Thursday, February 29, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


தகவல் தொடர்பே மகிழ்ச்சிக்கு வித்து!
அதிகம் அறிந்துகொள்ள இங்கே உதவும்!
நமது நிலைகள் பயணத்தின் பாதை
கவனம் நிலைகொள்தல்  போன்றவை யாகும்!
இலக்குகளைப் பார்த்து நட.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 27, 2024

சொ.ராம்குமார்- பூஜா திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து!

மணமக்கள்: சொ.ராம்குமார்-- பூஜா

நாள்:11.02.24

வாழ்த்துமடல் வழங்குபவர்: 

தமிழய்யா முருகேசன்

 நன்றி ஐயா!

அன்றிருந்து இன்றுவரை வாழ்த்துப்பா தந்துகொண்டே

அன்பைத் தெரிவிப்போம் நாம்.


மதுரை பாபாராஜ்

Monday, February 26, 2024

நண்பர் எழில்புத்தன்

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

சிக்கலை ஆராய்ந்து தீர்க்க பலவழிகள்
உள்ளன! உள்ளதில் உள்ள சிறந்ததை
ஒவ்வொரு வாய்ப்பிலும்
சிந்தித்துத் தேர்ந்தெடுத்தல்
நல்ல வழிமுறை யாம்.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில் புத்தன்


 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

ஏதேனும் ஒன்றினைத் தேடலாம்! அந்தவொன்று
தோதாக இல்லையென நீங்கள் உணரலாம்!
தேவைக்கு நேரத்தில் இங்கே கிடைத்துவிடும்!
ஆர்வமுடன் நம்பித்தான் முன்னேறப் பாருங்கள்!
வாழ்விலே வெற்றி உறுதி.

மதுரை பாபாராஜ்

Thursday, February 22, 2024

பேரன்சுசாந்த்துக்கு வாழ்த்து!


 பேரன் சுசாந்த்துக்கு வாழ்த்து!


பேரன் சுசாந்த்தின் புதிய மகிழுந்து!

ஆர்வமுடன் பெற்றோரும் தந்தே மகிழ்கின்றார்!

வாழ்த்தி மகிழ்கின்றோம் இங்கு.


பாபா தாத்தா

வசந்தா அவ்வா

22.02.24

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!


அடுக்கக சாளரத்தில் வெண்புறா நின்றே

மிடுக்காக காலை வணக்கத்தைக் கூறி

மகிழ்வாய் வியாழன் மலர்ந்ததையும் சொல்லி

அகங்குளிர நண்பர் இராமசாமி அன்பை

மகத்தாக சொன்னதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கந்தான்!
ஒவ்வொரு சூழலும் அப்படித்தான் நாள்தோறும்!
அத்தகைய சூழலை ஒத்து நடக்கவேண்டும்!
உற்சாகத் தோடுநாம் ஒவ்வொரு நாளுமே
சந்தித்தல் என்றும் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 20, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எதைச்செய்த போதும் மகிழ்ச்சியாக செய்க!
இவைகளெல்லாம் நீங்களாக தேர்ந்தெடுத்துச் செய்யும்
செயல்களே என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

மக்கள் மாறமாட்டார்


 மக்கள் மாறமாட்டார்!


தள்ளாடி நான்சென்றேன்! போதையா? என்றனர்!

மெள்ள நடந்துசென்றேன்! வீட்டிலே சொல்லியாச்சா?

எள்ளிநகை யாடினர்! கல்தடுக்கி நின்றுவிட்டேன்!

கண்கள் பொடனியிலா? என்றனர்! நொந்துபோனேன்!

மன்பதை மாறாது! போ.


மதுரை பாபாராஜ்

 

Saturday, February 17, 2024

முதுமையில் தனிமை


 முதுமையில் தனிமை!


குழந்தைப் பருவத்தில் கூட்டமோ கூட்டம்!

சிறுவர் பருவத்தில் கூட்டமோ கூட்டம்!

நடுத்தர மான பருவத்தில் கூட்டம்!

இளமைப் பருவத்தில் கூட்டமோ கூட்டம்!

