

என்றுமே மூன்றுகால் என்று பிடிவாதம்

கொண்டவர்கள் என்றுதான் கூறு.


மதுரை பாபாராஜ்

 

6.ருக்மணி லட்சுமிபதி


6. ருக்மணி லட்சுமிபதி


1892--1951


விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம்!

குழந்தை திருமணம் தந்தை விருப்பம்!

மறுத்தார் உறவினர்! பள்ளிக்குச் சென்றார்!

படித்தார் உயர்வகுப்பு தான்.


மூன்று குழந்தைக்குத் தந்தை! மனைவியில்லை!

ஆனாலும் காதலித்து லட்சுமிபதி என்பவரை

ஏற்றார் கணவராக! பல்வேறு போராட்டம்

நாட்டு விடுதலைக் குத்தான்.


சென்னையின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார்!

பண்பட்டார்! அன்று துணைசபா நாயகராய்

பக்குவமாய் தன்கடமை செய்தார்! தன்னுடைய

ஐம்பத்து ஒன்பதாம் ஆண்டில் இறந்துவிட்டார்!

என்றுமே வாழ்வார் நிலைத்து.


மதுரை பாபாராஜ்







 

பழமொழிக்குக் கவிதை!

 பழமொழிக்குக் கவிதை!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!


உள்ளத்தில் உள்ளதைச் சொல்லில் உரைக்கவேண்டும்!

உள்ளத்தில் ஒன்றாக சொற்களில் வேறானால்

தெள்ளத் தெளிவாய் அகத்தின் அழகினைத்

துள்ளி முகங்காட்டும் செப்பு.


மதுரை பாபாராஜ்

Tuesday, September 28, 2021

ஓவியர் செல்வி திவ்யா மொகலீஸ்வரனுக்கு வாழ்த்து!


ஓவியர் செல்வி திவ்யா மொகலீஸ்வரனுக்கு வாழ்த்து!


டாம் & ஜெர்ரி


ஓடித் துரத்துகின்ற பூனை எலிப்படத்தை

நாடி வரைந்திருக்கும் திவ்யாவின் ஆற்றலுக்குக்

கோடிகோடி வாழ்த்துகள் கூறி மகிழ்கின்றேன்!

பார்போற்ற வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

A to Z verse.


Daily activities of our Honourable  CM M.K.Stalin mingling with public and helping without hesitation prompted me to write 

A to Z verse.


HONOUABLE CM STALIN A TO Z


Act of Benevolent Care Daily Efficiently For


General public with Helping mind Integrated


automatically Join hands with Kindness 


glittering with Love , Mercy a Nonpareil 


attitude without Ostentation but with Pure 


Quality  Rare Service mind True and Unique


Vibrant Wise Xenial and Yare with Zest 


reverberate the name of HONOURABLE CM M.K. STALIN everywhere.


Madurai Babaraj

 

Monday, September 27, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


அற்புதங்கள் வாழ்வில் நடக்குமென்றே எண்ணாதே!

எப்போதும் கால இடைவெளியில்

உன்னுடைய

உற்ற இலக்குநோக்கி நன்கு நடைபோடு!

வெற்றிபெற்று சாதிக்க வாழ்வில் அதுபோதும்!

எப்போதும் இங்கே முயற்சிகளை மேற்கொள்வோம்!

வெற்றிவந்து சேருமென்றே நம்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.


பறவையே!

இன்றைய கவிதை உனக்கு.


கோபத்தைத் தவிர்!


தோன்றி மறையும் குமிழிபோல கோபமும்

தோன்றி மறைந்தால் கெடுதியில்லை!

கோபமோ

ஊன்றி நிலைத்துக் கொதிக்கும் நிலையெடுக்கும்

பாங்கைத் தவிர்க்கப் பழகு.


மதுரை பாபாராஜ்


 

இறக்க முடியாத சுமை!


இறக்க முடியாத சுமை!


சும்மாட்டில் வைத்திருந்த என்சுமையைத் திண்ணையிலே

அம்மாடி என்றே இறக்கிவைத்தேன்! ஆனாலும்

என்மனத்தை வாட்டி வதைக்கும் சுமைகளை

எங்கே இறக்கிவைக்க? சொல்.


மதுரை பாபாராஜ்


 

.5.அஞ்சலை அம்மாள்


பெண்ணே பேராற்றல் நூல்

5. அஞ்சலை அம்மாள்


விடுதலைப் போரின் முதல்பெண்போ ராளி!

