Saturday, April 30, 2022

கவனம்சிதறாதே

 

கவனம் சிதறாதே!

பொங்கிவரும் பேரலைகள்! துள்ளும் திமிங்கலங்கள்!
அங்கங்கே பாறை! குமுறும் எரிமலைகள்!
என்றே நிறைந்திருக்கும் ஆழியில் மாலுமி
இந்தத் தடைகளை எல்லாம் புறக்கணித்தே
தன்னுடைய கப்பலை நாளும் இலக்குநோக்கி
கண்ணுங் கருத்துமாய்க் கொண்டுசெல்வார் ஆர்வமுடன்
எண்ணம் சிதறாமல் தான்.

வாழ்க்கைக் கடலில் பலவித சூழ்நிலைகள்
சூழ்ந்தே புரட்டினாலும் நாமோ இலக்குகளை
விட்டே விலகாமல் வெற்றிப் பயணத்தைத்
தொட்டுத் தொடரவேண்டும்! சூழ்நிலைகள் எல்லாமே
விட்டு விலகிவிடும் ஓடி ஒளிந்துவிடும்!
கற்பதே உந்தன் இலக்கு.

மதுரை பாபாராஜ்


Friday, April 29, 2022

இப்படிப் பேசுங்கள்

 இப்படிப் பேசுங்கள்!


அன்பாகப் பேசுங்கள்! வம்பிழுத்துப் பேசவேண்டாம்!

இன்சொற்கள் பேசுங்கள்! வன்சொற்கள் பேசவேண்டாம்!

பண்படுத்திப் பேசுங்கள்! புண்படுத்திப் பேசவேண்டாம்!

புன்னகைத்துப் பேசப் பழகு.


மதுரை பாபாராஜ்



கோபி பாவா


கோபி பாவா நினைவு!


மதுரை சகாயமாதா தெரு வீடு!


கோபி மிதிவண்டி தன்னில் வருவார்கள்!

வேப்ப மரத்தடியில் நிற்கவைத்து வீட்டுக்குள்

பாசமுடன் வந்திடுவார்! அப்பாவைப் பார்த்தேதான்

நேசமுடன் புன்னகைத்து அம்மா இருக்கின்ற

கூடத்தில் வந்திடுவார் அங்கு.


அடுக்களையில் நாங்களெல்லாம் சேர்ந்தேதான் கூடி

அரட்டை அடித்திருப்போம் எல்லோரும் சேர்ந்து !

இரண்டுவீடாய் உள்ளதால் அப்பக்கம் அப்பா

இருப்பார்கள்! இப்பக்கம் நாங்கள் கோபி

அரட்டை அடிப்போம் மகிழ்ந்து.


அக்காலம் மீண்டு வருமோதான்? ஏங்குகிறோம்!

பொற்காலம் என்றுரைப்பேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, April 27, 2022

மதுரை நினைவு


மதுரை நினைவு

மதுரை வெயிலில் மிதிவண்டி ஏறித்

தெருத்தெருவாய்ச் சுற்றிய பொற்காலம் இங்கே

வருமோ? நினைத்தால் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


அமைதியைத் தேடி அலைகின்றோம் நாம்தான்!

அமைதி நமக்குள்ளே உள்ளதை நாமோ

உணராமல் வாழ்கின்றோம்! நாம்தான் அமைதி

மணக்கின்ற சோலை! அமைதியை நாளும்

உணர்வது மட்டுமல்ல மற்றவரை நாடி

உணரவைக்க நம்மால் முடியும் உணர்வோம்!

அமைதிக்கு நாமே பொறுப்பு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, April 26, 2022

ஆதித்யா அம்மா வரைந்த படம்!


ஆதித்யா அம்மா வரைந்த படம்!

கவிதைவாழ்த்து!

இந்திய நாட்டுப் பறவை மயில்படத்தை

வண்ண மயமாய் மதுபானி பாணியில்

எண்ணங் கவர வரைந்துவிட்டார் வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


.உங்களை நோக்கித்தான்  குற்றம் சுமத்துவதாய்

இங்கே உணர்ந்தால் குறைசொல்ல வேண்டாமே!

அன்பைப் பொழியுங்கள்! அந்த மனிதர்கள்

என்றும் குறைசொல்லும் வாய்ப்பை வழங்காமல்

இங்கே இருப்பதற்குக் கற்கப் பழகுங்கள்!

