Monday, February 28, 2022

கலைஞருடன் இமயம்


நண்பர்  இமயமும் தமிழிமயமும்!


நண்பர் இமயவரம்பன் கலைஞரைச் சந்தித்த தருணம்!


கவிதை இமயம் தமிழிம யத்தைக்

களிப்புடன் சந்தித்த நல்ல தருணம்!

உளங்கனிந்த வாழ்த்துகள்! இந்தப் பிறவிப்

பயனிது என்றுதான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

உங்களில் ஒருவன் நூல்வெளியீடு


மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்

அவர்களின் ' உங்களில் ஒருவன்' நூல்

வெளியீட்டு விழாவில் தளபதி அவர்களின் ஏற்புரைக்குக் கவிதை:

28.02.2022


தனிமனித னல்ல! ஒருகூட்டம்! கொள்கை

கனிந்துவரும் கூட்டம்! திராவிட மாடல்

நிமிர்த்தவரும் கூட்டமாம்! இந்திய நாட்டின்

தனித்துவத்தைக் காக்கும் உழைத்து.


மதுரை பாபாராஜ்

 

மனக்கவலை

 மனக்கவலை மாற்றல் அரிது!


பணக்கவலை என்றால் கடன்வாங்கிப் போக்க

தினமும் வழிபிறக்கும்! ஆனால் வதைத்துச் 

சுணங்கவைத்துப் பார்த்துத் துடிக்கத்தான்  வைக்கும்

மனக்கவலை மாற்றல் அரிது.


மதுரை பாபாராஜ்


Sunday, February 27, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழில் கவிதை!


எந்தக் குறிப்பிட்ட காலத் திலுமிங்கே

நம்முடைய  கொள்கையோ சூழலைக் காப்பது

மட்டுமின்றி இந்த மனித இனத்தையும்

கட்டமைப்பில் வாழவைக்கும் 

போக்கும் இருக்கவேண்டும்!

ஒற்றுமை மற்றும் பகிர்தலெனும் பண்புகள்

சிந்தும் மகிழ்ச்சி மெதுவாய் மறைகிறதே!

என்றுமிது நல்லதல்ல சொல்.


மதுரை பாபாராஜ்

 

பெருந்தன்மை

 பெருந்தன்மை கோழைத்தனமல்ல!


GENEROSITY IS NOT COWARDICE!


பெருந்தன்மை கோழைத் தனமல்ல! அந்தப்

பெருமைக் கிணையில்லை! ஈடில்லை!

பண்பின்

சிகரம் பெருந்தன்மை என்பேன்! உயர்த்தும்

அறநெறியே அப்பண்பு தான்.


மதுரை பாபாராஜ்

வள்ளுவம் பொதுமுறை

 வள்ளுவம் பொதுமுறை!


வள்ளுவத்தின் சொற்களோ அந்த மொழிச்சொல்லா?

தெள்ளுதமிழ்ச் சொற்களா? என்பதைக் காட்டிலும்

வள்ளுவம் கூறும் அறநெறியைப் பின்பற்றும்

உள்ளத்தைக் கொள்தல் சிறப்பு.


பூசைகள் செய்து மணியடித்து தெய்வமாக்கி

கூசாமல் இங்கே மதச்சிறையில் வள்ளுவத்தைத்

தேடவைத்தல்  தேவையற்ற வேலை எனச்சொல்வேன்!

பாடமாக்கி வாழ்விலே போற்று.



மதுரை பாபாராஜ்


மெய்மறந்து ரசிக்கும் மனைவி


மனைவி வசந்தா மெய்மறந்தே ரசிக்கும் பாடல்:


அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ!


திரைப்படப் பாடல் தவழ்ந்துவர இல்லாள்

விழிமூடி மெய்மறந்தே இங்கே ரசிக்கும்

அழகே அழகுதான்! 

கைபேசி கொண்டே

படம்பிடித்தேன் உள்ளம் மகிழ்ந்தாள் சிரித்து!

கடமையைத் தாண்டி மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் BSNL இராமசாமிக்கு வாழ்த்து


நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!


ஓய்வெடுத்தே தேனிசையை நன்கு ரசிப்பதற்கே

வாழ்த்துகின்ற நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

கையாள்தல்

 கையாள்தல்!


நீரையும் பாலையும் சோறு பிரித்துவிடும்!

வாழ்வில் வருகின்ற சிக்கலையும் இப்படித்தான்

ஏற்றே அணுகினால் சிக்கலும் தீர்ந்துவிடும்!

ஊற்றெடுத்து நிற்கும் குழப்பங்கள் ஓய்ந்துவிடும்!

போட்டுக் குழப்புவதை நீக்கு.


மதுரை பாபாராஜ்

Saturday, February 26, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை

மனிதன்! புரியாப் புதிர்!


