Sunday, February 27, 2022

வள்ளுவம் பொதுமுறை

 வள்ளுவம் பொதுமுறை!


வள்ளுவத்தின் சொற்களோ அந்த மொழிச்சொல்லா?

தெள்ளுதமிழ்ச் சொற்களா? என்பதைக் காட்டிலும்

வள்ளுவம் கூறும் அறநெறியைப் பின்பற்றும்

உள்ளத்தைக் கொள்தல் சிறப்பு.


பூசைகள் செய்து மணியடித்து தெய்வமாக்கி

கூசாமல் இங்கே மதச்சிறையில் வள்ளுவத்தைத்

தேடவைத்தல்  தேவையற்ற வேலை எனச்சொல்வேன்!

பாடமாக்கி வாழ்விலே போற்று.



மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home