Tuesday, August 30, 2022

வாழ்த்து முருகுக்கு

 அண்ணனுக்குத் தம்பி விருந்தோம்பல்! பாபாவின் வாழ்த்து!


அண்ணன் விநாயகர் வந்து நுழைந்ததும்

தம்பி முருகு விருந்தோம்பல் செய்தேதான்

வள்ளுவத்தை வீட்டில் மணக்கவைத்தார் வாழ்கவே!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் பிறந்தநாள்


நண்பர் IG சந்திர சேகர் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

அகவைத் திருநாள்: 31.08.22

இல்லற முத்துக்கள்: 


மனைவி: 

தமிழச்சி தங்கபாண்டியன்  M.P.

மருமகன்கள், மகள்கள், 

பேரக் குழந்தைகள்

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! மகிழ்ச்சியாய் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பணி ஆற்றுகின்ற

ஆளுமை கொண்ட இணையராய் வாழ்கின்றீர்!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

பொறுமைக்கே வாழ்வு

 பொறுமைக்கே வாழ்வு!


உறுமீன் உரியமீன் சிக்கிடும் மட்டும்

பொறுமையாய்க் காத்திருக்கும் கொக்கு-- உறுமீனோ

வந்ததும் அப்படியே கவ்விப் பிடித்துவிடும்!

என்றும் பொறுமைக்கே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


எங்கே திருப்தி?

 எங்கே திருப்தி?


செருப்பில்லை கால்களுக்கு என்றேங்கும் நண்பா!

இருகால்கள் இல்லாத நண்பரைப்பார் அங்கே!

இருப்பதில் திருப்தியே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


மகிழ்ச்சியும் சோர்வும்

 மகிழ்ச்சியும் சோர்வும்!


உள்ளக் கடலில் மகிழ்ச்சி அலையினங்கள்

துள்ளிவந்தால் துள்ளலாம் பொங்கும் அலைகள்போல்!

உள்ளம் உளைச்சலிலா? துள்ளாமல் சோர்ந்துவிட்ட

வெள்ளலைபோல் மாறிவிடும் சொல்.


மதுரை பாபாராஜ்

Monday, August 29, 2022

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


வாழ்க்கை, பருத்தித் துணிகளைப் போன்றது!

நீரென்னும் துன்பத்தில் மூழ்கவைத்தால் அத்துணியோ

தோள்வலிக்க  நாளும் கனமாகும்! அத்துணியை

வாழ்வில் மகிழ்ச்சியென்னும் காற்றில் பிடித்திருந்தால்

லேசாகும் இன்புறலாம்! வாழ்வின் தருணத்தை

நாமும் அனுபவிப்போம் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, August 28, 2022

புகழும் தூசியும்

 புகழும் தூசியும்!


ஊரும் உலகமும் நாடும் புகழலாம்

பார்போற்ற பல்லாண்டு வாழ்கவென்றும் வாழ்த்தலாம்!

போகின்ற போக்கில் குடும்பத்தார் தூற்றிவிட்டு

தூசியாகத் தட்டுவார் சொல்.


மதுரை பாபாராஜ்

Wednesday, August 24, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நேர மதிப்பை உணர்ந்தவர்கள் தங்களைச்

சார்ந்து நடக்கும் பணிகளை ஆர்வமுடன்

தன்முனைப்பால் செய்தே நிறைவேற்றப் பார்ப்பார்கள்,!

என்றும் இலக்கே குறி.


மதுரை பாபாராஜ்

 

மீண்டும் வருமோ?

 மீண்டும் வருமோ?


அமைதி தவழ்ந்திருந்த வாழ்க்கைக் கடலில்

அமளிப் புயலடித்துக் கூத்தாடும் கோலம்!

உளைச்சல் இதயத்தில்! மீண்டும் அமைதி

தவழ்ந்தே தழைக்குமா? சாற்று!