கணவருடன் பங்கெடு்த்தார்! அஞ்சலையின் வீரம்

மணக்கின்ற வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால்

மனமே சிலிர்க்கிறது இங்கு.

இந்தியர்மேல்  வன்கொடுமை ஏவினான் கர்னல்நீல்!

சென்னையில் வைத்த அவன்சிலையை நீக்கவே

தன்மகளாம் ஒன்பது வயதான லீலாவும்

பங்கெடுக்கப் போராடி நின்றார்! சிறைசென்றார்!

தன்மகளோ நான்காண்டு காலம் சிறைக்கொடுமை

புன்னகைத்தே ஏற்றார்! மகாத்மா மகிழ்ந்தேதான்

அன்புடன் வார்தாவில் தொண்டாற்ற

சேர்த்தாராம்!

பண்பாளர் வாழ்கவே நீடு.

மகப்பேறு பார்க்க சிறைவிட்டே வந்து குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறைக்குள்

அடைபட்டார்! அக்கொடுமை ஏற்று

மதுரை பாபாராஜ்





 

மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மற்றவரைக் காட்டிலும் புத்திசாலி யாகவேண்டாம்!

மற்றவரைக் காட்டிலும் நல்லொழுக்கம் உள்ளவராய்

இத்தரணி வாழ்வில் இருந்தாலே போதுமே!

எப்போதும் ஏற்றங்கள் உண்டு.


மதுரை பாபாராஜ்

 

Attitude dilutes the problems!

 Attitude dilutes the problems!


Problems may come and haunt

We have to face tactfully!

Jumping into conclusions 

lead to further chaos

Blocking the entrance and exit

Arresting within the shell!


Every problem has its solution

Embedded within itself!

Our patience and attitude

Change the situations and

Bring forth solutions!


Till such time don't make mess!

Don't get agitated with anxiety!

Shed your negative attitude!

Nurture your positive attitude!


Negative attitude 

Aggravates the problem!

Positive Attitude 

Dilutes the problem!

Controls the situation

Shows way to solution!

At last peace of mind

Emerges elegantly!


Madurai Babaraj

From DR.Valayapatti KanniappanMadurai

Beautiful poems tell how to balance between the problems And solutions. Nice.





Sunday, September 26, 2021

மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்:


சுடச்சுடக் கோப்பைக் குளம்பி சுவைத்தேன்!

மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இந்நாள்

அகத்தில் நிறைந்திட வாழ்த்தும் உணர்ந்தேன்!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Every cloud has a silver lining!


பழமொழிக்குக் கவிதை!

Every cloud has a silver lining!

அனைத்தும் இழந்தேன்! அடிமட்டம் சென்றேன்!

தினையளவு நம்பிக்கை உள்ளத்தில் தோன்ற

பனையளவு ஊக்கம் உயர்த்த நிமிர்ந்தேன்!

அனைத்தையும் பெற்றேன் உழைத்து.


மதுரை பாபாராஜ்

 

எல்லை கடந்த நட்பு கண்ணனின் நட்பு!


எல்லை கடந்த நட்பு கண்ணனின் நட்பு!


சௌதி அரேபியா சென்றாலும் நட்பினை

 ஔவைத் தமிழ்போல் வளர்க்கின்ற கண்ணனின் 

அன்பில் திளைக்கின்றேன் நாளும் மகிழ்ச்சியுடன்!

நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

பழமொழிக்குக் கவிதை!

 பழமொழிக்குக் கவிதை!


ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூ சூடிநிற்க

உள்ளே இருக்குமாம் ஈருகளும் பேன்களுமே!

நல்லழகுப் பெட்டகமாய் மேனி தெரிந்தாலும்

உள்ளேயோ வக்கிர எண்ணங்கள் ஊற்றெடுக்கும்

கள்ளமனம் கொண்டதுபோ லாம்.


மதுரை பாபாராஜ்



சுமையெல்லாம் என்னோடு!


சுமையெல்லாம் என்னோடு!


என் சுமையை நான்தானே சுமக்கவேண்டும்!

எப்படித்தான் என்றாலும் நான்தானே வாழவேண்டும்!


அழுதாலும் புரண்டாலும் நிலைமைதான் மாறுமா?

யாரென்ன சொன்னாலும் ஆறுதல்தான் கிடைக்குமா?