பண்பிலே நேர்மறை கொள்


மதுரை பாபாராஜ்

 

Monday, April 25, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எப்பொழு தெல்லாம் செயல்களைச் செய்வதற்கு

இங்கே முடியுமோ பின்பு செயலாற்ற

என்றே தனியாக நேரமோ தேவையில்லை!

இப்பொழுதே வேலையை நீங்கள் முடிப்பதற்கு

இங்கே முயலவேண்டும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

அம்மா நிலமங்கை துரைசாமி கைவண்ணம.


ஓவியர் அம்மா நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


புத்தரின் சித்திரத்தைப் பார்த்ததும் பேரமைதி

உள்ளத்தில் ஆட்கொள்ளும்! வாழ்வின் சுமைகளோ

துள்ளி வெளியேறும் எல்லா உளைச்சலும்

எங்கோ மறைந்துவிடும் போய்.


மதுரை பாபாராஜ்

 

Sunday, April 24, 2022

இருக்கும் போதே பேசு

 இருக்கும் போதே பேசு!


இருக்கின்ற மட்டுந்தான் பேச முடியும்!

இருப்பவர்கள் இங்கே இருந்தவ ரானால்

இருப்பவர்கள் என்றும் இருந்தவ ரோடு 

உரையாடக் கூடுமா? சொல்.


மதுரை பாபாராஜ்

சௌதி நண்பர் கண்ணன்


சௌதி நண்பர் கண்ணன் அனுப்பியதற்குக் கவிதை!


பாலை வனநாட்டில் ஈச்சமரக் காட்சியுடன்

காலை வணக்கத்தை நட்பு மணங்கமழ

பாசமுடன் கண்ணன் அனுப்புகின்றார் வாழ்த்துகிறேன்!

நேசமுடன் நன்றிசொன்னேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சிலநேரம் கொண்டாட எண்ணும் தருணம்

பலதடைகள் உண்டாகும்! அப்போது நீங்கள்

முயற்சிகள் செய்து புறக்கணித்தால் வாழ்வில்

தலைநிமிர்ந்து வாழலாம் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, April 21, 2022

ஓவியர் அன்பு


ஓவியர் அன்பு அவர்களுக்கு வாழ்த்து!


அன்பு அவர்களின் ஓவிய ஆற்றலில்

ருஷ்யப் புரட்சியின் சிற்பி லெனினவர்

அச்சுருவம் பார்க்க அழகு.


மதுரை பாபாராஜ்

 

மகள் உமாபாலு


மகள் உமாபாலு அனுப்பியதற்குக் கவிதை!


பல்வேறு சூழலை நாமோ சமாளித்தல்

எப்படி என்றேதான் கேட்காதே! சூழ்நிலையில்

எப்படி நம்மைச் சமாளித்தல் என்றுகேள்!

வெற்றிகண்டு வாழலாம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு வாழ்விலே

புன்னகை பூக்க உதவுங்கள்! ஆனாலும்

அந்த ஒருவருள் நீங்களும் என்பதை

என்றும் மறக்கவேண்டாம்  இங்கு.


மதுரை பாபாராஜ்

 

வளைந்து கொடு

 வளைந்துகொடு!


பணிவாக வாழலாம்! கோழைமனம் வேண்டாம்!

நிமிரலாம் ஆனாலும் ஆணவம்  வேண்டாம்!

வளைந்து கொடுத்தால் சிறப்பான வாழ்க்கை!

வளைய மறுத்தால் இழிவு.


மதுரை பாபாராஜ்


Wednesday, April 20, 2022

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

கற்றறிந்த எல்லா முறைகள், செயல்முறைகள்

தம்மை முயன்றே செயல்முடிக்க நின்றாலும்

இங்கே சிலநேரம் நாமோ இயல்பாக

சென்றுவிட முன்வந்தால் தானாய் நிறைவேறும்!

அந்தப் பயனால் கனிந்துவரும் நன்மைகள்

இங்கே சுவைதான் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை:


பகைவர்கள் நண்பராக ஆயிரம் வாய்ப்பை

வழங்கலாம்! ஆனாலும் நண்பர்கள் இங்கே

பகைவராக நாமோ ஒருவாய்ப்பைக் கூட

வழங்குதல் கூடாது உணர்.


மதுரை பாபாராஜ்

 

தமிழியலன் ஐயா


தமிழியலன் ஐயாவுக்கு வாழ்த்து!