மதுரை பாபாராஜ்

Tuesday, August 23, 2022

Happy b'day Adhitya


HAPPY BIRTHDAY

Selvan G.S. Adhitya!

24.08.2022


YOU ARE A TEEN AGER!

A WONDERFUL DAY INDEED!


YOUR RESPONSIBLE LIFE 

STARTS FROM TODAY!


RESPECT YOUR TEACHERS

THEY ARE YOUR REAL SCULPTORS!


THEY INCULCATE CHARACTER 

AND QUALITY DAILY!


YOUR PARENTS' AND ELDERS' BLESSINGS WILL GUIDE YOU

PROPERLY AND POSITIVELY!


YOUR FRIENDS' PARTICIPATION 

IMPROVES YOUR STUDY AND PLAY!


BE GOOD AND DO GOOD!

AWAKE! ARISE! STOP NOT 

TILL THE GOAL IS REACHED!


VALIANT SAINT VIVEKANANDAR SAID!

FOLLOW  THIS  PRINCIPLE


BEWARE OF YOUR

FREEDOM WITH RESPONSIBILITY!


BLESSINGS FROM

MADURAI BABARAJ

VASANTHA



 

 

சீரிழந்த வாழ்க்கை

 சீரிழந்த வாழ்க்கை!


ஒருசிலருக்கு இப்படியும் உண்டு!


ஊரறிய உற்றார் உறவறிய இவ்வுலகில்

யார்யாரோ எப்படியோ வாழ்கின்றார் கூடித்தான்!

தேரொன்றோ அச்சொடிந்து நின்றதைப்போல் வாழ்க்கையிங்கே

சீரிழந்து நிற்பதேனோ? செப்பு.


மதுரை பாபாராஜ்

Monday, August 22, 2022

மறக்கமுடியாத புள்ளி

 மறக்கமுடியாத புள்ளி!


என்ன நினைத்தாலும் புள்ளிக்குள் மீண்டுவந்தே

என்னை நிறுத்தும் நினைவுகளை என்னென்பேன்!

உள்ளம் மறக்கத் துடித்தும் நினைவுகளோ

புள்ளிக்குள் தள்ளும் நகைத்து.


மதுரை பாபாராஜ்

Sunday, August 21, 2022

பறவைகளின் நுண்ணறிவு


பறவைகளின் நுண்ணறிவு!


எண்ணற்ற குப்பைகள் கீழே கிடந்தாலும்

தங்களுக்குக் கூடுகட்ட என்னவேண்டும் என்றுதான்

இங்கே பறவைகள் தேர்ந்தெடுக்கும்

அத்தகைய

நுண்ணறிவு பெற்றதை எண்ணி வியக்கின்றேன்!

மண்ணக அற்புதங்கள் பார்.


மதுரை பாபாராஜ்

வேடிக்கை ஏன்?

 வேடிக்கை ஏன்?


வாழ முடியவில்லை! சாக மனமில்லை!

பூனை இரையெலியை விட்டுப் பிடிக்கின்ற

கோலம்போல் வாழ்க்கை உளைச்சல் வலைவீசி

வேடிக்கை பார்ப்பதும் ஏன்?


மதுரை பாபாராஜ்


Friday, August 19, 2022

முற்பிறவி யாரறிவார்?

 முற்பிறவி யாரறிவார்?


சாமியைக் கும்பிடு துன்பம் வராதென்றார்!

சாமியைக் கும்பிட்டும் துன்பங்கள் வந்தன!

ஏனென்று கேட்டாலோ முற்பிறவிக் கர்மவினை

தானென்றே சொன்னார் நகர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


இயற்கையுடன் வாழ்தல் வெகுமதிதான்! நாமோ

கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்!