எல்லோரும் வருவார்கள் ஏதேதோ சொல்வார்கள்?

சொல்வதெல்லாம் கேட்டாலும்  தீருமா

சிக்கல்கள்?


என்னென்ன காரணங்கள் எப்படித்தான் சொன்னாலும்

என்றிங்கே நிலைமாற?

என்றிங்கே அமைதிகாண?


வேதனையும் சோதனையும் 

தொடர்கதையாய் மாறிவர

ஆழியலை அடங்கிவிட்ட

நிலைபோல ஆகிவிட்டேன்!


காற்றடிக்கும் திசையெல்லாம்

காகிதமாய் மாறிவிட்டேன்!

பறக்கின்றேன் பறக்கின்றேன்

திசையறியாப் பறவைபோல்!


மதுரை பாபாராஜ்




 

மாண்புமிகு மேனாள் பிரதம அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து! 26.09.21


மாண்புமிகு மேனாள் பிரதம அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

26.09.21

இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக

பன்முக ஆற்றல் களத்தில் புகழ்மிளிரும்

மன்மோகன் சிங்கின் வியத்தகு சாதனைகள்

இன்றும் வரலாறாய் உள்ளன வாழ்த்துவோம்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

Saturday, September 25, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

பறவையே! இன்றைய குறளும் விளக்கமும் கேள்!

குறள் 271:

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.


மற்றவர்க்கு நல்லொழுக்கம் கூறிவிட்டுத் தானிங்கே

பற்றுவது தீயொழுக்கம் ஆகிவிட்டால் நம்முள்ளே

சுற்றிவரும் ஐந்துபூ தங்களும் கைகொட்டித்

தங்களுக்குள் கேலிபண்ணும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


உன்னுடைய தோல்விமேல் உள்ள பயத்தைவிட

உன்னுடைய வெற்றிமேல் கொண்டுள்ள நம்பிக்கை

என்றும் மகத்தாக வாழ்வில்

இருக்கவேண்டும்!

அந்தமனம் வெற்றிக்கு வித்து.


மதுரை பாபாராஜ்

 

மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


வெற்றிதோல்வி காட்டுகின்ற தேர்வல்ல! போட்டியல்ல!

உன்மீது காட்டுகின்ற அக்கறையைக் காட்டிலும்

மற்றவர்மேல் காட்டுகின்ற அக்கறை 

மேலான

ஒன்றென்று காட்டும் உணர்வே உறவாகும்!

அன்பான அக்கறையைக் காட்டு.


மதுரை பாபாராஜ்

 

அனுசரித்தால் நல்லது!


அனுசரித்தால் நல்லது!


வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியைக்

கம்பால் உடைப்பது போல நிலைமைகள்

நன்றாக மாறிவரும் நேரத்தில் ஒன்றிருக்க

ஒன்றினைச் செய்தால் அழிவு.


மதுரை பாபாராஜ்

 

Friday, September 24, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


பாதிக்கும் வண்ணத்தில் திட்டமிடல் 

மற்றுமிங்கே

சாதிக்கும் நேரம் சிறந்ததை நாட்டுதல்

போற்றுகின்ற வெற்றியைக் காண்பதற்கு நாள்தோறும்

ஏற்ற விதியெனினும் நல்லதை எண்ணியே

ஆற்றலை மேம்படுத்தி வாழ்வதும் வெற்றியை

ஈட்டச் சிறந்தவழி தான்.


மதுரை பாபாராஜ்

 

அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி திருவாசகம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு வாழ்த்து!


அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி திருவாசகம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு வாழ்த்து!


அன்னப் பறவையோ தாமரையைக் கவ்விநிற்க

கண்கவரும் சித்திரத்தை அம்மாவின் கைவண்ணம்

கொண்டுவந்த காட்சியில் மெய்மறந்தோம் நாங்கள்தான்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மக்களுக்கு என்றும் அறிவுரை தேவையில்லை!

பற்ற கரமும்,கவனிக்க காதுகளும்,

முற்றும் புரிந்துகொண்டு வாழும் இதயமும்

மக்களுக்கு இங்கே சிலநேரம் தேவையாகும்!

அக்கறையே வாழ்க்கையின் தூது.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம் தமிழாக்கம்!


சாதிக்க எண்ணி மனதில் அதிகமான

சோதனைகளை ஏற்றுதல்

தேவையற்ற வேலையாம்!