எறும்பா? கடிக்கத்தான் செய்யுமிங்கே! தேளா?

கொடுக்காலே கொட்டத்தான் செய்யுமிங்கே! பாம்பா?

சுருக்கென்றே தீண்டத்தான் செய்யும்! விலங்கா?

மிரண்டேதான் தாக்கத்தான் செய்யும்! மனிதன்?

தெரியாதே! என்னசெய்வான்? ஏதுசெய்வான்? என்றே!

உலகில் மனிதன் புதிர்.


மதுரை பாபாராஜ்

 

நீச்சல் குளத்தில் வருண்


பேரன் வருணா! அல்லது மீனா?


நீருக்குள் மீனாக நீச்சல் குளத்திலே

நீந்தும் வருணுக்கு வாழ்த்து..


பாபா தாத்தா

 

இயல்பாக வாழ்வோம்

 இயல்பாக வாழ்வோம்!


இறைவனை நம்புங்கள் உங்கள் விருப்பம்!

இறைவனையே நம்பிக் கடமை மறக்கும்

நிலையெடுக்க வேண்டாம்! நிலைகுலையும் வாழ்க்கை!

இயல்பாக வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

நண்பர் செல்லப்பா

நண்பர் செல்லப்பா அனுப்பிய காணொளிக்குக் கவிதை!

நரம்பற்ற நாவாலே கண்டபடி இங்கே

வரம்பின்றிப் பேசுவதே மாந்தர் இயல்பு!

நரம்பெடுத்துக் கூடுகட்டும் நேர்மறைப் போக்கே

பறவையின் வாழ்க்கை இயல்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் கவிஞர் மோகனசுந்தரம் கருத்துப் பரிமாற்றம்:


Mohanasundaram:

கேடுகெட்ட மாந்தரெலாம் கூவுகிறார் வீடிலையாம்


கூடுகட்டும் இப்பறவை பார்.


பொழிப்பு மோனை(1,3) 

ஒரூஉ எதுகை(1,4) கூடிய

ஒழுகிசைச் செப்பலோசையில் அமைந்த குறள் வெண்பா.

நரம்பற்ற நாவாலே கண்டபடி இங்கே

வரம்பின்றிப் பேசுவதே மாந்தர் இயல்பு!

நரம்பெடுத்துக் கூடுகட்டும் நேர்மறைப் போக்கே

பறவையின் வாழ்க்கை இயல்பு.


மதுரை பாபாராஜ்


அருமை


Mohanasundaram:

இன்னிசை வெண்பா இனிக்கிறது ஐயனே

தன்னாலே நீருமே தண்பா எழுதுகிறீர் 

உன்போலே நானும் உயர்வான பாக்களை 

என்று எழுது வனோ?.


மதுரை பாபாராஜ்:

மிக்க நன்றி ஐயா

தங்களின் ஊக்கம் இனிமைதான்


இலக்கண வித்தகரே! உங்களைப் போல

எழுத விழைகிறேன்! சொற்களின் எல்லை

அனுமதிக்கும் எல்லைக்குள் என்முயற்சி என்பா!

அடக்கத்தின் பேருரு நீ.


மதுரை பாபாராஜ்

 

தம்பி கெஜராஜ்


தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி-- மதுரை


பள்ளி இறுதிப் படிப்பு நிறைவு-1972

 பொன்விழா கொண்டாட்டம்


தம்பி S.P. கெஜராஜ் பழைய மாணவர்!


துள்ளித் திரிந்திருந்த காலத்தை எண்ணுகின்றார்!

பள்ளி இறுதி வகுப்பு நிறைவினிலே

பொன்விழா ஐம்பதாண்டு சென்ற நினைவிலே

பள்ளி வளாகத்தில் கூடி மகிழ்ந்தனர்!

எல்லோர்க்கும் வாழ்த்துகள் கூறு.


மதுரை பாபாராஜ்

 

மூன்றாம் கண்

 மூன்றாம் கண்!


சுற்றி இருப்போரின் கண்ணிங்கே மூன்றாம்கண்!

உற்றுத்தான் பார்ப்பார்! குறைகளையே பார்த்திருப்பார்!

அக்கறையாய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு பற்றவைப்பார்!

அப்பப்பா செய்தி வதந்தியாய் மாறித்தான்

பற்றிவிடும் காட்டுத்தீ போல்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


மக்களை நேசிக்கக் கற்பதே நல்லது!

எப்படி உள்ளாரோ அப்படியே ஏற்கவும்!

எப்படி மற்றும் எதற்காக உள்ளாரோ

அப்படியே ஏற்பதே முன்னேறும் ஆற்றலை

தந்தே நிமிர்த்தும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

வேலுநாச்சியார்


மெரினா கடற்கரை--

25.02.22


படத்தில்:நான்சி-அமுதா- அக்கா லட்சுமி-வசந்தா- பாபா-- வருண்


இந்தியவிடுதலைப் போரில் தமிழ்நாடு!