இலக்குநோக்கிச் செல்தல் அறிவு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, August 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எப்படித்தான் இங்கே புயலுடைய  தாக்கமுடன்

வேகம்  இருந்தாலும் நாமோ அமைதியாய்

வாழ்ந்தாக வேண்டுமே! வாழ்விலும் சூழ்நிலைகள்

தாக்கினாலும் நாமோ இலக்கை அடைவதற்கு

ஊக்கமுடன் வாழவேண்டும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, August 17, 2022

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதற்குக் கவிதை:


விமர்சிப்ப தைவிட்டே ஊக்கப் படுத்து!

கணிப்பதை விட்டே புரிந்துகொள்தல் நன்று!

முனைப்பினைக் காட்டவேண்டும் காத்திருக்க வேண்டாம்!

உயர்த்துகின்ற மூவகைப் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, August 16, 2022

உப்போ உப்பு

 கடிதோச்சி மெல்ல எறிக

 சமையலில் உப்போ உப்பு!


என்சமையல் எப்படி? என்றாள் மனைவிதான்!

அன்பே! அருமைதான் உன்சமையல்! ஆனாலும்

உன்னன்பைப் போல அளவின்றி உப்பைநீ

அன்பாய்க் கலந்துவிட்டாய்! என்செய்ய? எப்படியோ

உண்டேன்! நெளிந்தேன்! பொறுத்து.

மதுரை பாபாராஜ் 



Vovemayavaramban: அன்பின் மிகுதியால்

நின்பால் கொண்டமையலால்

மயங்கினேன்! 

மிகுந்திருந்த உப்பின்சுவை

சமையலில்!

அறியாது உண்டேன்

அளவிற்கடந்து!

அன்பிற்கும் உண்டோ

அடைக்கும் தாழ்!

இனிக்கும் இணையருக்குண்டோ

ஈடு இணை!


தென்காசி கிருஷ்ணன்:

அதிக உப்பிட்ட மனைவியை உள்ளளவும்

உள்ளத்தில் கொள்ள

வேண்டும்..ஐயா.


தெ.கி.

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நமக்கோ நடைமுறை ஒன்றிருக்க வேண்டும்!

சவால்கள் எதுவந்த போதிலும் ஏற்றே

இலக்குகள் நோக்கியே மாற்றி அமைக்க

நமக்குத் தெரியவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Monday, August 15, 2022

முருகேசன் -- பாபா



  Murugu: ஆகஸ்ட் மாதம்

2017 ஆம் ஆண்டு..🙏🤝🙏

[Madurai Babaraj: அருமை

மலரும் நினைவுகள்!


சென்றன ஆண்டுகள் ஐந்து! நினைவிலே

நின்றது அகங்கனிந்த நட்பு.


மதுரை பாபாராஜ்

ரவி அனுப்பியதற்குக் கவிதை


மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக்கவிதை!


காலத்தில் உங்கள் மனவேற் றுமையையோ

நீங்கள் சரிப்படுத்த வில்லையென்றால் வாழ்க்கையில்

காலமெல்லாம் என்றும் விலகிநிற்க வைத்துவிடும்!

வேற்றுமையில் ஒற்றுமையே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

எப்பக்கம் செல்ல?

 எப்பக்கம் செல்ல?


இப்பக்கம் போய்ப்பார்த்தேன் முள்வேலி போட்டிருந்தார்!

அப்பக்கம் போய்ப்பார்த்தேன் கற்சுவ ரால்தடுத்தார்!

இப்பக்கம் அப்பக்கம் இன்றி நடுப்பக்கம்

சென்றால் புதைகுழிப் பாதை வரவேற்க

எப்பக்கம் நான்செல்ல? கூறு.


மதுரை பாபாராஜ்


திருந்துங்கள் திருத்துங்கள்

 திருந்துங்கள்! திருத்துங்கள்!


காலைப் பொழுதில் புலனத்தைப் பார்த்தாலோ

சூள்கொட்ட வைக்கின்ற வண்ணம் அறிவுரைகள்!

பார்த்துப் படிக்கவைப்போர் தங்களை அவ்வண்ணம்

மாற்றித்தான் வாழவேண்டும்! வாழ்ந்தால் அவரவர்

வாழ்க்கை அருமைதான் சொல்.


