Tuesday, May 31, 2022

தாழ்வு

 தாழ்வு!

அவமானந் தன்னை வெகுமான 

மாக்கும்

தவவாழ்க்கை ஒன்றே தலைநிமிர வைக்கும்!

உலகமே வாழ்த்தி வணங்கித்தான் நிற்கும்!

பழிக்குப் பழியென்றால் தாழ்வு.


மதுரை பாபாராஜ்

Monday, May 30, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வெற்றிபெறு வோரை ஒருசில பண்புகள்

மற்ற மனிதரை விட்டிங்கே நாள்தோறும்

முற்றிலும் வேறு படுத்தியே காட்டும்பார்!

உள்ள உறுதி, மனவலிமை, என்றேதான்

அப்பண்பைக் காணவைக்கும்! இப்பண்பு உள்ளவரை

உங்களால் இங்கே முடியா ததென்றேதான்

ஒன்றில்லை என்றும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

Sunday, May 29, 2022

மழலை


இம்மொழி அம்மொழி எம்மொழி யானாலும்

இந்த மழலை மொழிகளுக் கீடாமோ?

அன்பே மொழியாகும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, May 28, 2022

மணநாள் 29.05.22





எங்கள் மணநாள் 29.05.22


சு.பெ.பாபாராஜ்-- வசந்தா இணையர்!


ஆண்டுகள் 47


நாற்பத்தே ழாண்டுகள் இல்லறத்தில் நல்லறத்தை

மூச்சாகப் பின்பற்றி எங்கள் கடமைகளை

ஆற்றலுடன் எல்லைக்குள் பின்பற்றி வாழ்கின்றோம்!

ஆசிகள் வேண்டுகிறோம் இங்கு.


பெற்றோர் பெரியோர்கள் ஆசி மழைபொழிய

சுற்றமும் நட்புகளும் சூழ்ந்தேதான் வாழ்த்திசைக்க

அன்பு மகளும் மருமகனும் உள்ளத்தால்

அன்பு மகனும் மருமகளும் இன்பமுற

சுற்றிநின்று  பேரன்கள் பேத்திகள்

கொஞ்சிநிற்க

பற்றுடன் பார்த்தோம் ரசித்து.

மதுரை பாபாராஜ்

வசந்தா

நண்பர்களின வாழ்த்துகள்:

திரு.சி.ஆர்:

மண நாள்.

வாழக்கையில் புதிதாய் பிறந்த நாள்.

வாழ்விணையருடன் கை கோர்த்த நாள்.

மூத்தவர். 

அனுபவத்தில் 

முதிர்ந்தவர்.. 

அறவழி. 

ஒரே வழி. 

அதுவே பாபா வழி 👍😊💐

நண்பர் IG சேகர்:

இதயம் நிறை வாழ்த்துகள், சார்....

💐💐💐💐💐

VOV GNANASEKARAN:

நாளும் தமிழ் வளர்த்து

நயமாய் இசைபாடி 


நன்நெறி போற்றும்

நல்லதோர் குடும்பமதை

இன்று பல்கலைக் கழகமாக்கிய

இணை வேந்தர்களுக்கு 

இனிய மணநாள் வாழ்த்துகள்.

💐💐


வாழுகின்ற நாளெல்லாம் 

வள்ளுவம் பாடுகின்ற 

வணக்கத்திற்குறிய  இணையர் வாழ்க !

வளமான தமிழே போல்.!!


💐💐🙏🙏🙂🙂


அன்புடன்...

த.ஞானசேகரன்.

[5/30, 12:17] Vovemayavaramban: கவிஞர் பாபாராஜ் - வசந்தா மணநாள் வாழ்த்து!


நாற்பத்து ஏழாண்டு

       பொற்கால இல்லறத்தை

நல்லறமாய் நடத்தி

       நல்லோரைப் பிள்ளைகளாய்

வல்லோரை விழுதுகளாய்

       கல்வி கேள்விகளில்

முதன்மையராய்ப் பெற்று 

       முப்பொழுதும் மகிழ்வாக

இல்லறத்தின் இலக்கணமாய்

       வள்ளுவத்தின் வழிநின்று

இன்பமுடன் வாழும் 

       இனியவர் மதுரகவிபாபாராஜ்

மனைத்தக்க மாண்புடையர்

       இணையர் வசந்தாவை

இன்றுபோல் என்றும்

       இன்புற்று வாழ்கவென்று

நெஞ்சார வாழ்த்துகிறேன்!

        நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்!

வாழ்க! வாழ்க!

       பல்லாண்டு வாழ்க!


வாழ்த்தும்


கோ.இமயவரம்பன்

30.05.2022 

இமயத்தின் வாழ்த்தை ரசித்துப் படித்தோம்

இமயத்தின் நட்பில் திளைத்து.

மதுரை பாபாராஜ்

Dr.Sethu

இனிய மணநாள் வாழ்த்துக்கள்.