களப்பணி காண்பதில் கூட்டமோ கூட்டம்!

அலைந்து திரிந்தேதான் ஓயும் முதுமைப்

பருவத்தில் கூட்டம் விலகித் தனிமை

அரவணைக்க வாழ்ந்திருப்போம் இங்கு.


மதுரை பாபாராஜ்


Friday, February 16, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிலதருணம் இங்கே நமக்குக் கிடைத்தால்
அதைநாம்  மகிழ்ச்சியாக மாற்றலாம்  நாம்தான்!
அதையே நினைவிலே நிற்கின்ற வண்ணம்
நமைச்சுற்றி உள்ளோ ரிடத்திலே அன்பாய்
அமைதியாய் இங்கே பழகினால் நன்று!
சுமையின்றி வாழ்தல் நலம்.

மதுரை பாபாராஜ்

இயல்பை உணர்


 

தமிழய்யா முருகு


 ஐயா முருகேசனுக்கு வாழ்த்து!


திருநீறும் குங்குமப் பொட்டும் தலையில்

நரைத்த முடியும் கழுத்திலே துண்டும்

எழுதுகின்ற தூவலும் புன்னகை ஏந்தும்

அரும்புமீசைக் கோடும் முருகேசன் என்ற

தமிழய்யா கொண்ட அடையாளச் சின்னம்!

பெருமையுடன் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Thursday, February 15, 2024

நண்பர் தீத்தாரப்பன்


 நண்பர் தீத்தாரப்பன் அவர்களுக்கு வாழ்த்து!


பதிவைப் படித்துக் கருத்தை எழுதும்

அறிஞராம் தீத்தாரப் பன்தரும் ஊக்கம்

நெறிப்படுத்திச் செம்மைப் படுத்தும்! பதிவர்

மகிழ்வார்! அகங்குளிர்வார் செப்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்களே உங்களை நம்பும் பொழுதிலே
உங்கள் வலிமைமேல் ஆற்றல்மேல் நம்புங்கள்!
ஒவ்வொரு சிக்கலுக்கும் நீங்கள் சிறப்பான
பண்பட்ட தீர்வுகளைக் காண முடியுமிங்கே!
உங்களின் ஆற்றலே சான்று.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் மனதே அமைதி, வசதியாக
என்றுமே வைத்திருந்த போதிலும் எப்போதும்
உங்கள் மனதில் அடைத்துவைத்தல் நல்லதல்ல!
என்றும் அமைதியாக நேர்மறையாய் வாழ்வதும்
இங்கே துணைபுரியும் செப்பு.

மதுரை பாபாராஜ்

நண்பர் பென்னர் மோகன் மகன் திருமணம்


திருமண வாழ்த்துப்பா:

மணமகன் பெற்றோர்:
C.மோகன்- M. காஞ்சனா
மணமகள் பெற்றோர்:
N.முருகா நேரு- M.தீர்த்தம்

மணமகன்:                 
C M.கவின்குமார்.             
மணமகள்:
M.பொன்மயில்(எ) பூர்ணீஸ்வரி

திருமணநாள்: 15.02.24 மதுரை

குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.

தந்தை கணினித் துறையில் வல்லுநர்!
அன்பு மகனும் கணினித் துறையில்
பண்பட்ட ஆற்றலைக் காட்டுகின்ற ஆர்வலர்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பெற்றோரின் ஆசியுடன் உற்றார் நண்பர்கள்
சுற்றத்தார் வாழ்த்திசைக்க பல்வளங்கள் பெற்றேதான்
நற்றமிழ்போல் வாழ்க! வளர்ந்து

மதுரை பாபாராஜ்
வசந்தா




 

என்னடா வாழ்க்கை


 

Wednesday, February 14, 2024

திரு ராஜ்குமார் ஜோதி

திரு ராஜ்குமார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள் : 15.02.24


குறள்நெறி போற்றி உலகத்தார் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


பெற்றோரின் ஆசியுடன் ஜோதியின் அன்புடனும்

முத்தான  மைந்தன் மருமகளின் பேத்தியின்

உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துடனும்

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

மருமகன் ரவி





 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


நம்முடைய பார்வைக்கு ஏற்ப அழகாக

நம்முடைய வாழ்க்கை இருக்கும்! விழிகளின்

வண்ணத்தில் நாளும் தொடங்கி இதயத்தின்

எண்ணத்தில் காணும் நிறைவு.