மதுரை பாபாராஜ்

Sunday, August 14, 2022

நண்பர் அன்பு வாழ்த்துகள்


 அருமை அருமை

தங்கள் தமிழ் தொண்டு வணங்க வேண்டியது ! நாங்கள் பாராட்டினால் ,அது எங்களுக்கு தான் பெருமை !  ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மாற்றலாம் சிறிது ஆங்கில அறிவு இருந்தால்,  ஆனால் தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் மாற்றுவது அத்தகை எளிது அல்ல ! (Sri Tamil eayalan sir)

சொல்ல கேட்டு பிரமித்து போனேன்! வாழ்க !பல்லாண்டு ! வளர்க !உன் தமிழ் தொண்டு !

Anbu

Great achievement indeed Sir. 👍👍👍

Rajkumar jothi

தமிழ் இயலன் ஐயா அவர்கள் இலக்கியத் திறனும் பேசும் திறனும் ஒருங்கே பெற்றவர்கள். அன்னார் அவர்கள் தங்களது இலக்கியங் பங்களிப்பினை வியந்து பாராட்டியதைக் கேட்டு நான் பெருமகிழ்வெய்தினேன்.

வாழ்க பல்லாண்டு

வளரட்டும் தங்கள் தொய்வில்லா தமிழ்த் தொண்டு.

தென்காசி கிருஷ்ணன்

Saturday, August 13, 2022

பேரன் கேட்டால்


பேரன் கேட்டால்!


பேரன் இமய மலைதன்னைக் கேட்டாலும்

ஆர்வமுடன் தாத்தா பெயர்த்தெடுத்தே தந்திடுவார்!

பேரன் வரைவதற்கு மேசை தரவேண்டும்

ஆர்வமுடன் கேட்டதும் தாத்தாவோ மேசையை

ஆசையுடன் கொண்டுபோய் வைத்துவிட்டார் வீட்டிலே!

பாசமே தாத்தாவின் தூது.


மதுரை பாபாராஜ்

 

Thursday, August 11, 2022

பவளவிழா நாயகர் ஐயா மோகனராசு


பவளவிழா நாயகரே வாழி!


மதிப்பிற்குரிய மோகனராசு ஐயா அவர்களுக்கு வாழ்த்து!


திருக்குறளே மூச்சாக பேச்சாக வாழும்

திருக்குறள் தூயராம் மோகன ராசு

பெருமையை இவ்வுலகே நன்கறியும்! நாளும்

திருக்குறள் தொண்டாற்றும் ஐயா வளமும்

நலமும் நனிசூழ நூறாண்டு வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, August 10, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒன்றாய்ச் செயல்பட்டுச் சாதிக்க ஏலுமென்றால்

இங்கே தனியாக நேரத்தை வீண்டிக்கும்

எண்ணமே கூடாது! வேலையைக் கூட்டாக

ஒன்றுபட்டுச் செய்தே இலக்கை நிறைவேற்று!

என்றும் குழுவுணர்வே நன்று.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, August 09, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


.அற்புத மற்றும் அழகான இவ்வுலகில்

நம்மிருப்பு என்பதற்கு ஏதோ குறிப்பிட்ட

ஒன்று குறிக்கோளாய் உள்ளது! நாமிங்கே

இந்தநாளின் அந்தக் குறிக்கோள்தான் என்னவென்றே

இங்கே குறிப்பிட வேண்டும்பார்! இவ்வுலகில்

நாம்வாழும் வாழ்வின் பொருளை இலக்கை

உறுதிசெய்தல்  நம்கடமை யாம்.


மதுரை பாபாராஜ்

வீஓவி திரு ரமேஷ் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


வீஓவி திரு ரமேஷ் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


மாசு படிந்த மனமிங்கே சாக்குபோக்கில்

மூழ்கியே தத்தளிக்கும்! மாசற்ற உள்ளமோ

தீர்விலே நீச்சல் பயின்றேதான் வெற்றியில்

நாளும் திளைக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

பொருள்கள் இங்கே! உறவுகள் எங்கே?