இனிமை நினைவுகள் 

இதயத்தில் மலர,

இன்பமும்,நலமும் 

இல்லத்தில் நிறைந்திட

இதயங்கனிந்தநல்வாழ்த்துக்கள்.

VOV ANBU

கருத்தொருமிக்க,

 தம்பதியராய் ,

சுற்றமும் வியக்கும்,

 வாழ்வை காண்பீர்! 

உதாரண தம்பதியராய்,

 ஊரும் போற்ற ,

உறவும் போற்ற ,

இணை பிரியா, வாழ்வினில்,

 நூறாண்டு காலம் வாழ்ந்திட, 

எங்கள் உள்ளம் கனிந்த ,

இனிய திருமண 

நாள் வாழ்த்துக்கள் !

 அன்புடன் அன்பு

பேத்தி சௌந்தர்யா பாலு

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் தாத்தா 🥳💝


திருமதி காந்தி ஆறுமுகம்

Happy wedding anniversary uncle and aunty......

திரு&திருமதி துரைசாமி திருவாசகம்

அன்பர்க்கு

வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும். மிக்க மகிழ்ச்சி. வள்ளுவனின் ஆசியாலும் பகுத்தறிவு பகலவனின் நெஞ்சத்துடிப்புகளின் துணையாலும் இருவரும் வாழ்க வாழ்க பல்லாண்டு. 💐🎂🎁

திரு சண்முகம் முனியம்மா

இனிய திருமனநாள் நல்வாழ்த்துக்கள்  ஐயா

திரு. சிதம்பரம் வாலேஸ்வரன்

[5/29, 08:19] Vocchidambaramvaleswaran:

 இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 💐🙏🏼

Madurai Babaraj: மிக்க நன்றி ஐயா
கப்பலோட்டிய தமிழர் குடும்பத்தின் வாழ்த்தைப் பெறுவதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மகிழ்ச்சி ஐயா🙏

மைத்து அம்மா அப்பா:

[5/29, 08:06] Mythuamma: Happy wedding anniversary  aunty and uncle  vazhtha  vayadhillai vanangugiren  engalai vazthungal  ungal asirwadham eppavum vendum 🌹🤝🎂🌸👏💐

[5/29, 08:07] Mythuamma: Bless  us our family

Jeyaprakash mdu

Wish you a happy wedding day. God bless you both for a still long happy and healthy peaceful life.

SBI 
திருமணநாள் வாழ்த்துக்கள்.
இரா.இலட்சுமணன்.

நண்பர் திரு
💐தங்கள் இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🎁🍫இந்நன்நாளில் தங்கள் மக்களைப்போல் எங்களையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் 🙏🙏

முருகு
🙏🧚‍♀🧚‍♀🧚‍♀🙏
வெண்பா வேந்தர்
மதுரை பாபாராஜ்
வசந்தா
இணையருக்கு
வணக்கங்களும் வாழ்த்துக்களும்
என்றும் அன்புடன் இனிய தமிழுடன்
மு.முருகேசன்
குடும்பத்தார்.

Mr.PSS from London

Dear Baba
Many more happy returns of the day n nice to see the photo of ur family
Stay blessed n happy
Felt happy to talk n greet you from here
🧚‍♀🧚‍♀🎂🧚‍♀🧚‍♀

 Chellappa

என்றும் அன்பும் பாசமும் தொடர வாழ்க பல்லாண்டு.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.🙏

நண்பர் இராமசாமி BSNL

இணையராய் நீவிர் இருவர் சுற்றம் புடை சூழ வாழ்த்தி வணங்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு. ஆசிகளை வேண்டும் 

ராமசாமி ஞானம் இணையர்

🙂🙏

Rohini DDL

Mama,

Wish you a happy wedding anniversary.

May all your ishes, Efforts and Dreams for your family brings success with showers of god's blessings.

May our beloved God bless you abundantly with good health, wealth and wisdom to support your family forever.

Happy Wedding Anniversary To Mama and Athai.

அதிஷ்டராஜ்

இதயங்கனிந்த நல் வாழ்துகள் . வாழ்க பல்லாண்டு .🙏

Sister Jeyasaraswathi

Wish you a very happy wedding anniversary. May God bless you to celebrate many  such wedding anniversaries together with  health and happiness. 💐💐💐🎁🎁🎂🎂🍅🍅🍎🍎🍊🍊

Dear brother Babaraj wish both of you a very happy anniversary 🎉🎂🎁🎉 and God bless both of you have a happy long life 🎉 best wishes 

from Daljit Singh Bamrah

நண்பர் எழில்புத்தன்,பெங்களூரு

இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள் அய்யா. 

எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை வேண்டுகின்றேன்..

அன்புடன் அடிஅடியேன்

அவினாஷ் பெற்றோர்:

இணைபிரியா

தம்பதியினராய்

நூற்றாண்டு காலம்

வாழ்க...இனிய

திருமணநாள் வாழ்த்துகள்..!