வரிவிதிப்பில் உள்ள நெறிமுறையை நன்கு

விளக்கும் பிசிராந்தை யார்பாடல் தன்னை

விளக்கிய ஆற்றலுக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, April 19, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதைச்செய்த போதும் மகிழ்ச்சியுடன் கற்போம்!

வலிந்தே திணித்தாலும் ஆர்வமுடன் ஏற்போம்!

அனுபவித்தே அச்செயலை நாமோ முடித்தால்

மனதில் திருப்தி நமக்கு.


மதுரை பாபாராஜ்

 

யார்பெற்ற பிள்ளையோ?

 யார்பெற்ற பிள்ளையோ?


தூக்க முடியாமல் மூட்டை தலையிலே!

மாற்றி உடுத்தத் துணியில்லை வாழ்விலே!

ஊற்றெடுக்கும் ஏழ்மை! அலைச்சல் தெருத்தெருவாய்!

யார்பெற்ற பிள்ளை இவள்?


கண்ணே கனியே பவளமே என்றெல்லாம்

என்னென்ன சொல்லி வளர்த்திருப்பார் பெற்றோர்தான்!

மண்ணக வாழ்க்கைப் பயணம் தடம்மாற

என்னபாவம் செய்தாள் இவள்?


மதுரை பாபாராஜ்

தமிழியலன் ஐயாவுக்கு வாழ்த்து


ஐயா தமிழியலனுக்கு வாழ்த்து!


மாற்றுத் திறனாளி ஆற்றல் குறைந்ததல்ல

மானிடரே! என்றேதான் வள்ளுவர் கூறிய

வள்ளுவத் தேன்துளியை நண்பர் தமிழியலன்

அள்ளித் தெளித்தார் உணர்.


மதுரை பாபாராஜ்

 

Monday, April 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நல்லதைச் செய்துவாழும் வாழ்வின் சிறப்புகளே

முற்றிலும் வேறுதான்!

உள்ளம் திருப்திகொள்ளும்!

அன்றாட வாழ்விலே அர்த்தமுண்டு!

என்றுமே

நன்னடை போடு இலக்குநோக்கி!

நேர்மறை

எண்ணமுடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் துபாய் ராஜேந்திரன்


நண்பர் துபாய் கம்ப்யூட்டர் ராஜேந்திரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை?


குளம்பியை ஆற்றி டவராவில் ஊற்றி

பிறகதை டம்ளரில் கொஞ்சமாய் மாற்றி

உறிஞ்சி உறிஞ்சி சுவைத்துக் குடித்தால்

மகிழ்ந்தே ரசிப்போம் உணர்.


மதுரை பாபாராஜ்

 

செல்வன் ஆதித்யா அம்மா வரைந்த ஓவியம்


செல்வன் ஆதித்யா அம்மா தீட்டிய ஓவியம்!


WARLI ART DANCE!

வார்ளி கலை நடனம்!


நீலவண்ணப் பூக்களோ செவ்வண்ணத் தொட்டியிலே

பேரழகு சிந்த மலர்ந்திருக்க கைவண்ண

ஆற்றலை நீலவண்ண மங்கை நடனமாக

காட்டி வரைந்தமைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, April 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நேரத்தில் வேலை முடிவடைந்தால் உள்ளத்தில்

வேரோடும் அந்த மகிழ்ச்சி, திருப்தியுடன்

காணுகின்ற இன்பமோ ஏராளம்! ஒவ்வொரு

நாளும் முயலவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை:


அழகான காலைப் பொழுதை ரசிக்க

விடுமுறைநாள் தேவையில்லை! திங்கள் கிழமை

விடியல் அழகைப் பொழியும் ரசிக்க!

சிறப்பான காலைப் பொழுதாய் அமையும்!

அழகின் தொடக்கம் அழகு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, April 16, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சாதிக்க வேண்டுமென்ற உள்ளுணர்வு மட்டுமே

போதாது! நல்ல இலக்குகளை நோக்கியே

நாமிங்கே என்றும் முயற்சியை மேற்கொண்டு

நாமெடுக்கும் அந்த முயற்சி நிலைகளெல்லாம்

நாளும் சரிதானா என்றே சரிபார்த்து

வாழ்தலே ஏற்றம் தரும்.


மதுரை பாபாராஜ்

 

Friday, April 15, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளம் களைத்துத் துவள்கிறதா? ஓய்வெடுங்கள்!

