Tuesday, April 19, 2022

யார்பெற்ற பிள்ளையோ?

 யார்பெற்ற பிள்ளையோ?


தூக்க முடியாமல் மூட்டை தலையிலே!

மாற்றி உடுத்தத் துணியில்லை வாழ்விலே!

ஊற்றெடுக்கும் ஏழ்மை! அலைச்சல் தெருத்தெருவாய்!

யார்பெற்ற பிள்ளை இவள்?


கண்ணே கனியே பவளமே என்றெல்லாம்

என்னென்ன சொல்லி வளர்த்திருப்பார் பெற்றோர்தான்!

மண்ணக வாழ்க்கைப் பயணம் தடம்மாற

என்னபாவம் செய்தாள் இவள்?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home