ஒன்றை ஒருநேரம் செய்யவேண்டும்! சாதனையை

நன்கு தொகுத்தால் பயணம் மகிழ்ச்சியாக

இங்கே தொடரலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

மகானுக்கு வாழ்த்துகள்


மகானுக்கு வாழ்த்துகள்


பண்பட்ட ஆற்றல் நடிகராம் விக்ரமுடன்

அன்பு மகனாம் துருவும் மகான்படத்தில்

நன்றாய் நடித்துள்ளப் பாங்கினைக் கார்த்திக்தான்

உண்மைத் தெளிவுடன் சொல்லி இருக்கின்றார்!

இந்தப் படத்தினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Thursday, September 23, 2021

சுமைதாங்கி/ இடிதாங்கி!


சுமைதாங்கி/ இடிதாங்கி!


சுமைதாங்கி யாகத்தான் வாழ்ந்தேன்! சுமைகள்

உளைச்சலைத் தந்தன! தாங்கித்தான் வாழ்ந்தேன்!

இடிதாங்கி யானபோது மீறி இடிகள்

வெடிக்க நிலைகுலைந்தேன் என்சொல்வேன்? நானோ

துடிக்கின்றேன் உள்ளே துவண்டு.


மதுரை பாபாராஜ்

 

பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


உண்ணத் தவிக்கும் புறாவுக்கும் உண்பதற்குக்

கண்ணுங் கருத்துமாய்த் தானியங்கள் வைக்கின்ற

பண்பறிந்தேன்! வாழ்த்துகிறேன்! வாழ்த்தி மகிழ்கின்றேன்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என்பதற்குச் 

சின்னமே இந்தச் செயல்.


மதுரை பாபாராஜ்

 

ஆற்றோரப் பாவலர் முருகு!


ஆற்றோரப் பாவலர் முருகு!


வான்மழை பொய்த்ததால் பாபாவின் பாமழை 

ஊற்றாய்ப் பெருக்கெடுக்க பாவெள்ளம் வைகையின்

ஆற்றோரப்  பாவலராம் நண்பர் முருகுவை

நாடி வருகிறது காண்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய பறவையே! உனக்கொரு கவிதை!



 

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய பறவையே!
உனக்கொரு கவிதை!

மனிதனே பக்குவம்கொள்!

உன்னுடலை மூடி மறைப்பதற்கே நீயிங்கே
எண்ணற்ற ஆடைகளை மாற்றி அணிந்தாலும்
உன்னுள்ளே உள்ள அடிப்படைப் பண்புகள்
பக்குவப் பட்டால்தான் உந்தன் மதிப்புயரும்!
பக்குவமே வாழ்வின் உயிர்.

மதுரை பாபாராஜ்

நம் பாபா ராஜுவின் 
கவிதை சிந்தனை,
அவர் தமிழ் மேல் 
கொண்ட பற்று ,  
ஒரு வற்றாத ஊற்று ! 
அள்ள அள்ள வரும் 
ஒரு அட்சய பாத்திரம்,
அவர் தமிழுக்கு அடிமை !
நாம் அவர் அன்புக்கு அடிமை !
                  இவண் 
                    அன்பு🙏

கொரோனா தடுப்பூசி இயக்கம் பட்டிதொட்டிகளில்!


கொரோனா தடுப்பூசி இயக்கம்

பட்டிதொட்டிகளில்!


கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம்

கிராமத்து மக்களிடம் கொண்டுசெல்லும்  தொண்டில்

அரசின் நலத்துறை ஊழியர்கள் சேர்ந்தே

குழுவாக  வீட்டுக்கு வீடுசென்றே நாளும்

தடுப்பூசி போடுகின்றார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


 

Wednesday, September 22, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!


மன்னிக்கும் பண்பே மனித இனமேந்தும்

பண்பில் சிறந்ததாம்! நம்மை வலிமையாக்கும்

ஒவ்வொரு நாளும்! அமைதியை உண்டாக்கும்!

நம்மனதில் தேங்குகின்ற குப்பைகளை நீக்கத்தான்

இங்கே துணைபுரியும்! மன்னிப்பு

என்பதோ

மற்றவர்க் கில்லை! நமக்காகும்

நற்பண்பாம்!

எப்போதும் பின்பற்று! நன்று.