வீரமங்கை வேலு நாச்சியார்-குயிலி-

வீரர் சுந்தரலிங்கம்!


குதிரையில் போர்க்கோலம் நாச்சியார் ஏந்த

உயிர்த்தோழி யான குயிலியோ நிற்க

தகிப்பிலே வாளுடன் சுந்தர லிங்கம் 

பகைவரைப் பந்தாடும் கோலத்தில் 

நிற்கும்

இணையற்ற பின்னணியில் எங்கள் குடும்பம்

இசைவுடன் நின்றோம் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

மெரினாவில் நமச்சிவாயம்


மெரினா கடற்கரை

25.02.22


தமிழ்நாடு அரசின் ஊர்வல வண்டி!


இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாடு! 


வீரமங்கை வேலு நாச்சியார் -- குயிலி-- வீரர் சுந்தரலிங்கம்


குதிரையில் வீரமங்கை வேலுநாச்சி வீற்றிருக்க

குயிலியோ கேடயம் ஏந்திநிற்கும் கோலம்

துணிவுடன் வீரராம்

சுந்தர லிங்கம்

அணிசெய்யும் பின்னணியில் நமச்சிவாயம் நிற்கும்

இணையற்ற காட்சி இது.


மதுரை பாபாராஜ்

 

வருண் துப்பாக்கி சுடும் காட்சி


மெரினா கடற்கரை!

25.02.22

பேரன் வருண் துப்பாக்கி சுடும் காட்சி!


துல்லியமாய்த் துப்பாக்கி ஏந்திக் குறிவைத்தே

குண்டால் பலூனை அடித்து வெடிக்கவைத்தான்

என்பேரன் அன்பு வருண்தான்! திறமையைக்

கண்டேன் வியந்தேன் மகிழ்ந்து.


பாபா தாத்தா

 

வங்கக் கடலில்


வசந்தா பாட்டி-- 

பேரன் வருண்-- 

பேத்தி நான்சி


மெரினா கடற்கரை!

வங்கடலில் கால்நனைத்த காட்சி!


25.02.22


கடலலைகள் துள்ளிவரும் பின்னணியில் நிற்கும்

வசந்தாவும் பேரன் வருணுடன் பேத்தி

அகங்குளிர நிற்கின்ற நான்சியென மூவர்

மகிழ்ந்தேதான் நிற்கின்றார் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, February 24, 2022

கலையாற்றலுக்கு வாழ்த்து


முதல் படம்

திருமதி நிலமங்கை துரைசாமி,விசாகை

இரண்டாவது படம்:

திருமதி 

சுபா ரவி,சென்னை


படத்திற்குக் கவிதை:


வளைந்து கொடுத்தேதான் வாழ்வ தழகே!

உரைக்கின்ற கைவண்ண ஆற்றல் அருமை!

வளரட்டும் ஆற்றலென்றே வாழ்த்தி மகிழ்வோம்!

கலையழகே கூறும் உழைப்பு.

மதுரை பாபாராஜ்


Vovkaniankrishnan:

காட்சியைப் படம்பிடித்துக்

கவிதையாக்குவதுதான்

கவிஞனுக்கு அழகு என்பர்.

அந்த அழகில் ராஜ்

பாபாராஜ் ஐயா.


கனியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!


கருத்தைக் கவிதை வடிவில் கனியன்

தருவதில் வல்லவர்தான் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

 

நண்பர் அன்பு அவர்களுக்கு வாழ்த்து


நண்பர் அன்பு வரைந்த ஓவியம்!


படத்தில் உருவத்தைப் பார்த்தே நன்கு

படம்வரையும் ஆற்றலோ 

அன்பிடம் உண்டு!

படமிங்கே நேரிலே பேசுகின்ற காட்சி!

திறமை நிலைத்திட வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

THAMIZHIYALAN


THE NEW INDIAN EXPRESS-- 23.02.22


THAMIZHIYALAN A SMILING PERSONALITY



Of Perils and Purpose


Perils may come at anytime

And at any age in our life!

Shattering our hopes and close

Our doors of opportunities!

Parents and well wishers and Doctors

Plunge into action and save

Our lives to their best efforts!


Thamizhiyalan the best example

Who without losing the hope

Step by step he progressed

And regained his restricted mobility!


Sudden attack of fever

Developed into polio

Affected his future!

His relentless efforts 

Made him a Man of achievement!


Education chistled him a fullfledged

Exemplary Man running 

I AM AN IAS ACADEMY!