தமிழியலன் ஐயா:

நல்வாழ்த்துகள் ஐயா

👏🏼👏🏼👏🏼👏🏼

Ramesh T America

Ramesh T:

தங்களுக்கும் அம்மாவுக்கும் மணநாள் வாழ்த்துகள் ! 💐💐

தங்களின் ஆசீர்வாதங்களை நாடுகிறோம். 🙏🙏

நண்பர் கணியன் கிருஷ்ணன், தென்காசி

வாழ்த்த வயதில்லை.

இருப்பினும் ஆத்ம நண்பர்

ஆகையால்

வாழ்க நோயற்று நீடூழி.

என்னுள்ளம் தங்களையும்

தங்கள் இனிய குடும்பத்

தையும் நினைந்துகொண்டே

இருக்கும் எந்நாளும்.


Friday, May 27, 2022

பொறுப்பதே வாழ்வு

 பொறுப்பதே வாழ்வு!


தொடர்வண்டி போலத்தான் வாழ்க்கைப் பயணம்!

இறங்கும் இடத்தில் இறங்கத்தான் வேண்டும்!

இறங்கும் இடம்வரைக்கும் துன்பம் மகிழ்ச்சி

பொறுத்துத்தான் ஆகவேண்டும்! வாழ்க்கையில் சிக்கல்

அதுபோல போய்விடும் காலம் கனிந்தால்!

அதுவரை சற்றே பொறு.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்கள் எதுவெனினும் நாளும் குறிக்கோள்

எதுவெனினும் முன்னுரிமை வேலையில் இங்கே

எதுவெனினும் என்றும் இலக்குகளை ஒட்டித்

தொடர்ந்திட வேண்டும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, May 26, 2022

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியதற்குக் கவிதை!


பெற்றோர் இறக்கும் பொழுதிலே உங்களின்

கண்ணீர் அவர்களுக்குத் தேவையில்லை! வாழ்க்கையில்

இங்கவர்கள் வாழும் பொழுதில் அரவணைப்பு

அன்பு, மகிழ்ச்சியுடன் அக்கறை புன்சிரிப்பு

என்பவையே தேவையாம்! மண்ணக வாழ்க்கையோ

கண்ணிமைக்கும் நேரந்தான் காண்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, May 24, 2022

மருமகன் ரவி அனுப்பியது


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


கண்ணாடிப் பாத்திரம் காலியாக உள்ளதா?

இல்லை அரைகுறையாய் உள்ளதா? பார்க்கவேண்டாம்!

உங்களிடம் கண்ணாடிப் பாத்திரம் உள்ளதே!

உள்ளே இருக்கிறதே ஏதேனும் என்றெண்ணி

நன்றியுடன் வாழ்தலே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

Monday, May 23, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உண்மையில் நீங்களிங்கே முன்னேற வேண்டுமா?

நன்கு கவனிக்கும் ஆற்றல் கலையினை

என்றும் பழகவேண்டும்! காழ்ப்புணர்ச்சி இல்லாமல்

கற்கவேண்டும்! நீங்கள் சிறந்த முறையிலே

என்றும் உயரலாம் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

அன்பு! அம்பு!

 அன்பு ! அம்பு!


அன்பாகப் பேசுகின்றார் என்றே நெருங்கினால்

அம்பாக மாறித் துளைத்தெடுக்கும் 

வன்சொல்லால்

உள்ளத்தைக் குத்திக் கிழிக்கின்றார்!

துன்புறுத்தி

எள்ளிநகை யாடுவதும் ஏன்?


மதுரை பாபாராஜ்

23.05.22

என்னை எனக்காக மதி

 என்னை எனக்காக மதி!


என்னை எனக்காக இங்கே மதிக்கவேண்டும்!

பொன்னும் பொருளும் மதிப்பின் தராசல்ல!

பக்குவமும் பண்பும் மதிப்பின் எடைக்கற்கள்!

மற்றவை எல்லாமே வீண்.


மதுரை பாபாராஜ்

Sunday, May 22, 2022

கண்ணி வெடிகள்

 கண்ணிவெடிகள்!


இங்கே வெடிக்குமோ? அங்கே வெடிக்குமோ?

என்பதே கண்ணிவெடித் தன்மையாம்!

மண்ணிலே!

நம்வாழ்வில் கூட நடுங்கவைத்துப் பார்க்கின்ற

புண்படுத்தும் சூழல் நிகழ்வுகள் ஏற்படும்!

கண்ணிவெடி போல வெடிக்கும்! பதறவைக்கும்!

கண்ணி வெடியை அகற்றுதல் போலவே

நன்கு கவனித்தே சிக்கலைத் தீர்க்கவேண்டும்!

பண்பட்ட பக்குவமே தீர்வு.