மதுரை பாபாராஜ்

 

மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியத்தின்

தமிழாக்கம்!


துன்பத்தைச் சந்தித்து வாழவேண்டும்! அஞ்சாதே!

நம்பிக்கை ஒன்றே இருளை விலக்கிவிடும்!

உன்வெற்றிப் பக்கத்தில் அத்தியாயம் பூத்துவரும்!

அந்தநாள் இன்பமயந் தான்.


மதுரை பாபாராஜ்

 

பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்களின்


பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்களின்

வீட்டுத் தோட்டம்!

இணையருக்கு வாழ்த்து!


வீட்டுக்குள் தோட்டம் அமைத்து மகிழ்வது

நாட்டுப் பழக்கமாச்சு இன்று! கிடைக்கின்ற

வீட்டுப் பகுதியை நன்கு பயன்படுத்தும்

ஆற்றலைக் கண்டேன் வியந்து.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம் !


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம் !

தமிழாக்கம்!

நாமோட வைக்கவேண்டும் நாளை உழைப்பாலே! 

நாம்மறுத்தால் நாளிங்கே நம்மைத்தான் ஓடவைக்கும்!

நாளைநாம் ஓடவைத்தால் முன்னேற்றம் காணலாம்!

நாள்நம்மை ஓடவைத்தல் தீது.


மதுரை பாபாராஜ்

 

மாண்புமிகு முதலமைச்சர் தளபதி சாதனைத்திலகம் மு.க.ஸ்டாலின் வாழ்க!


மாண்புமிகு முதலமைச்சர் தளபதி 

சாதனைத்திலகம்

மு.க.ஸ்டாலின் வாழ்க!


தெற்கில் எழுந்த கதிரவன் ஸ்டாலின்!

தினமும் சாதனை படைத்திடும் ஸ்டாலின்!


இந்தியா திரும்பிப் பார்த்திடும் ஸ்டாலின்!

பன்னாட்டு மன்றம் பாராட்டும் ஸ்டாலின்!


முன்னோடித் திட்டம் தருவது கண்டே

எல்லோரும் புகழும் காட்சிகள் உண்டு!


உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற

திட்டம் நடைமுறை கண்டே வியப்பார்!


மக்கள் தொடர்பால் உறவை வளர்க்கும்

அருமை நட்புத் திலகம் ஸ்டாலின்!


வாக்களித் தவர்கள் மகிழ்ந்து போற்ற

வாக்களிக் காதோர் வாழ்த்திப் பேச


ஆக்க பூர்வ சாதனை செய்யும்

அருமைத் தளபதி ஸ்டாலின் வாழ்க!


அமைச்ச ரவையும் அலுவலர் குழுவும்

துளியும்  சோராமல் கடமைகளை ஆற்றும்


அமைப்பைக் கண்டே வாழ்த்துவோம் சூழ்ந்து!

அருந்தமிழ் போல வாழ்கபல் லாண்டு!


மதுரை பாபாராஜ்

 

குறள்தூதர் அன்வருக்கு வாழ்த்துகள்!


குறள்தூதர் அன்வருக்கு வாழ்த்துகள்!


கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் நற்புகழ்,

வெற்றிகள் பூத்துக் குலுங்குமே என்றென்றும்!

நற்றமிழ்த் தேன்குறள் தூதராம் அன்வரை

எப்போதும் வாழ்த்துவோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, September 21, 2021

துபாய் ராஜேந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!


துபாய் ராஜேந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!


சமத்துவம் எங்கே?


ரோசா மலருக்கு மட்டும் தனிநாளாம்!

ரோசம் இருந்தால் மலர்களே! இவ்வுலகில்

நேசமுடன் பூத்துச் சிரிப்பதை கைவிடுங்கள்!

தாரணியே! எல்லா மலருக்கும் நாள்வைத்து

ஆர்வமுடன் கொண்டாடு நீ.


மதுரை பாபாராஜ்

 

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியம்


பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியம்!

தமிழாக்கம்.


தொழில்நுட்பம் வந்து விழுங்கும்முன் நானோ

குழந்தைப் பருவத்தை ஆடியே தீர்த்தேன்,!

உவகைப் பருவம் வருமோ இனிமேல்?

அவனி இயந்திர வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

Monday, September 20, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

கிளியே இன்றைய எனது கவிதை!

பண்படுத்தி வாழ்தல் மகிழ்வு!