Three masters degree 

Throwing away the inferiority complex

Now with his wife and children

Glitter like a shining star 

In the society doing yeomen service!


Several zoom meetings he is presiding

Finding an alternative amidst pandemic

Crisis reaching hundreds of his fans!

A multi faceted personality with

Many laudable talents.


Long live Thamizhiyalan and His family.


Madurai Babaraj

 

யானை- செய்தியும் கவிதையும்

 


செய்தியும் கவிதையும்!

ஆர்க்கிமிடிஸ் விதிப்படி 
மிதினப்பூரில் பள்ளத்தில் விழுந்த
யானை காப்பாற்றப்பட்டது!

யானை குழியில் விழுந்தது! காப்பாற்ற
ஆர்க்கிமிடிஸ் தந்த மிதத்தல் விதிப்படி
நீரை நிரப்பினர்! யானை மிதந்தேதான்
மேலேறி வந்தே வெளியிலே வந்தது!
யானை மகிழ்ந்தது பார்.

மதுரை பாபாராஜ்


நா போல செயல்படு

 'நா' போல செயல்படு!


பல்லிடுக்கில் ஏதேனும் சிக்கிவிட்டால் நம்நாக்கு

பல்லில் துழாவியே சிக்கியதை எப்படியும்

தள்ளி எடுக்குமட்டும் ஓயாது! அப்படித்தான்

நம்வாழ்வில் ஏற்படும் சின்னத் தடைகளையும்

தள்ளித் தவிர்த்தல் சிறப்பு.


மதுரை பாபாராஜ்


Wednesday, February 23, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


நீங்கள் செயலை நிறைவேற்ற முன்வந்தால்

நேர்மையுடன் ஈடுபாடு கொண்டேதான் செய்யுங்கள்!

நீங்களிந்த சட்டத்துள் வந்துவிட்டால் வெற்றிகள்

நாடிவரும் உங்களைத் தான்


மதுரை பாபாராஜ்

 

மருத்துவர் கோகிலாவுக்கு வாழ்த்து

 VOV C.ANBU: My daughter dr kokila art

please a small kavithai sir

[நண்பர் அன்பு அவர்களின் மகள் மருத்துவர் கோகிலாவுக்கு வாழ்த்து!

நண்பராம் அன்பு மகளோ மருத்துவர்!

கண்கவரும் ஓவியமாய் ஆந்தைப் பறவையை

இங்கே படைத்திட்டார் கோகிலாதான்! வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

அது ஒரு பொற்காலம்


அது ஒரு பொற்காலம்! 


1976 முதல் 2012 முடிய


நாங்கள் பழைய திரைப்படப் பாடல்கள்  பாடித் தூங்கவைத்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.நாங்கள் பாடித் தூங்கவைத்த பாடல்கள்:


1. சின்னஞ்சிறு கண்மலர்

2. பூஞ்சிட்டுக் கன்னங்கள்

3. நீலவண்ணக்கண்ணா வாடா

4. என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

5. எங்கிருந்தாலும் வாழ்க

6. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

7. காதலிலே தோல்வியுற்றாள்

8. உன்னைக் காணாத கண்ணும்

9. என்னை யாரென்று எண்ணியெண்ணி

10. நான் பேச நினைப்பதெல்லாம.

11. கண்ணும் கண்ணும் பேசியதும்

12.துள்ளாத மனமும் துள்ளும்

13.தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

14.சின்னச்சின்ன நடை நடந்து

15. எங்கிருந்த போதும் உன்னை

16. சொன்னது நீதானா

17.உள்ளம் என்பது ஆமை

18. சின்னபாப்பா எங்க செல்லபாப்பா

19.சின்னப் பயலே

20.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

21.அவளுக்கென்ன தூங்கிவிட்டாள்

22.அண்ணன் காட்டிய வழியம்மா

23.மலர்ந்தும் மலராத


எங்கள் பாடலைக் கேட்டுத் தூங்கிய குழந்தைகள்:


1.ராஜ்குமார்

2.சுபா

3.எழில்

4.பொம்மி

5. கார்த்திக்

6. சேனா

7.பெனிட்டா

8.ஹரி

9.சுசாந்த்

10. நிக்கில்

11. வருண்

ஒருமுறை நீலவண்ணக் கண்ணா பாடிய போது தொட்டிலுக்குள் இருந்து அதே பாடலை எங்களுடன் நிக்கிலும் பாடியது இன்றும்நினைவில் உள்ளது.


தம்பி கெஜாவின் நண்பர் செல்வா மதுரையில் வீட்டிற்கு வருவார். பாடத்தொடங்கியதும் "அண்ணனும் அண்ணியும் பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சாச்சு என்று சொல்வார்.


அக்கா மகன் பாலு கூறியது:

மலர்ந்தும் மலராத பாட ஆரம்பிச்சாச்சு. 