மதுரை பாபாராஜ்

Saturday, May 21, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


இயற்கையுடன் சேர்ந்தே உறவாடும் வாய்ப்பு

நமக்கு இருப்பதால் உற்சாகம் கொள்ள

இமைப்பொழுமும் சோராமல் புத்துணர்ச்சி கொள்ள

வழியுண்டு! வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்ந்தால்

நலமுடன் வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

Friday, May 20, 2022

தூண்டல் நண்பர் ஜெயப்ரகாஷ்


நண்பர் ஜெயப்ரகாஷ் தூண்டுதலால்

விளைந்த கவிதைகள்!


🤗 *இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு

 கிட்டே இருக்கனும்,*


இட்லியைப் போல பளிச்சென வாய்விட்டு

எப்போதும் நாமோ சிரித்தால்தான் நல்லது!

நம்மைத்தான் தீண்டாது நோய்.


*🤗புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்,*


புரட்டிப் புரட்டி எடுத்தாலும் தோசை

முரண்டே பிடிக்காது நாமும் அதுபோல்

பொறுமையாய் வாழ்தல் சிறப்பு.


*🤗உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்,*


உள்ளேயோ ஒன்றுமில்லை! ஆனாலும் பூரியோ

கொள்ளை மகிழ்வுடன்  உப்பி இருக்குமே!

எல்லோரும் வாழ்வோம் மகிழ்ந்து.


*🤗அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்,*


அடையை நுகர்ந்ததும் விரும்புவார் இங்கே

தடையின்றி எல்லோரும்! நாமும் அதுபோல்

பிடித்தவராய் வாழவேண்டும் பார்.


*🤗ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்,*


வடையிலே ஓட்டை இருந்தாலும் பார்க்க

சுவைக்க கவர்ச்சிதான்! நாமும் அதுபோல்

கவர்ச்சியாய்த் தோன்றுதல் நன்று.


*🤗உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்,*


எத்தனைபேர் வந்தாலும்  உப்புமா கைகொடுக்கும்!

அப்படி நாமும் அவசரத்தில் மற்றவர்க்கு

எப்படியும் கைகொடுத்தல் நட்பு.


*🤗பொங்கல் மாதிரி குழைவா பேசனும்*


பொங்கலைப் போல குழைவா கனிவாக

உள்ளங் கவர உரையாடி வாழவேண்டும்!

பிள்ளைமனம் கொள்தல் இனிது.


*🤗அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்,*


அடிச்சுத் துவைக்கின்ற சூழலென் றாலும்

கதிகலங்கிப் போகாமல் என்றும் பரோட்டா

நிலைபோலத் தாக்குப் பிடி.



*🤗பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்,*


பிரியாணி என்றால் அலைமோதும் கூட்டம்!

பெரியவர் தொட்டுச் சிறியவர்கள் எல்லாம்

விரும்பும் அளவுப் புகழ்பெற்ற தைப்போல்

புகழுடன் வாழ்தலே வாழ்வு.


*🤗சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்,*


சப்பாத்தி என்றால் எளிமைதான்! தேய்த்துவரும்

சப்பாத்தி போல எளிமையைப் பின்பற்று!

எப்போதும் கம்பீரம் உண்டு.


*🤗ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது,*


சுற்றி வளைத்தால் வருமே ஜிலேபிதான்!

அப்படிக் காணும் ஜிலேபிபோல் இன்றி

சுற்றி வளைக்காமல் பேசு.


*🤗நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது,*


நூடூல்ஸ் மாதிரி சிக்கலாக வாழ்வானால்

தேடிவரும் சிக்கலுக்கே சிக்கலைத் தந்துவிட்டால்

ஓடிவிடும் சிக்கல் உணர்.


*பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது,*


பீட்சாவைப் பிய்த்தால் இழுபறிதான்! நாமிங்கே

பீட்சா இழுபறி் போல இருக்கவேண்டாம்!

வாழ்வில் இழுபறியைத் தூற்று.


*🤗புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது,*


புட்டை உதிர்த்தால் அனைத்துமே கொட்டிவிடும்!

உள்ளத்தின் துன்பத்தைக் கொட்டிவிட்டால் எல்லோரும்

எள்ளிநகை யாடுவார் பின்.


*🤗கேசரி மாதிரி இனிமையா பேசனும்,*


கேசரி போலத்தான் இன்சொற்கள் பேசவேண்டும்!

ஊடறுக்கும் வன்பேச்சை நாளும் தவிர்க்கவேண்டும்!

வேடமற்ற இன்சொல்லே பண்பு.


*🤗பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்,*


பாயசம் எல்லாம் சிறப்பான நாள்களில்

ஆர்வமுடன் தந்தே விருந்தளிப்பார்! நம்மையும்

பார்த்ததும் பார்ப்போர் மலைக்கவேண்டும் பாயசம்

வார்த்த சிறப்பாகத் தான்.



*🤗அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்,*


வந்தார் விருந்தினர் திடீரென்றே! ஆறுதலா

கைகொடுக்கும் அப்பளம்! அப்பளத்தைச் சுட்டுவைத்தால்

கைதட்டி உண்பார் களித்து.