தள்ளி நடுங்கி வெளியேறி ஓடவேண்டாம்!

சந்தித்தால் வெற்றி உணர்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, April 13, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

எதையும் தனிப்பட்ட கோணத்தில் பார்க்கும்

நிலையைத் தவிர்த்தால் தளைகளற்ற வாழ்க்கை

அளவின்றி உண்டு் நமக்கு



மதுரை பாபாராஜ்

 

Tuesday, April 12, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எப்போதும் சிக்கலைப் பார்ப்பதற்குத் தேவையில்லை!

நிம்மதியாய் சூழ்நிலையில் நாள்தோறும் வாழலாம்!

என்னசெய்ய வேண்டுமென்றும் எப்படிச் செய்யவேண்டும்

என்றேதான் சிந்தித்தால்  நம்செயலின் ஆற்றல்கள்

நன்றாய் உருவெடுக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Monday, April 11, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


காலம் விரைகிறதே என்ற கவலையில்

மூழ்குவதை விட்டுத்தான் நாமோ விரைவாக

காலத்தை முந்தப் பழகவேண்டும்

நாள்தோறும்!

காலத்தை வெல்லப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!

பார்த்ததும் புன்சிரிப்பு, அன்பான வாழ்த்துகள்

வாரம் முழுமையும் உள்ளம் மகிழ்ந்திருக்கும்!

வாழ்வாங்கு வாழவைக்கும் வாழ்த்து

மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


கொள்கைக்கு நின்றால் தனியாய் மரம்போல

உள்ளம் உறுதிபட நில்லுங்கள்! வீழ்ந்தாலோ

மண்ணில் விதையாய் விழுந்து வளர்ந்தேதான்

நின்றுமீண்டும் போராடி வாழ நிமிருங்கள்!

என்றுமே வாழ்வோம் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


முன்னணியில் நம்மையோ லட்சியம்  ஏந்துகின்ற

அந்தநேரம் ஏனோ கவனச் சிதைவுகளும்

உந்தும் உணர்ச்சிகளும் இங்கே புரட்டவேண்டும்?

எங்கும் கவனமுடன் முன்னேற்றம் 

காணவேண்டும்!

வெற்றி உனது இலக்கு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, April 10, 2022

இடபவாகனம்


சித்திரைத் திருவிழா!


இடபவாகனம் இன்று!


10.04.22


திருவிழா மாநகரில் சித்திரை மாதப்

பெருவிழாக் கோலம் மிளிர்கிறது! ஆகா!

திருவிழா அங்கமாய் இன்றோ இடபம்

உருவிலே வாகனம் வந்தகோலம் பார்த்தோம்!

திருவிழா மாநகரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Saturday, April 09, 2022

இன்றைய சூழல்

 இன்றைய சூழல்!


பெற்றோர் பணிக்களம் செல்வதால் இல்லறத்தில்

பெற்றோர் அரவணைப்பும் கண்டிப்பும் இல்லாமல்

உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆயாக்கள்

என்றேதான் அங்கங்கே உள்ளோர் அரவணைப்பில்

இங்கே குழந்தைகள் வாழ்கின்றார்

நாள்தோறும்!

இன்றைய சூழல் இது.


மதுரை பாபாராஜ்

கவிஞர் இரவி


கவிஞர் இரவி அவர்களுக்கு வாழ்த்து!


அகவிழிகள் பாவைப் படித்தே உணர

முகவிழிகள் பாவைப் படித்தே ரசிக்க

முகநூலில் பாவைப் பதிவுசெய்யும் நண்பர்

ரவியின் கவியுணர்வை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

ஐயா்துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

இல்லத்தின் மாடியிலே நான்வந்து தங்கியுள்ளேன்!

வெய்யிலின் தாக்கமும் வெம்மையும் தாகத்தில்

துள்ளவைத்துப் பார்க்கிறது! தானியமும் தண்ணீரும்

உள்ளம் குளிரவே கொண்டுவந்து வைக்கவும்!

என்னுள்ளம் வாழ்த்தும் நினைந்து.


மதுரை பாபாராஜ்

 

Friday, April 08, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!