இத்துடன் பாட்டுக் கச்சேரி முடிஞ்சுச்சு

என்பார்.


அது ஒரு பொற்காலம்!


 

Labels:

பொறுமை

 பொறுமை கடலினும் பெரிது!


நடப்பவை இங்கே நடந்துதான் தீரும்!

கடக்கின்ற நேரம் கடந்துதான் போகும்!

இடைப்பட்ட காலத்தில் வேதனையே மிஞ்சும்!

பொறுமைக்கே உண்டு பரிசு.


மதுரை பாபாராஜ்

Tuesday, February 22, 2022

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நிலைமையோ அல்லது சூழ்நிலையோ இங்கே

அமைந்தால்தான்  வேலை நிறைவேறும் என்றே

நினைத்தல் தவறாகும்! காலம் பொறுத்தே

அனைத்தும் முடியும்! விரைந்தே முடித்தால்

சிறப்புதான் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வண்ணவண்ணப் பூனை தலையில் மலர்ந்திருக்கும்

வெண்ணிறப் பூக்கள் அழகுசெய்ய விழிகளோ

முன்வந்தே பார்த்து வணக்கத்தைக் கூறுகின்ற

அன்பினை நன்றியுடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் KP கண்ணன்


நண்பர் KP கண்ணன் அனுப்பியற்குக் கவிதை வடிவம்,:


எண்ணற்ற இன்னல்கள் வாழ்க்கையில் வந்தாலும்

உன்னால் முடியுமென்றே ஊக்கப் படுத்துகின்ற

அன்பு உறவிருந்தால் இன்னலும் தோற்றுவிடும்!

என்றுமே ஊக்கப் படுத்து.

மதுரை பாபாராஜ்

 

Dr.ரமேஷ், கவுஹாத்தி


வீஓவி Dr. ரமேஷ் அனுப்பியதற்குத் தமிழாக்கம்!


கணிப்பதோ உங்கள் கடந்தகாலம் அல்ல!

நினைவில் நிறுத்துங்கள் பாடந்தான் அஃது!

சுமக்கின்ற ஆயுளுக்கும் தண்டனை யல்ல! 

உணருங்கள் பாடத்தைக் கற்று.

மதுரை பாபாராஜ்

 

STAR

 STAR!


Twinkle twinkle little star

Study well to become a super star


How i wonder what you are

How to become like you? Tell!


Up above the world so high

Positive thoughts brighten  you so high


Like a diamond in the sky

You shine like a diamond in the life


When the blazing Sun is gone

Ups and downs of life are gone


Then you show your little eyes

Then your opportunities knock thy doors


S.P.Babaraj


நண்பர். எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மற்றவரை ஏற்றுச் சகிக்கின்ற பண்புவேண்டும்!

அத்தகைய பண்பை  நமது செயல்களில்

இங்கே இருக்கவே கூடாது! வேறுபாடு

இங்கிருந்தால் நம்இலக்கை நாமடைய இங்குதவும்!

என்றும் சகிப்பதே பண்பு.


மதுரை பாபாராஜ்

 

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும்!


ஐந்தாண்டு போனதே! என்னுருவம் இன்றுபார்த்தால்

நைந்தே உருக்குலைந்த தோற்றத்தில்! பற்களோ

அங்கங்கே ஓட்டையுடன் கோணலாக! என்தலையில் 

வெண்முடி! எந்தன் முகத்திலே இன்பதுன்பம்

பண்பட்ட பக்குவத்தின் கீற்று.


மதுரை பாபாராஜ்

அன்றைய முகமோ

             தோற்றப் பொலிவு

இன்றைய முகமோ

          பக்குவத் தெளிவு.

நண்பர் கனியன் கிருஷ்ணன்,தென்காசி

 

Monday, February 21, 2022

மகள் உமா பாலமுரளி


மகள் 

திருமதி உமா பாலமுரளி

அனுப்பியதற்குத் தமிழாக்கம்!


ஆதரவே இல்லாமல் அல்லாடும் நேரத்தில்

ஆதரவு தந்தேதான் கைகொடுக்கும் பண்பே

மகத்தான அன்பளிப்பில் ஒன்றாகும்

 வாழ்வில்!

உகந்தநேரம் ஆதரவைத் தா.


மதுரை பாபாராஜ்

 

உலகத் தாய்மொழி நாள்

 உலகத்தாய்மொழி நாள்


21.02.22


இந்தமொழி அந்தமொழி எந்தமொழி கற்றாலும்

சொந்தமொழி தாய்மொழியை வாழ்வில் புறக்கணித்தால்

முன்னேற்றம் காண முடியாது தத்தளிப்போம்!

என்றுமே தாய்மொழியே காப்பு.