*🤗அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்,*


காய்கறிகள் எல்லாம் கலந்தே அவியலை

ஆர்வமுடன் செய்வார்கள்! காய்கறிகள் எல்லாமே

பேதமின்றி ஒற்றுமையாய் உள்ளது  போலத்தான்

பேதமற்ற நாடே சிறப்பு.



*🤗புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்,*


இயற்கைப் பழங்களில் ஆற்றல் அதிகம்!

பழக்கலவை நாமும் பருகினால் ஆற்றல்தான்!

பழக்கலவை ஆற்றல் பெறு.


*🤗ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்,*


பனிக்குழைவில் உள்ள குளிர்ச்சியைப் போல

மனதைக் குளிர்ச்சியாக வைப்பதே நன்று!

மனம்கொதித்தால் என்றுமே கேடு.


*🤗டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்......,*

🤣🤣🤣


மனத்திற்கண் மாசின்றி வாழும் நிலையே

மணக்கும் டிகிரிகாபி சொல்லும் நிலையாம்!

கலப்பட எண்ணம் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கண்ணாடி மற்றும் நிழல்போல நண்பர்கள்

இங்கே அமைந்தால் மகிழலாம்! ஏனெனில்

கண்ணாடி பொய்சொல்வ தில்லை! நிழலென்றும்

நம்மைவிட்டு என்றும் விலகாதே உள்ளவரை!

நட்பின் வலிமை இது.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வண்ணப் பறவையே! நண்பர் அனுப்பிய

அன்பான காலை வணக்கத்தை ஏற்கிறேன்!

நன்றி நவில்கின்றேன்! என்வணக்கம் கூறுகின்றேன்!

உன்னலகே என்றும் அழகு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, May 19, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


லட்சியங்கள் வாழ்வில் உயர்வாக உள்ளபோது

நம்முயற்சி நாளும் கடினமாக நாமெடுத்தே

என்றும் குறையாமல் பார்த்தே இலக்குகளை

வென்றெடுக்க வேண்டும் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன சொல்லோவியத்திற்குக் கவிதை:

மகத்தாய் எதிர்பார்ப்பார் உன்னிடம்! ஆனால்

கவனம் சிதறும் சிலநேரம்!

உங்கள்

கவனம் சிதறாமல் பார்த்தே இலக்கை

அடைய நடைபோட வேண்டும் தினமும்!

அடைவோம் இலக்கை முயன்று.


மதுரை பாபாராஜ்

 

விருந்தோம்பல்


விருந்தோம்பலுக்கு மகிழ்ச்சி!


மணவிழா வெள்ளிவிழா இணையர்

சரவணப் பெருமாள் -- சித்ரா


மணநாள் :19.05.2022 * 

25 ஆண்டுகள்


இல்லற முத்துக்கள்:


தேஜஸ்வினி

ஜோத்ஸ்னாஸ்ரீ


திண்டுக்கல் சென்றவர்கள்:

அம்மா திருமதி.இலக்குமி முத்துவீரன்

மாமா மதுரை பாபாராஜ் 

அத்தை திருமதி வசந்தா பாபாராஜ்

மற்றும்

ஓட்டுநர்: ராசு


கலந்துகொண்டவர்கள்:

அம்மா திருமதி பத்மாவதி ஸ்ரீதர்

மைத்துனர் திரு பூபாலன்

தங்கை: திருமதி ரோகிணி பூபாலன்

மற்றும்

திரு சங்கர்

 


வெள்ளிவிழா கொண்டாட திண்டுக்கல் வந்திருந்தோம்!

அள்ளி வழங்கிய அன்பில் திளைத்திருந்தோம்!

உள்ளம் மகிழ சிரித்தே உரையாடி

நல்விருந்தில் மெய்மறந்தோம் உற்றார்

உறவினர்கள்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


ஆசிகள் பெற்றார்கள்! அன்பளிப்பைத் தந்தார்கள்!

பாசமுடன் நேசமுடன் சேய்போல் கவனித்தார்!

வேடமற்ற பண்புகளைப் பார்த்தே ரசித்திருந்தோம்!

ஈடற்றோர் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

வெள்ளிவிழா மணநாள்


வெள்ளிவிழா இணையர்

சரவணப் பெருமாள் -- சித்ரா

மணநாள் :19.05.2022 * 

25 ஆண்டுகள்

இல்லற முத்துக்கள்:

தேஜஸ்வினி

ஜோத்ஸ்னாஸ்ரீ

 

இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றி

வாழ்கின்ற

பன்முக ஆற்றல்   சரவணனும்  சித்ராவும்

இன்பமுடன் வாழ்க! மகிழ்ச்சியுடன் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


பெற்றோரின் ஆசிகளுடன் உற்றார் உறவினரின்

முத்தான வாழ்த்துடன் பல்வளங்கள் இல்லறத்தில்

எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்வாங்கு வாழியவே!

வள்ளுவம்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.


 

Wednesday, May 18, 2022

மகள் திருமதி உமாபாலு


மகள் திருமதி உமாபாலு அனுப்பிய சொல்லோவியத்நிற்குக் கவிதை!