பொருள்கள் இங்கே! உறவுகள் எங்கே?


செய்க பொருளை எனச்சொன்னார் வள்ளுவர்

செய்க பொருளைமட்டும் என்றெங்கும் சொல்லவில்லை!

மக்கள் பொருளைமட்டும் ஈட்டி உறவுகளை

விட்டுவிடும் கோலத்தைப் பார்.

மதுரை பாபாராஜ்

சி ஆர்.

வள்ளுவர் குடும்பம்

ஆம் பாபா.. வள்ளுவரின் பொருள் ஈட்டும் நோக்கம்.. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்... தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.. ஆனால் இன்று.. 

அன்பை விதைக்கச் சொன்னார்..

அருளாய் பரிணமிக்கும் என்றார்.,

 

நண்பர் கணியன்


நண்பர் கணியன்!


கணியன் கவிதை சொரிவிப்பார்! நன்கு

கவிதை விவரிப்பார்! தப்பை  எரிவிப்பார்

வேற்றுமை தன்னை பிரிவிப்பார்! நண்பரின்

ஆற்றலே ஆற்றலென்று சாற்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


நலமாக உள்ள நடைமுறையை நாளும்

உளமாறப் பின்பற்றி வாழவேண்டும்! மேலும்

செயல்களுக்குப் புத்தம் புதிய வடிவம்

வழங்கியே சேர்க்கவேண்டும்! அந்தச் செயலே

மனதில் திருப்தி  தரும்.


மதுரை பாபாராஜ்

 

Monday, August 08, 2022

பிரசாந்த் மருத்துவமனைகள்


பிரசாந்த் மருத்துவமனை சார்ந்த அனைவருக்கும் நன்றி!


மருத்துவர் மதுசூதனன் குழுவினர்!


நலமின்றி இருந்தவர் மனைவி

திருமதி பா. வசந்தா


அறை எண் 1001


04.08.22-- 08.08.22


மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளும்

கருத்துடன் தங்கள் கடமைகளைச் செய்தே

அருமை சிகிச்சை அளித்தனர்! நாங்கள்

திருப்தி அடைந்தோம் மகிழ்ந்து.


பராமரிப்பு மற்றும் உணவுத் துறையில்

இருப்பவர்கள் எல்லாம் சுணங்காமல் 

தங்கள்

கடமைகளைச் செய்தார் முகமலர்ந்தே!

நன்றி!

அகங்குளிர நன்றிசொன்னோம் இன்று.


காணும் இடமெல்லாம் செந்தமிழ்ச் சொற்களைத்

தேனாய்ப் பருகிக் களித்தேன்! அகமலர்ந்தேன்!

தேனமுதப் பைந்தமிழ்ச் சொல்லாக்கம்

அற்புதம்!

தீந்தமிழ் வாழும் நிலைத்து.


மதுரை பாபாராஜ்

9003260981


 

Saturday, August 06, 2022

தமிழய்யா முருகு


தமிழய்யா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மருதநிலக் காட்சியிங்கே கண்ணைப் பறிக்க

கதிர்களோ தென்றலில் கூத்தாட்டம் போட

இதைக்கண்டு தென்னை ரசித்திருக்க, வானம்

அகங்குளிரும் கோலத்தைக் காட்டவே, உள்ளம்

பறிகொடுத்தேன் பார்த்து மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

ராமன் இல்லம்


மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு வாழ்த்து!


ராமன் இல்லம்!


தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் இல்லத்தைச் சீர்படுத்திக்

கண்குளிரத் தங்களுக் கேற்ப வடிவமைத்துப்

பண்பாளர் நற்குடும்பம் வாழ்கிறது! வாழ்வாங்கு

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

கைபேசி


நண்பர் மும்பை சுப்ரமணியன் அனுப்பியதற்குக் கவிதை!