மதுரை பாபாராஜ்

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம்,விசாகை அனுப்பியதன் தமிழாக்கம்:


எப்போதும் வாழ்வில் அமைதியைப் பின்பற்று!

சற்றுகூட நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்

புண்பட ஆணவம் கொள்ளாதே! யாரையும்

புண்படுத்திப் பேசாதே! எல்லோரி டத்திலும்

அன்பாய்ப் பழகு! வழிபாட்டை என்றுமே

விட்டு விடாதே! இறையை அமைதியாய்

இங்கே நினைக்கவும்! உண்மையைப் பேசவும்!

பண்பாய்ப் பொருத்தமான சொற்களைச் சொல்லவும்!

இத்துடன்  உற்சாகந் தன்னை வெளிப்படுத்தி

என்றுமே வாழ்ந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக

நிம்மதியாய் வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


ஒதுக்கிய அல்லது ஒப்புதல் தந்த

பணியை நிறைவேற்ற  நீங்களென்று இங்கே

பணிக்களத்தில் தீர்மானம் செய்துவிட்டால் நீங்கள்

பணிகளை இன்றெனினும் அல்லது நாளை

எனினுமிங்கே  நீங்கள்தான் செய்யவேண்டும் அஃதை!

பணியை முடித்தல் உழைப்பு.

மதுரை பாபாராஜ்

 

Sunday, February 20, 2022

அப்பாவிடம் பேசட்டும் குழந்தைகள்

 அப்பாவிடம் பேசட்டும் குழந்தைகள்!


கணவன் மனைவிக்கு வேறுபாடு என்றால்

குழந்தைகள் செய்தபாவம் என்ன? அந்தக்

குழந்தைகள் அப்பா விடம்பேசி னால்தான்

மனங்குளிரும் காட்சிமாறும் இங்கு.


மதுரை பாபாராஜ்

சுடலைமணி


நண்பர் சுடலைமணிக்கு வாழ்த்து!


கணக்குத் துறையில் விற்பன்ன ராக

கணக்கியல் தேர்வில் ஒருநிலையில் வெற்றி

கனிந்துவந்த செய்தி

அறிந்தேன்! மகிழ்ந்தேன்!

மணிவாழ்க முன்னேற்றம் கண்டு.


மதுரை பாபாராஜ்

 

உள்ளத்தின் இயல்பு!

 உள்ளத்தின் இயல்பு!

(சித்தப்பா தெய்வத்திரு அழகர்சாமி கூறிய கருத்து)

மறக்க நினைத்தாலும் உள்ளமோ இங்கே

மறக்க விடாமல் நிகழ்வுகளை நம்முன்

நிறுத்தித் துடிக்கவைத்துப் பார்க்கும்!

துடிப்போம்

சிறைப்பறவை யாகத்தான் நாம்.


மதுரை பாபாராஜ்


நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்கு வாழ்த்து!


அனைத்தையும் அற்புதமாய் மாற்றி அமைத்து

மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும் இன்று!

மனதார வாழ்த்தும் இராமசாமி வாழ்க!

மனம்போல வாழ்வென் றுணர்.


மதுரை பாபாராஜ்

 

Saturday, February 19, 2022

நண்பர் அன்பு அனுப்பியது


நண்பர் அன்பு அனுப்பியதற்குக் கவிதை:


ஒதுக்கினால் நீயோ நிமிர்ந்தேதான் நில்லு!

புகழைப் பொழிந்தால் அடக்கமாய் நில்லு!

விமர்சனம் செய்தால் அமைதியாய் நில்லு!

மனதார நேசித்தால் அன்புடன் நில்லு!

அனைத்தும் உலகமும் உன்வச மாகும்!

இவையே கம்பீரம்! பார்.


மதுரை பாபாராஜ்

 

கொள்கை வெறியானால்

 கொள்கை வெறியானால்!


கொள்கையில் பற்றென்றால் கேடில்லை நல்லதே!

கொள்கை வெறியாக மாறிவிட்டால் கேடுதான்!

உள்ளத்தில் வக்கிரங்கள் ஊற்றெடுக்கும்! உட்பகையோ

எல்லைகள் மீறிவிடும் செப்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதன் தமிழாக்கம்!


எதையிங்கே சொல்லவேண்டும் என்றே அறிவும்,

முறையாக எப்படிச் சொல்லவேண்டும் என்றே 

திறமையும், எவ்வளவு சொல்லவேண்டும் என்றே

மனப்பாங்கும், சொல்வதா? வேண்டாமா என்றே

அனுபவ ஞானமும் தீர்மானம் செய்யும்!

மனிதன் மனிதனாவான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்


மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்!


அறிவில் முதலீடு செய்யுங்கள் வாழ்வில்

சிறந்த வட்டி கிடைக்கும்! மகிழ்வோம்!

