Friday, February 18, 2022

புத்தகக் கண்காட்சி 2022


தலைப்பு ஒன்று! கவிதைகள் இரண்டு!


புத்தகக் கண்காட்சி! 2022


ஆகா! மகிழ்ந்தார்! திருக்குறள் வாங்கினார்!

பாகாய் உருகிப் படித்தார் விறுவிறுப்பாய்!

சாகா வரம்பெற்ற தைப்போல் உணர்ந்திருந்தார்!

போகாதோர் வாய்ப்பிழந்தார் இங்கு.


ஆகா! அறிவுச் சுரங்கத்தில் நடந்திருந்தார்!

ஓகோ! புதையலைக் கண்டே வியந்திருந்தார்!

சாகா வரம்பெற்ற தைப்போல் உணர்ந்திட்டார்!

போகாதோர் வாய்ப்பிழந்தார்! சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home