Wednesday, April 06, 2022

மகள் திருமதி உமா பாலு


மகள் திருமதி உமா பாலு அனுப்பியதற்குக் கவிதை வடிவம்!


எதைச்சொல்ல வேண்டும்? அறிவே உணர்த்தும்!

அதையிங்கே எப்படிச் சொல்லவேண்டும்? என்றோ

திறனுணர்த்தும்! எவ்வளவு சொல்லவேண்டும் என்றே

அணுகுமுறை சொல்லும்! அதையும்நாம் பேச்சில்

மனமொன்றிச் சொல்லலாமா? வேண்டாமா? என்றே

உணர்த்திவிடும் ஞானம் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home