இறைக்க இறைக்க ஊறிவரும் இந்த

அறக்கேணி நீரே சுவை.


மதுரை பாபாராஜ்

 

Friday, February 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்- தமிழாக்கம்


பின்னாளில் நீங்கள் உணர்ந்து திருந்துகின்ற

எந்த எதிர்மறைப் போக்குச் செயல்களையும்

என்றுமே செய்யவேண்டாம்! எப்போதும் நற்செயலைச் 

செய்யுங்கள்! அச்செயலோ இங்கே சிறிதெனினும்

இல்லை பெரிதெனினும் செய்யுங்கள்! யாரையும்

புண்படுத் தாமல் இருப்பதற்குக் கற்கவும்!

என்றும் அமைதியே உண்டு.


மதுரை பாபாராஜ்

 

தலைகுனியவைக்கும்

 தலைகுனிய வைக்கும்!


அடிப்படைப் பண்புகள் மாறாத பக்தி!

நெறியொழுக்கம் பேணாமல் வாழும் படிப்பு!

முறைதவறி சேர்க்கும் மலைபோன்ற செல்வம்!

தலைகுனிய வைத்துவிடும் சாற்று.


மதுரை பாபாராஜ்



புத்தகக் கண்காட்சி 2022


தலைப்பு ஒன்று! கவிதைகள் இரண்டு!


புத்தகக் கண்காட்சி! 2022


ஆகா! மகிழ்ந்தார்! திருக்குறள் வாங்கினார்!

பாகாய் உருகிப் படித்தார் விறுவிறுப்பாய்!

சாகா வரம்பெற்ற தைப்போல் உணர்ந்திருந்தார்!

போகாதோர் வாய்ப்பிழந்தார் இங்கு.


ஆகா! அறிவுச் சுரங்கத்தில் நடந்திருந்தார்!

ஓகோ! புதையலைக் கண்டே வியந்திருந்தார்!

சாகா வரம்பெற்ற தைப்போல் உணர்ந்திட்டார்!

போகாதோர் வாய்ப்பிழந்தார்! சொல்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் BSNL இராமசாமிக்கு வாழ்த்து


நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!


அன்பான மற்றும் அழகான நாளாக

இந்தநாள் மாறட்டும் என்றேதான் வாழ்த்துகின்றார்!

நண்பர் இராமசாமி நட்புடன் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்-- தமிழாக்கம்


நம்மேல் தனிப்பட்ட அக்கறை, மேனிநலம் 

கொள்வதற்கு நம்கவனம் உண்டாக்கும்  நேரமிது!

என்றும்  பணிநிமித்தம் ஓடுவதை விட்டுவிட்டு

சற்றேனும் உங்களுக் காகவும் நேரத்தை

எப்படி யேனும் ஒதுக்கு.


மதுரை பாபாராஜ்

 

திருமதி ஆர்த்தி -- கோவிந் பெங்களூரு


விருந்தோம்பல் இணையர் 

மருமகன் கோவிந்தும் 

மகள் ஆர்த்தியும் வாழ்க!


இல்லற முத்துக்கள்:

மகன்கள்:  சஷ்டிக்

                      மிருதுள்


16/17.02.22


மழலை மொழியிலே பேரன்கள் 'தாத்தா'

அழைப்பிலே மெய்மறந்தேன்! உள்ளம் நெகிழ்ந்தேன்!

ஒருவரோ மெய்நிகர் காணும் வகுப்பில்

படித்திருக்கப் பார்த்தேன் உவந்து.


வள்ளுவர் சொன்ன விருந்தோம்பல் பண்பினை

நல்ல இணையராம் கோவிந்தும் ஆர்த்தியும்

உள்ளன்பு கொண்டே ஏந்தியே வாழ்கின்றார்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

 

இன்னல்களின் பயன் இனிமையானவை


இன்னல்களின் பயன் இனிமையானவை!

SWEET ARE THE USES OF ADVERSITY!

மேம்பாலம் அங்கங்கே கட்டுகின்றார் அக்கறையாய்!

போக்கு வரத்தில் நெரிசல்தான்! இன்னல்தான்!

ஆனாலும் கட்டி முடித்தவுடன் மக்களுக்கு

நாள்தோறும் இன்பந்தான் இன்னல் மறைந்துவிடும்!

ஆம்நமக்கோ இன்னல் பயனோ இனிமைதான்!

வாழ்க்கையும் இப்படித்தான்! சொல்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, February 17, 2022

நண்பர் சந்திரன்


நண்பர் சந்திரனின் வெள்ளி வணக்கம்!