புண்படுத்தும் கெட்ட குணங்களைத் தூற்றுவோம்!

பண்படுத்தும் நல்ல குணங்களைப் போற்றுவோம்!

புண்படுத்தி வாழ்தல் வெறுப்பையே தூண்டிவிடும்!

பண்படுத்தி வாழ்தல் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

எனது தந்தை தெய்வத்திரு.முத்துசுப்பு அவர்களின் பிறந்தநாள் இன்று


21.09.2021


எனது தந்தை தெய்வத்திரு.முத்துசுப்பு அவர்களின் பிறந்தநாள் இன்று


நீதியும் நேர்மையும் வாழ்வின் விழிகளாக

மேதினியில் நேர்வழியில் நாளும் உழைப்பாலே

ஈடில்லா பண்புடன் வாழ்ந்தவர் என்தந்தை!

பாடி வணங்குகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

குடும்பத்தார்


 

தாத்தா பாட்டி பேரன் பவனுடன்!


தாத்தா பாட்டி பேரன் பவனுடன்!


தாத்தாவும் பேரன் பவனுடன் பாட்டியும்

போட்டிபோட்டு இங்கே சிரிக்கின்றார் இன்பமுடன்!

ஊற்றெடுக்கும் உள்ள மகிழ்வின் உறவிது!

ஆற்றலுடன் வாழ்க பவன்.


பாபாதாத்தா

 

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்! தமிழாக்கம்.


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!

தமிழாக்கம்.

தகவல் தொடர்பு! மகிழ்ச்சியான வாழ்வின் 

மகத்தான சாரமாகும்! என்னதான் நீங்கள்

அகம்நிறைய அன்புதனை வைத்திருந் தாலும்

முகம்மலர சொன்னால்தான் அன்பை உணர்வோம்!

அகத்தின் அழகே முகம்.


மதுரை பாபாராஜ்

 

அனுப்பியவர் பெரியவர் துரைசாமி திருவாசகம்,விசாகை


அனுப்பியவர் பெரியவர் துரைசாமி திருவாசகம்,விசாகை

தங்கமயிலுக்கு கவிதை!

தோகை விரித்தாடும் தங்க மயிலுனக்கா

பேகன் கொடுத்தான்தன் பொன்னாடை? கானகத்தில்

ஈகை வழங்கி கடையேழு வள்ளலாக

ஆகா உயர்ந்தானே இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, September 19, 2021

மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியம்! தமிழாக்கம்


மகள் உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்



புன்னகை! வாழ்வில் இதயக் குளிர்ச்சிமுறை!

கண்களின் பேரொளி மின்னும் அமைப்பாகும்!

நம்முகத்தின் நல்ல விளக்கொளியாம்!உள்ளத்தில்

அன்பூறும் ஓய்வுநிலைப் பக்குவமாம்! ஆகையால்

புன்னகை ஏந்தப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் துபாய் இராஜேந்திரன் அனுப்பிய படம்

 

நண்பர் துபாய் இராஜேந்திரன் அனுப்பிய படம்

எத்தநாள் இனிது?

ஒவ்வொரு மாதம் முழுநிலவு வந்துபோகும்!
இவ்வுலகில் ஏழைகள் ஏழையாக வாழ்கின்றார்!
அங்கங்கே பஞ்சமும் பட்டினியும் உள்ளது!
அங்கெந்த நாள்தான் இனிது?

மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய பறவை ஒளிப்படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய பறவை ஒளிப்படம்! 


சிறகை விரித்தேதான் விண்ணை அளந்தும்

விருட்டென்றே மண்ணில் தெரியும் இரையை,

விழுவதைப் போல வந்தே கடுகி

அழகாக கால்களால் பற்றி எடுத்தே

எழுந்து பறக்கும் திறமை வியப்பே!

இயற்கை கொடுத்த வரம்.


மதுரை பாபாராஜ்


 

Saturday, September 18, 2021

மருமகன் ரவி அனுப்பியது!


மருமகன் ரவி அனுப்பியது!

தமிழாக்கம்!

அக்கறை! வாழ்வின் இனிமாயான சாரமாகும்!

அக்கறை கொள்க எனச்சொன்னால் அன்னாரின்

உள்ளத்தில் உங்களுக் கென்றே இறுதிவரை

அன்புடன் ஓரிட முண்டு.


மதுரை பாபாராஜ்