Saturday, February 26, 2022

மூன்றாம் கண்

 மூன்றாம் கண்!


சுற்றி இருப்போரின் கண்ணிங்கே மூன்றாம்கண்!

உற்றுத்தான் பார்ப்பார்! குறைகளையே பார்த்திருப்பார்!

அக்கறையாய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு பற்றவைப்பார்!

அப்பப்பா செய்தி வதந்தியாய் மாறித்தான்

பற்றிவிடும் காட்டுத்தீ போல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home