கைபேசி!


தொலைதூரம் உள்ளவரைப் பக்கத்தில் காட்டும்! 

அருகில் இருப்போர் தொலைவில் அமர்ந்தே

இருப்பவர்போல்  நம்மை விலக்கியே வைக்கும்

நிலையெடுக்கும் காட்சியைக் காண்.


மதுரை பாபாராஜ்

 

Friday, August 05, 2022

சிகிச்சை ஒன்றே இலக்கு

 சிகிச்சை ஒன்றே இலக்கு!


நோய்வந்து தாக்குமட்டும் தன்மானம் மானமெல்லாம்!

நோய்வந்தால் எல்லாம் பறந்துவிடும்!

யார்யாரோ

நோய்தீரப் போரிடுவார்! சாதிமதம் பார்க்கமாட்டார்!

நோய்சிகிச்சை ஒன்றே இலக்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் சுந்தரம்


நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


புண்படுத்தப் பட்டால் துணிச்சல் உருவாகும்!

தப்புகள் செய்தால்தான் கற்றுத் தெளியலாம்!

தோல்வியைச் சந்திக்க வில்லையெனில் நீங்களோ 

வெற்றிகாணல் என்ப தரிது.


மதுரை பாபாராஜ்

 

Thursday, August 04, 2022

மகள் சுபாவுக்கு நன்றி

 பிரசாந்த் மருத்துவமனையில் அம்மாவுக்கு அறுவைசிகிச்சை!


நாள் 04.08.22


மகள் திருமதி சுபா ரவி எனக்காக கொண்டுவந்த இரவு உணவு!


இரவு உணவாக மல்லிகைப்பூ இட்லி

அருமைச் சுவைகொண்ட தேங்காயின் சட்னி

இனிப்பான சர்க்கரை என்றே சுபாதான்

மனம்மகிழ கொண்டுவந்தாள் பார்த்து.


அப்பா

மதுரை பாபாராஜ்

தொடரின் உரையாடல் வேர்.

 தொடர்களின் வேர்!


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

கலகமூட்டிப் பார்க்கின்ற காட்சித் தொகுப்பாய்

மளமள வென்றே ஊடகத்தில் பேசும்

தொடரின் உரையாடல் வேர்


மதுரை பாபாராஜ்



Wednesday, August 03, 2022

என் வாழ்க்கை

 என் வாழ்க்கை!


என்ன வெடிக்குமோ எப்போ வெடிக்குமோ

எங்கே வெடிக்குமோ என்றே தெரியமால் 

அங்கங்கே கீழே விழுந்து புரெண்டெழுந்து

இன்னும்நான் ஓடுகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


மகிழ்ச்சியை நாளும் உறுதிசெய்ய நாமோ

தொடர்ந்து முயலவேண்டும்! இங்கே செயலோ

பணிக்களமோ ஏதேனும் ஒன்றாய் அமையும்!

சிலநேரம் இங்கே சவாலாகும் ஆனால்

கவனம் தொடரவேண்டும் பார்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, August 02, 2022

பின்னணி

 வாழ்வின் பின்னணி!


நோன்பு வழிபாடு எல்லாமே இல்லறத்தில்

சாதகமாய்ச் சூழ்நிலைகள் உள்ளவரை இன்பந்தான்!

பாதகமாய்ச் சூழ்நிலைகள் மாறியே பம்பரமாய்

வாழ்க்கையைச்  சுற்றவைத்தால் எல்லாமே துன்பந்தான்!

சூழ்நிலைப் பின்னணியே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Seven ages of Man translation

 

The Seven Ages of Man


Speech from William Shakespeare’s As You Like It, Act II scene vii


Jaques:  All the world's a stage, 

    And all the men and women merely players: 

    They have their exits and their entrances; 

    And one man in his time plays many parts, 

    His acts being seven ages. At first the infant, 

    Mewling and puking in the nurse's arms. 