மதுரை பாபாராஜ்

Monday, February 12, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கமே!
நம்மைத் திரும்பித்தான் பார்க்க, செயல்களை
இங்கே எடைபோட முன்னேற்றந் தன்னைநாம்
என்றும் கணிப்பதற்கும் வாய்ப்பளிக்கும்! மேலுமிங்கே
நாளும் புதியதைச் சேர்த்தேதான் ஊக்குவிக்கும்!
நாளைப் பயன்படுத்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

Saturday, February 10, 2024

நல்லொழுக்கம் போற்றுவோம்

 நல்லொழுக்கம் போற்றுவோம்!


நல்லவழி  நல்லொழுக்கம்  நன்மைகள் உண்டாக்கும்!

கள்ளவழி தீயொழுக்கம் தீமைகள் உண்டாக்கும்!

நல்லொழுக்கம் போற்றப் பழகு.


மதுரை பாபாராஜ்


திரு சண்முகம் - முனியம்மா


 திருமண நாள் வாழ்த்து!

நாள்: 09.02.24


இணையர்:

திரு.சண்முகம் *திருமதி ச. முனியம்மா


குறள்நெறி போற்றி உலகத்தார் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மகனும் மகளும் மருமகனும் சேர்ந்தே

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


பெற்றோரின் ஆசியுடன் சுற்றத்தார் நண்பர்கள் 

எல்லோரும் வாழ்த்தி மகிழ பல்வளங்கள்

பெற்றேதான் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Friday, February 09, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதில் இலக்குவைத்து வேலைசெய்யும் போது
பணிமுறை மாறும்! செயல்திறன் கூடும்!
எதற்கும் இலக்குவைத்தல் வேடிக்கை தானே!
அதைவாழ்வாய் மாற்றி மகிழ்ந்தே திளைப்பீர்!
இலக்கே செயலின் திறன்.

மதுரை பாபாராஜ்

Thursday, February 08, 2024

நண்பர் கோதண்டராமன்


 நண்பர் கோதண்டராமன் அனுப்பியதற்குக் கவிதை!


வெண்மலர் செம்மலர் தம்மை அழகான

கிண்ணத்தில் நீரில் மிதந்திருக்க கண்கவர

நண்பர் வணக்கத்தைக் கூறி அகமகிழ்ந்தார்!

நன்றி நவில்கின்றேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

Wednesday, February 07, 2024

என்னடா வாழ்க்கை?


 என்னடா வாழ்க்கை?

--------------------------------------------------
நானெடுத்த பிறவி இதுதானா?
நாளெலாம் துன்பம் துணைதானா?
தாயே! இதுதான் சரிதானா?
தமிழே! இதுஉன் வரம்தானா?

காட்டுக்குள் அலைவதுபோல் அலைகின்றேன்--நான்
கூட்டத்தில் தொலைந்ததுபோல் அழுகின்றேன்!
வேட்டைக்குப் பலியாடாய் நிற்கின்றேன்!--வறுமைச் 
சாட்டைக்கு விருந்தாகித் துடிக்கின்றேன்!

பாலைக்குள் பயணத்தைத் தொடர்கின்றேன்---சோர்ந்தே
ஆலையில் சக்கையென விழுகின்றேன்!
சோலையும் என்னை வெறுக்கிறதே---தேன்
மாலையும் எனக்குக்  கசக்கிறதே!

வாழ்வினில் நிம்மதி தேய்கிறது---என்
வாசலில் விரக்தி பாய்கிறது!
ஊழ்வினை என்பது இதுதானா?--இந்தத்
தாழ்வுகள் எல்லாம் நிலைதானா?