மெழுகுவர்த்தி இங்கே ஒளிகொடுக்கும் ஆனால்

உருக்குலைந்தே காணாமல் போய்விடும்! பெற்றோர்

ஒளிகொடுத்தே வாழவைப்பார் பிள்ளைகளை!  ஆனால்

ஒளியில் வளர்ந்தோர் வளர்த்தோரை ஏனோ

இருளில் உழலவைப்பார் சொல்?


மதுரை பாபாராஜ்

 

நண்பர் LRC


மாறாத மாசற்ற நண்பர் சந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!


கூடை நிறைய பழங்கள் அனுப்பியே

காலை வணக்கத்தைக் கூறுகின்ற சந்திரனின்

ஆழமான நட்பினை வாழ்த்தி மகிழ்கின்றேன்!

கூடைப் பழங்கள் இனிப்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


அனைத்தையும் செய்வதற்கு நம்மால் முடியும்!

நமது கனவுகள்,சிந்தனைகள் மற்றும் 

தொலைநோக்குப் பார்வை இவைகளை யெல்லாம்

நமைப்பார்த்தே உன்னால் முடியாது தம்பி!

எனச்சொல்ல இங்கே

அனுமதிக்க வேண்டாம்!

முயற்சியே சாதனையின் வேர்.

மதுரை பாபாராஜ்

 

எவரும் பொறுப்பல்ல

 எவரும் பொறுப்பல்ல!


அவரவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்!

தவறவிட்டு நாளும் புலம்புதல் வேண்டாம்!

எவரெனினும் முன்னேற்றம் ஆற்றலால்தான் உண்டு!

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!

எவரும் பொறுப்பல்ல! சொல்.


மதுரை பாபாராஜ்

நண்பர் செல்லப்பா


நண்பர் செல்லப்பா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வெள்ளை மலரனுப்பி உள்ளம் மகிழ்ந்திட

செல்லப்பா நட்புடன் காலைப் பொழுதிலே

நல்வணக்கம் தந்தார் உவந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


என்னதான் திட்டங்கள் போட்டும் சிலநேரம்

சற்றும் எதிர்பாரா வண்ணம் தடங்கல்கள்

வந்துவிடும்! நம்மால் புரிய முடியாது!

நல்லதற்கே என்றுநாம் ஏற்கவேண்டும் வாழ்க்கையில்!

எல்லாமே நன்மைக்கே என்றிருக்க வேண்டுமிங்கே!

தொல்லைகள் நீங்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, April 07, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


அழிக்கவேண்டும் என்றுநீங்கள் எண்ணினால் இன்றே

எதிர்மறைச் சிந்தனையை நாளும் அழித்தே

புதிய மனம்படைத்தே நேர்மறை எண்ணம்

தழைக்க விடவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


தரையில் அமர்ந்த புறாவே! களைப்பா?

களைப்பாலே தாகமா? என்னவேண்டும்? நீரா?

பசியாற வைக்கும் உணவா? முதலில்

வறட்சிக்கு நீரருந்து நீ.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளின் பயணத் தருணத்தை 

இங்கே அனுபவிக்கக் கற்றுணரும் போதிலே

நம்செயலின் ஆற்றல் அளவிங்கே அற்புதமாய்

இங்கே உயர்கிறது !சொல்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, April 06, 2022

மகள் திருமதி உமா பாலு


மகள் திருமதி உமா பாலு அனுப்பியதற்குக் கவிதை வடிவம்!


எதைச்சொல்ல வேண்டும்? அறிவே உணர்த்தும்!

அதையிங்கே எப்படிச் சொல்லவேண்டும்? என்றோ

திறனுணர்த்தும்! எவ்வளவு சொல்லவேண்டும் என்றே

அணுகுமுறை சொல்லும்! அதையும்நாம் பேச்சில்

மனமொன்றிச் சொல்லலாமா? வேண்டாமா? என்றே

உணர்த்திவிடும் ஞானம் உணர்.


மதுரை பாபாராஜ்

 

வளைந்து கொடு

 வளைந்து கொடு!


நடப்பதும் நாளும் கடப்பதும் வாழ்வின்

நடைமுறை யாகும்! புரிந்துகொண்டு வாழ்ந்தால்

உலகில் இயல்பாக வாழலாம்! நாமோ

வளைக்க நினைத்தாலோ வாழ்வே ஒடியும்!

வளைந்து கொடுக்கப் பழகு.


மதுரை பாபாராஜ்


CR இல்லத்திருமண வாழ்த்து


திருமண வாழ்த்துப்பா!