உன்னுடைய எண்ணமே ஊக்கத்தின் தூண்டுகோல்!

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் ஆகிவிட்டால்

வெற்றிக்கே ஊக்கம் வழிகாட்டும் நாள்தோறும்!

வெற்றிகண்டு வாழலாம் நீ.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, May 17, 2022

மழைத்துளிகள் மேல்தோக்கிச் சென்றன


மழைத்துளிகள் மேல்நோக்கிச் சென்றன!


கண்ணாடி மேலே மழைத்துளிகள் வீழ்ந்தேதான்

அம்மம்மா! கீழ்நோக்கிச் செல்லாமல் மேல்நோக்கிச்

சென்றதைக் கண்டே வியந்தே ரசித்திருந்தேன்!

இந்த நிகழ்வு வியப்பு.


மதுரை பாபாராஜ்

 

ஓட்டுநர் ராசு


நண்பர் ஓட்டுநர் ராசு அவர்களுக்கு வாழ்த்து!


 ஓட்டுநர்  ராசு மழைச்சவாலை ஏற்றேதான்

ஆற்றலைக் காட்டி மழைக்குள்ளே ஊடறுத்துச்

சாலையில் எங்கள் மகிழுந்தை ஓட்டினார்!

ஆற்றலைக் கண்டோம் வியந்து.


மதுரை பாபாராஜ்

 

Monday, May 16, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


புத்தர் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்திடுவோம்!

அன்பினை ஒற்றுமையை நல்லமைதிச் சூழலை

என்றும் மணங்கமழ வைப்போம்! உலகிலே!

இந்த உலகத்தார்  வாழ்க்கை முழுவதும்

பின்பற்றி, காத்து மதிக்கட்டும் பண்புகளை!

அண்ணலை வாழ்க்கையில் போற்று.


மதுரை பாபாராஜ்

 

Sunday, May 15, 2022

மருமகள் உமா பாலு


மகள் திருமதி உமா பாலு அனுப்பியதற்குக் கவிதை!


உளைச்சல்கள் பந்தாடும் நேரத்தில் நாமோ

அமைதியாய் வாழும் நிலையெடுக்கும் ஆற்றல்

இணையற்ற ஆற்றலாம் சொல்.


மதுரை பாபாராஜ்

 

பழமொழிகள்

 மதியாதார் வாசல் மிதியாதே!

(அயலார் இடத்தில்!)


அன்பு மரியாதை இல்லா இடத்திலே

நெஞ்சம் படபடக்க வாழ முடியாது!

பண்பற்ற கூட்டத்தை விட்டே ஒதுங்கவேண்டும்!

அந்த இடத்தைத் தவிர்!


குற்றம் பார்க்கின் சுற்றமில்லை!

(உறவுகள் இடத்தில்!)


விட்டுக் கொடுக்கும் விவேகமான பண்பிருந்தால்

குற்றத்தை நாளும் பெரிதாக்கிப் பார்க்காமல்

சுற்றத்தைக் காக்கும் பெருந்தன்மை போற்றலாம்!

சுற்றமே வாழ்க்கையின் மூச்சு.


மதுரை பாபாராஜ்


மலரகம் சந்திரன் மணிவிழா வாழ்த்து


நண்பர் மலரகம் சந்திரன் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து!


15.05.2022


மலரகம் சந்திரன் புன்னகை மன்னர்!

கலகலப் பாகத்தான் பேசுகின்ற நண்பர்!

உழைப்பு, கடமையே மூச்சாக் வாழும்

நிலைப்பாட்டில் முன்னேறும் சந்திரன் வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இல்லத் தரசி குழந்தைகள் சுற்றத்தார்

நல்லோர்கள் நண்பர்கள் சூழ மகிழ்ச்சியுடன்

பல்லாண்டு வாழ்கவே! நூறாண்டு வாழியவே!

இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்-- முருகேசன்

குடும்பத்தார்


 

Saturday, May 14, 2022

நண்பர் IG சேகர்



 


நண்பர் IG சேகர் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

கிளிவிடு தூது!

கிளிவிடு தூதால் வணக்கத்தைக் கூறும்
கெழுதகை நண்பருக்கு நன்றியும் வாழ்த்தும்
தருகின்றேன் பச்சைக் கிளியே பறந்து
விரைந்தேதான் நண்பரிடம் கூறு.

மதுரை பாபாராஜ்

எங்கள் சுற்றுப்பயணம்


எங்கள் சுற்றுப்பயணம்!

இந்தியாவின் அப்பக்கம் சீனாவின் எல்லைவரை

இந்தியாவின் இப்பக்கம் பாகிஸ்தான் எல்லைவரை

அந்தமான் சிங்கப்பூர் மற்றும் மலேசியா

கண்கவரும் தாய்லாந்து மற்றும் துபாயென்றே

இந்தப் பிறவியில் சுற்றுலா சென்றுவந்தோம்!