மதுரை பாபாராஜ்
நூல்:மகிழம்பூ
ஆண்டு:1997

--

Tuesday, February 06, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


திட்டமிட்ட வாறு செயலும் குறிக்கோளும்
மற்றும் இலக்கும்  நடக்கவில்லை என்றானால்
உள்ளுணர்வு காட்டும் வழியிலே ஆர்வமுடன்
செல்தல் துணைபுரியும் செப்பு.

மதுரை பாபாராஜ்

Monday, February 05, 2024

மனைவி வசந்தா


 மனைவிக்கு பாதிப்பு!


தலையிலே பேன்கள் படையெடுத்த தாலே

அலைபாய்ந்த கூந்தலை இங்கே குறைத்தார்

சிகையழகு செய்யும் நிபுணர்தான்! அந்தச்

சிகையழகு போனதே பார்.


ஏற்கனவே சாப்பாடு செல்லும் அளவிங்கே

முற்றும் குறைந்திட்ட காரணத்தால் மேனியோ

சற்றும் பலமின்றி தள்ளாடும் கோலத்தால்

எப்போதும் நாளும் படுத்திருக்கும் காட்சிதான்!

அப்பப்பா பாவம் அவள்.


வலக்கை விரலில் நகச்சுத்தி கண்டோம்!

விரல்வீக்கம் நீங்க மருந்துகள் கட்டி

நலங்காண வைப்பதால் சாப்பாடு உண்ணக்

கலங்குகிறாள் ஊட்டுகிறேன் நான்.


இப்படித்தான் வாழ்க்கையோ இன்று நகர்கிறது!

எப்படியோ ஏக்கமுடன் வாழ்கின்றோம் நாள்தோறும்!

எத்தனை வேதனை இன்று?


மதுரை பாபாராஜ்

05.02.24


நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வெளிச்சத்தின் மூலமோ எப்போதும் உண்டு!
வலிமையுள்ள மூலமாக நீங்களும் உண்டு!
வழிநடத்தும் மூலமாக நீங்கள் இயங்கி
இலக்கை பணியை முடிப்பவ ராகத்
திகழ்வதில்  முந்துங்கள் இங்கு.

மதுரை பாபாராஜ்

வாழ்த்துவோம்


 

கலக்கம்


 

Sunday, February 04, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பையில் தேநீர் அருகில் எலுமிச்சை

சேர்த்தே புதினா இலைகளுடன் காலையில்

வாழ்த்தி வணக்கத்தைக் கூறுகின்றார் மாதவன்!

வாழ்க வளமுடன் இங்கு.


மதுரை பாபாராஜ்

நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து


 

Saturday, February 03, 2024

பொங்கும் பாலும் கோபமும்


 

நண்பர் எழில்புத்தன்

தென்காசி கிருஷ்ணன் வண்ணம்

 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அழகும் தகவலும் ஏந்தும் இயற்கை
யுடனேநாம் நேரம் செலவழிக்க வேண்டும்!
புரிதலும் உங்கள்  செயல்திறனும் இங்கே
வியத்தகு வண்ணமோ மேம்படும் நாளும்!
இயற்கை நமக்கு வரம்.

மதுரை பாபாராஜ்

Friday, February 02, 2024

எழில்புத்தன்-- தென்காசி கிருஷ்ணன்




[உங்கள் கருத்துக்குப் பாவியற்றி நானனுப்ப
தென்காசி நண்பரோ வண்ணமய மாக்கித்தான்
அன்புடன் தந்தே மகிழ்கின்றார் இங்கேதான்!
பண்பாளர் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்
 
அன்பு
ஒன்றே
அனைத்தையும்
உன்னதமாக்கும்.
தென்காசி கிருஷ்ணன்

 

Thursday, February 01, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் மனது அதிகம் விலையுயர்ந்த
மற்றும் உயர்மதிப்பு கொண்டதாம் இவ்வுலகில்!
உள்ளீடாய் தேவையற்ற மற்றும் முக்கிய
மற்றதைத் தங்கி இருக்க விடவேண்டாம்!
குப்பைகள் தங்காமல் பார்.

மதுரை பாபாராஜ்

சொ.ராம்குமார் 02.02.24


 திரு.சொ.ராம்குமார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து:


அகவைத்திருநாள்: 02.02.2024


குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்