நாள் 5/6.4.2022


மணமகள்: கிருத்திகா

மணமகன்: சதானந்த் விஸ்வநாத்


குறள்நெறி போற்றும் குரிசில் குடும்பம்

இறைநெறி போற்றும் அருமைக் குடும்பம்!

மலர்க்கொடி ராசேந்ரன் செல்வ மகளாம்

கிருத்திகா கைத்தலம் பற்றுகின்ற அன்பர்

சதானந்த் விஸ்வநாத் இல்லறம் ஏற்றார்!

நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

திறமை மிளிர குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

வள்ளுவர் குறள் குடும்பம்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

CR இல்லத்திருமண வாழ்த்துப்பா


திருமண வாழ்த்துப்பா!


நாள் 5/6.4.2022


மணமகள்: கிருத்திகா

மணமகன்: சதானந்த் விஸ்வநாத்


குறள்நெறி போற்றும் குரிசில் குடும்பம்

இறைநெறி போற்றும் அருமைக் குடும்பம்!

மலர்க்கொடி ராசேந்ரன் செல்வ மகளாம்

கிருத்திகா கைத்தலம் பற்றுகின்ற அன்பர்

சதானந்த் விஸ்வநாத் இல்லறம் ஏற்றார்!

நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

திறமை மிளிர குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

வள்ளுவர் குறள் குடும்பம்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

Tuesday, April 05, 2022

மகள் திருமதி உமா பாலு


மகள் திருமதி உமா பாலு அனுப்பியதற்குக் கவிதை!


விரல்கள் அனைத்துமே வெவ்வேறு நீளம்!

வளைந்தால் சமமாகும்! வாழ்வில் அனைத்து

நிலைகளிலும் நாமோ வளைந்து கொடுத்தால்

எளிதாகும் நாள்தோறும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்திறனின் வெற்றி நிலையாய்த் தொடரும்

முயற்சியைச் சார்ந்தது மட்டுமல்ல

நாளும்

சமரசம் செய்துகொண்டே ஒன்று திரட்டி

அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளும் தன்மை

தனையுமே சார்ந்ததா கும்.


மதுரை பாபாராஜ்

 

Monday, April 04, 2022

நண்பர் திருச்சந்திரன்


நண்பர் திருச்சந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!



புண்பட்டோம் என்ற கவனத்தில் வாழ்ந்திருந்தால்

துன்பத்தில் நாளும் உழன்றிருப்போம் வாழ்விலே!

அந்த நிலையளித்த பாடத்தைக் கற்றுணர்ந்தால்

என்றும் வளர்ச்சிதான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

மனக்கவலை மாற்றல் அரிது!

 மனக்கவலை மாற்றல் அரிது!


கவலையே இல்லாத மாந்தரைத் தேடி

அவரிடம் சென்று விசாரித்தேன்! ஆனால்

அவர்கதையைக் கேட்டதும் ஓடினேன் நான்தான்!

இவரென்ன செல்கின்றார் என்றேநான் போனேன்

இவர்கவலை அம்மா! கடலளவு! பார்த்தேன்!

கவலையே இல்லாமல் யாருமில்லை இந்த

உலகத்தில் என்றறிந்தேன் நான்.


வகைவகையாய் இங்கே கவலையை ஏந்தும்

மனிதர்கள் வாழ்கின்றார்! இக்கரைக்குப் பச்சை

நினைக்கின்றார் அக்கரையைப் பார்த்தேதான் மாந்தர்!

மனக்கவலை மாற்றல் அரிது.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்:


கவிதை ஆக்கம்


எந்த அளவுக் குளைச்சலுக்கு நம்மிடம்

தங்க இடமளிப் போமோ உளைச்சலும்

அந்த அளவுக்குத் துன்புறுத்தும்! அவ்விடம்

அன்பு இனிமை பசுமை நினைவுகள்

தங்கித் தழைக்க உரியதாகும் வாழ்விலே!

என்றும் உளைச்சல் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

Sunday, April 03, 2022

இலக்கே குறி


இலக்கே குறி!


அலைகளை ஊடறுத்துச் செல்கின்ற கப்பல்

நிலையெடுத்தே முன்னேறிச் செல்லவேண்டும் நாம்தான்

இலக்குநோக்கி! எந்தத் தடையெனினும் சந்தி!

கலங்காமல் முன்னேறப் பார்.


மதுரை பாபாராஜ்