கரமோ மலர்களை ஏந்த, மலர்மேல்

புறாவோ அமர்ந்திருக்க, கோப்பை குளம்பி

அருந்தத் தயாரா யிருக்க வணக்கம்

உரைக்கின்ற நண்பரின் அன்பிற்கு நன்றி

நவில்கின்றேன் இங்கே உவந்து.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, February 16, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்

நீங்கள் நீங்களாக இருங்கள்!


நீதிமா னாகித்தான் தீர்ப்பு வழங்கவேண்டாம்!

நாடியே தண்டனை தன்னைத் தரவேண்டாம்!

வாழ்வில் எதைவிதைத்தா ரோயிங்கே அஃதையே

நாளும்  அறுவடை செய்வார்கள் நிச்சயம்!

வாழ்க்கையில் நீங்களோ நீங்களாய் வாழுங்கள்!

சூழ்நிலையை வென்றெடுக்கும் அன்பு.


மதுரை பாபாராஜ்

பெங்களுரு

 

ஐயா தமிழினியன் வாழ்க


ஐயா தமிழினியன் வாழ்க!


25.02.22


கனவு நதியில் கிடைத்தவை, நண்பா

உனக்கொரு வெண்பா இருநூல்கள் இங்கே

வெளிவர உள்ளன! வாழ்த்துகிறேன்! ஐயா

தமிழினியன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


சிலநேரம், சொற்களைக் காட்டிலும் மௌனம்

சிறந்தது! மௌனம் வலிமை மிகுந்த

மகத்தான ஆற்றலுக்கு வித்தாகும் நாளும்!

 உரத்த குரலே வலிமையென் றெண்ணும்

கருத்து தவறாகும்! ஆனாலும் மௌனம்

பெருமைக்குச் சான்றாகும் சாற்று.


மதுரை பாபாராஜ்

HORAMAVU,BENGALURU

17.02.22

 

Tuesday, February 15, 2022

பெங்களூர் பயணம்16.02.22


Hotel Saravana Bhavan

16.02.22


நானோ மகளுடன் பெங்களூர் செல்கின்றேன்!

காலை உணவருந்தி அந்த வளாகத்தில்

பாங்காய் ஒளிப்படம் கைபேசி யில்லெடுத்தோம்!

பாபா முதுமைக் களை.


மதுரை பாபாராஜ்

 

கைகள்


கைகள்!


இணைந்த கரங்கள் இணக்கத்தைக் காட்டும்!

அணைக்கும் கரங்கள் அரவணைப்பைக் காட்டும்!

உழைக்கும் கரங்கள்  தன்னிறைவைக் காட்டும்!

குவிந்த கரங்கள் வணக்கத்தைக் காட்டும்!

கரங்களின் பண்பே இது.


மதுரை பாபாராஜ்

 

தம்பி இராம்குமார் அனுப்பியதன் தமிழாக்கம்


கலிவெண்பா:

தம்பி இராம்குமார் அனுப்பியதன் தமிழாக்கம்!


ஆணுக்கும்/ பெண்ணுக்கும் பொருந்தும் !


நீங்கள் சரியாகத் தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு

நாளுமே காதலர் நாளாகும் வாழ்விலே!

நீங்கள் தவறாகத் தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு

நாளும் தியாகிகள் நாளாகும் வாழ்விலே!

சோம்பேறி வந்துசேர்ந்தால் ஒவ்வொரு நாளுமே

வாழ்வில் உழைப்பாளர் நாளாகும்! செல்வந்தர்

தேர்வானால் ஒவ்வொரு நாளுமே புத்தாண்டே!

வாழ்விலே பக்குவ மற்றவரைத் தேர்ந்தெடுத்தால்

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள்

நாளாகும்! ஏமாற்றுப் பேர்வழி தேர்வானால்

வாழ்க்கையின் நாளெல்லாம் ஏப்ரல் முதல்நாளே!

வாழ்வில் திருமணமே செய்யவில்லை என்றாலோ

வாழ்க்கை விடுதலைநாள் தான்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மாற்றம் தவிர்க்க முடியாத. ஒன்றாகும்!

மாற்றம் தொடங்குவதோ உங்களிடம்! வாழ்விலே

ஊற்றெடுக்கும் உங்களது சிந்தனையை மாற்றுங்கள்! 

மாற்றத்தை ஏற்கப் பழகு


மதுரை பாபாராஜ்

 

Monday, February 14, 2022

நண்பர் மொகலீஸ்வரன்


நண்பர் மொகலீஸ்வரன்,  விசாகை 

அனுப்பிய படம்!


காதல் வலையிலே வீழ்வ(து) எளிதுதான்!

காதலர் தொன்றுதொட்டு வாழ்வில் முதுமைவரை

சேர்ந்தேதான் வாழ்தல் அரிதாகும்! வாழ்பவர்தான்

வாழ்வாங்கு வாழ்பவ ராம்.


மதுரை பாபாராஜ்