Saturday, February 26, 2022

நண்பர் செல்லப்பா

நண்பர் செல்லப்பா அனுப்பிய காணொளிக்குக் கவிதை!

நரம்பற்ற நாவாலே கண்டபடி இங்கே

வரம்பின்றிப் பேசுவதே மாந்தர் இயல்பு!

நரம்பெடுத்துக் கூடுகட்டும் நேர்மறைப் போக்கே

பறவையின் வாழ்க்கை இயல்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் கவிஞர் மோகனசுந்தரம் கருத்துப் பரிமாற்றம்:


Mohanasundaram:

கேடுகெட்ட மாந்தரெலாம் கூவுகிறார் வீடிலையாம்


கூடுகட்டும் இப்பறவை பார்.


பொழிப்பு மோனை(1,3) 

ஒரூஉ எதுகை(1,4) கூடிய

ஒழுகிசைச் செப்பலோசையில் அமைந்த குறள் வெண்பா.

நரம்பற்ற நாவாலே கண்டபடி இங்கே

வரம்பின்றிப் பேசுவதே மாந்தர் இயல்பு!

நரம்பெடுத்துக் கூடுகட்டும் நேர்மறைப் போக்கே

பறவையின் வாழ்க்கை இயல்பு.


மதுரை பாபாராஜ்


அருமை


Mohanasundaram:

இன்னிசை வெண்பா இனிக்கிறது ஐயனே

தன்னாலே நீருமே தண்பா எழுதுகிறீர் 

உன்போலே நானும் உயர்வான பாக்களை 

என்று எழுது வனோ?.


மதுரை பாபாராஜ்:

மிக்க நன்றி ஐயா

தங்களின் ஊக்கம் இனிமைதான்


இலக்கண வித்தகரே! உங்களைப் போல

எழுத விழைகிறேன்! சொற்களின் எல்லை

அனுமதிக்கும் எல்லைக்குள் என்முயற்சி என்பா!

அடக்கத்தின் பேருரு நீ.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home