    And then the whining school-boy, with his satchel 

    And shining morning face, creeping like snail 

    Unwillingly to school. And then the lover, 

    Sighing like furnace, with a woeful ballad 

    Made to his mistress' eyebrow. Then a soldier, 

    Full of strange oaths and bearded like the pard, 

    Jealous in honour, sudden and quick in quarrel, 

    Seeking the bubble reputation 

    Even in the cannon's mouth. And then the justice, 

    In fair round belly with good capon lined, 

    With eyes severe and beard of formal cut, 

    Full of wise saws and modern instances; 

    And so he plays his part. The sixth age shifts 

    Into the lean and slipper'd pantaloon, 

    With spectacles on nose and pouch on side, 

    His youthful hose, well saved, a world too wide 

    For his shrunk shank; and his big manly voice, 

    Turning again toward childish treble, pipes 

    And whistles in his sound. Last scene of all, 

    That ends this strange eventful history, 

    Is second childishness and mere oblivion, 

    Sans teeth, sans eyes, sans taste, sans everything.


The Seven Ages of Man

SHAKESPEARE

தமிழாக்கம் கவிதை வடிவில்!


உலகமே நாடக மேடையாம்! நாமோ

உலவும் நடிகர்கள்! உள்ளே வருவார்

வெளியிலே செல்வார்! பலவேடம் தாங்கி

ஒருவர் நடிப்பார் நடிப்பு.


அவர்நடிப்போ ஏழு நிலைகளாம் இங்கே!

முணங்கித் தவிக்கும் குழந்தைப் பருவம்!

சுணங்கிச் சுமக்கும் புத்தகப் பையை

சுமந்தேதான் நத்தைநடை போட்டு மனமோ

விருப்பின்றிச்  செல்கின்ற பள்ளிப் பருவம்!

இருபருவம் இப்படித்தான் இங்கு.


இளமைப் பருவம் பெருமூச்சில் ஏக்கம்!

உளம்நாடும் மங்கைப் புருவத்தைக் கூட

கவிதைக் கருவாக்க எண்ணும் பருவம்!

துடிக்கின்ற வீரனாக லட்சியங்கள் ஏந்தி

வெடிப்பான் சினத்திலே மற்றவரைக் கண்டு

பொறாமை உணர்ச்சிகள் பொங்க குமிழிப்

பெருமைக்கு சண்டையிடு வார்.


உலக அனுபவத்தில் வாழ்வதற்குத் 

தேவை

எதுவும் உணர்ந்தேதான் அதற்கேற்ப வாழும்

நடுநிலை வாழ்க்கைப் பருவம் இதுவே!

நிதானத்தைக் காட்டுகின்ற ஐந்து.


ஆறாம் பருவம் தொளதொள கால்சட்டை 

போடுவார்! கண்ணாடி போட்டே இளமையோ

நாளும் உதிர்ந்திருக்க நல்ல குரல்வளம்

போய்விடும்! மீண்டும் குழந்தை உளறல்தான்!

தேய்மான வாழ்க்கைதான் செப்பு.


ஏழாம் பருவம் இறுதிப் பருவந்தான்!

கோலம் மறதியை ஏந்திவர பல்போகும்!

பார்வையும் மங்கும்! சுவைமங்கும்! எல்லாமே

போய்விடும் நாமோ இறுதிப் பயணத்தின்

நாள்களை எண்ணுவோம் இங்கு.


மதுரை பாபாராஜ்


VOVCR:

நல்ல மொழிபெயர்ப்பு கவியாக்கம்..சாரம் குறையாமல் 

ஆங்கிலம் அருமை.. 

தமிழோ அதனினும் அருமையாக உள்ளத்தில் அமர்ந்து கொண்டது.. 


குமிழிப் பெருமை


மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு


துணைவியாரும் இரசித்தார்..