இந்தப்  பயணம் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

 

நல்லவழி தேர்ந்தெடு

 நல்லவழி தேர்ந்தெடு!


அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உள்ளவர்கள் இல்லறக்  கூட்டைப் பிரிப்பதற்கே 

சட்டவழி சொல்லி வழிகாட்டு வாரிங்கே!

கொட்டியும் ஆம்பலும் நெய்தலாய் உள்ளவர்கள்

நல்லவழி சொல்லி இணக்கமுடன் வாழவைப்பார்!

நல்லவழி தேர்ந்தெடுத்தால் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


மருத்துவர் சேது பாவா வாழ்க!


மருத்துவர் சேது பாவா கருத்துக்குக் கவிதை வாழ்த்து!

மருத்துவர் சேது மனதில் கவிதை

பெருக்கெடுத்தே ஓடி கவிதைக்கு மீண்டும்

கருத்தைக் கவிதையாய்த் தந்தே மகிழ்வார்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, May 12, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஆற்றல் நெருப்போ நமக்குள் இருக்கிறது!

ஆக்கபூர்வ அந்த நெருப்புதான் சாதிக்க

ஏற்றமுடன் சாதித்துக் கொண்டே இருப்பதற்கு

ஊக்கம் தருகிறது! காத்து வளர்க்கவும்!

போற்றி தொடர்ந்தேதான் சாதனைகள் ஈட்டவும்!

சாதனைக்குத் தூண்டும் நெருப்பு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, May 11, 2022

நண்பர் இராமசாமி

 

நண்பர் இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!

அமைதி மிளிரும் தருணங்கள் இந்நாள்
மனங்கவர  பூத்துக்
குலுங்கட்டும் என்றே
வணக்கத்தைக் கூறும் இராமசாமி நண்பர்
மனங்குளிர வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்


நண்பர. செல்லப்பா


நண்பர் செல்லப்பா. அவர்களுக்கு வணக்கம்!


இயற்கையின் காட்சி இயல்பாக உள்ள

அசையும் படத்தால் வணக்கத்தைக் கூறிப்

படர்கின்ற நட்பினைச் செல்லப்பா தந்தார்!

வளர்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


தரமான நேரத்தை உங்கள்மேல் நீங்கள்

செலவழிக்கும் போது மகிழ்ச்சியுடன் இன்பம்

உலவிடும்! நீங்கள் விரும்புகின்ற ஒன்றில்,

இலட்சிய வேட்கை என்றேதோ ஒன்றில்

மனமோ உறவாடும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, May 10, 2022

மருமகன் ரவி அனுப்பிய படம்


மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலர்கள் அடுத்த மலருடன் என்றும்

உளத்திலே போட்டிபோட

எண்ணுவ தில்லை!

மலர்ந்தே சிரித்திருக்கும் அவ்வளவில் வாழும்!

அடுத்தவரைப் பார்த்தேதான் போட்டி பொறாமை

முறுக்குவது மாந்தரின் போக்கு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


இன்பம் மகிழ்ச்சி இரண்டை இயற்கையோ

பங்கமின்றி அள்ளித் தருகிறது நம்முடைய

எண்ணம் திறமையால் இங்கே புரிந்துகொண்டு

நன்கு முழுமையாய் நாமோ அனுபவித்தே

இன்புற வேண்டும் உணர்


மதுரை பாபாராஜ்.

 

Monday, May 09, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


அன்பான சொற்கள் சுருக்கமாகத் தோன்றலாம்!

அன்பான சொற்களின் நேர்மறைத் தாக்கமோ 

என்றும் முடிவற்ற தாக இருக்குமிங்கே!

அன்பின் வலிமை இது.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை!


தனியாளாய் மூழ்கிக் கடலிலே முத்தைக்

கொணர முடியவில்லை என்றாலோ இங்கே

கடலுக்குள் முத்தில்லை என்றுபொருள் இல்லை!

குழுவாகத் தேடினால் உண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதற்கெடுத் தாலும் உடனடி யாக

உணர்ச்சி வசப்படுதல் உள்ளம் நெகிழ்தல்

இவைகளால் எந்தப் பயனுமில்லை! நாம்தான்

இறங்கிப் பணிசெய்ய வேண்டுமிங்கே! நாளும்

செயலாற்ற வேண்டும்! சமாளிக்க நம்மால்

முடிந்த முயற்சி எடுத்தேதான் தீர்வை

வழங்கவேண்டும்! சோர்வின்றி தான்.


மதுரை பாபாராஜ்

 

Sunday, May 08, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உடலும் மனமும் பலவழியில் நாளும்

தகவலைச் சொல்கிறது! நீங்கள் அதையோ

அடையாளம் கண்டேதான் அந்த மொழியை

தகவலைக்  கற்றுத் தெளிந்தே மதித்தால் 

அவையோ துணைபுரியும் சொல்

.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பிய படம்


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


ஒருசிலர் நற்பண்புச் சான்றோராய் நல்ல 

புகலிடமாய் வாழ்வார்கள்! அத்தகைய நல்லோர்

அகங்குளிரத் தோழராக மாறிவிட்டால் நாளும் 

சிறப்பாக வாழலாம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

Saturday, May 07, 2022

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கிளிமழலைப் பேச்சில் வணக்கத்தைக் கூறும்

கிளியே ரசிக்கின்றேன் உன்பேச்சை நான்தான்!

மகிழ்ந்தளித்த நண்பருக்கு என்வணக்கம் கூறு!

அகநக நட்பது நட்பு.


மதுரை பாபாராஜ.

 

Friday, May 06, 2022

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


தொந்தரவும் சிக்கலும் தாங்கள் வருவதோ

எந்தநேரம் என்றிங்கே சொல்லி வருவதில்லை!

சந்திக்க நாம்தான் தயாராய் இருக்கவேண்டும்!

உங்களது முன்னுரிமை பார்த்துச் சமாளிக்கும்

வண்ணம் இருப்பது நன்று.


மதுரை பாபாராஜ்

Thursday, May 05, 2022

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை


நண்பருக்கு வணக்கம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மரங்கொத்திப் 

பறவை

கொத்துவது 

வாழ்வதற்கு!

மனங்கொத்தி

மனிதர்கள்

கொத்துவது

வாழ்வைச்

சிதைப்பதற்கு!


மதுரை பாபாராஜ்

 

பேரன் நிக்கில்


At Grand Mall 


பாத அழுக்குகளை நீக்கும்  மீன்கள்!


At Grand Mall 


பாத அழுக்குகளை நீக்கும்  மீன்கள்!


பாத அழுக்குகளை மீன்களோ சுற்றிவந்தே

தூய்மைப் படுத்துகின்ற சேவையைப் பார்த்தேதான்

ஆழ்ந்து ரசிக்கின்ற நிக்கிலைப் பாருங்கள்!

பேரனின் ஆர்வத்தைப் பார்.


மதுரை பாபாராஜ்


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நம்மிடம் உள்ள திறமை செயல்திறனை

இங்கே வெளிப்படுத்த தோதான சூழ்நிலை

இல்லாமல் தோன்றலாம்! அத்தகைய சூழலிலும்

நம்திறமை தன்னை வெளிப்படுத்த கற்கவேண்டும்!

நம்திறமை நம்மிடந்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, May 03, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செய்வதை நாமோ மகிழ்ச்சியாய் செய்யவேண்டும்!

உள்ளம் மகிழ்ந்து செயல்பட்டால் மாமலை

போன்ற செயலை விரைவாகச் செய்திடலாம்!

கூடுத லான உளைச்சலின்றி செய்திடலாம்!

வாழ்வில் மகிழ்ச்சியுடன் நல்லமைதி போற்றுவோம்!

தோல்வி நெருங்கா துணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


எதிரும் புதிருமாய் நின்றேதான் பார்த்து

எதிரி வருவாரோ என்றே கவனம்

சிதறாமல் அக்கறை காட்டினாலும் நண்பர்

வணக்கத்தைக் கூறுகின்ற மைனாவே! உங்கள்

கடமை உணர்வுக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Monday, May 02, 2022

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் வணக்கத்தைக் கூறும் பறவையே!

பண்பாளர் நண்பரை நன்றியுடன் வாழ்த்துகிறேன்!

என்வணக்கம் கூறிவிடு நண்பரிடம் சென்றேதான்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


என்பசி தீர்ப்பதற்கு யார்வருவார்? தாகத்தைத்

தண்ணீர் அளித்தேதான் தீர்ப்பதுயார்? என்றேதான்

வண்ணப் பறவையே! ஏங்கினாலும் கூறுகின்றாய்

நண்பர் வணக்கத்தை! நன்றி நவில்கின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வெற்றியும் மற்றும் உறவும் அறிவாற்றல்

கட்டுக்குள் உள்ளதல்ல! ஆனால் அவைகளோ

உங்கள் நடத்தை அணுகுமுறை நேர்மறை எண்ணங்கள் சார்ந்தவை யே!


மதுரை பாபாராஜ்

 

Sunday, May 01, 2022

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


களங்கமற்ற பிள்ளைச் சிரிப்பில் மகிழ்ச்சி

கலந்த அழகை ரசிக்கலாம் பார்த்து!

இயற்கையை விஞ்சும் அழகு.


மதுரை பாபாராஜ்

தங்கள் கவிதை நயத்தையும், திறமையையும் கண்டு மலைத்து ரசிக்கிறேன் பாபா சார்.

🙂🙏👍👏

இராமசாமி

 

நண்பர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு


நண்பர் 

திரு.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வணக்கம்!


கூடை நிறைய மலரனுப்பி அன்புடன்

காலை வணக்கத்தை நட்பு மணங்கமழ

கூறுகின்ற நண்பருக்கு

நன்றி நவில்கின்றேன்!

பாடுகிறேன் பல்லாண்டு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்