Friday, September 30, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்



 


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியம்

[தினமும் தினங்களோ வந்துபோகும் இங்கே!
தினத்தை தினம்தின மாகப் பிரித்தே
தினமாக்கிப் பார்த்தலோ ஏன்?

மதுரை பாபாராஜ்

[10/1, 08:48] VOVDuraisamythiruvasagam: அருமை. ஆசுகவிக்கு நல்வாழ்த்துகள். 👍👏🙏


Thursday, September 29, 2022

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


மனிதாபி மானமுடன் வாழ்வது மட்டும்

தனிமனித வாழ்வல்ல! நன்றியுடன் நாளும்

விழிப்பது, நன்றியுடன் வாழ்வது மற்றும்

துயில்கொள்ளப் போகும் பொழுதுநாம் நன்றி

உணர்வுடன் எண்ணுதல் போன்றவை யெல்லாம்

தினம்நாம் கொடுக்கும் பரிசு.


மதுரை பாபாராஜ்

Wednesday, September 28, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


குறித்த செயலைக் குறிப்பிட்ட நேரம்

முடிவதற்கு முன்னரே செய்துவிட்டால் அந்த

மகிழ்ச்சியே இன்பந்தான்! ஆற்றல் திருப்தி

அதிகச் செயல்களைச் செய்ய நமக்குக்

கிடைத்திருக்கும் நேரம் அனைத்தும் அருமை!

நடைமுறையில் காண்போம் நிறைவு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, September 27, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


.நீயோ இலக்குமேல் மட்டும் கவனத்தை

வைக்காதே! நாளும் அமல்படுத்த வேண்டுமிங்கே!

முன்னேற்றம் மட்டும் செயல்பாடு மீதும்வை!

முன்னேறு நம்இலக்கைப் பார்த்து.


மதுரை பாபாராஜ்

 

Monday, September 26, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியம்!


பொறுப்பை எடுத்தே அதிகாரம் கொள்வோம்!

இதுவே உனது இலக்கை அடைய

உறுதுணை யாகும்! இதைவைத்தே சாதி!

எதையுமே ஒத்திவைத்தல் நல்லதல்ல! எண்ணித்

துணிகச் செயலைத்தான்  இங்கு.


மதுரை பாபாராஜ்

 

கடமை மறந்தனர்

 கடமை மறந்தனர்!


கூட்டுக்குள் சேய்ப்பறவை! பெற்றோர் பறவைகள்

கூட்டைவிட்டுச் சென்றுவிட்டார்! தாத்தாவும் பாட்டியும்

கூட்டுக்குள் ஆர்வமுடன் பார்ப்பதற்கு வந்துவிட்டார்!

வேற்றுமையை எண்ணிக் கடமை, பொறுப்புகளைக்

காற்றில் பறக்கவிட்டார் காண்.


மதுரை பாபாராஜ்


சீட்டுக் கிளியும் கைபேசியில் விரல்களும்!


சீட்டுக் கிளியும்! கைபேசியில் விரல்களும்!


கூண்டைத் திறந்தே கிளியை வரச்சொன்னார்!

தாண்டியே வந்தது! சீட்டுகளை ஒவ்வொன்றாய்

ஆவலுடன் பார்த்தே எடுத்ததே தேர்ந்து!

தொடர்பெண்ணைத் தேடவே கைபேசி தன்னைத்தான்

ஆவலுடன் பார்த்தேதான்  தேடி எடுத்திடுவார்

பாசமுடன் தானறிந்த மாந்தருடன் பேசிடுவார்!

சீட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் ஜோசியரின் அக்கிளியும்

தேடுகின்ற நண்பரின் எண்வரும் மட்டுமிங்கே

தேடும்  விரல்களும் ஒன்று


மதுரை பாபாராஜ்

 

Saturday, September 24, 2022

தாய்ப்பாசம்

 தாய்ப்பாசம்!


கூட்டுக்குள் குஞ்சுப் பறவைகளை விட்டுவிட்டுத்

தாய்ப்பறவை சென்றது! வேகமாக வன்புயல்

காற்றடிக்க தாய்ப்பறவை சேய்களைக் காப்பதற்குக்

கூட்டுக்குள் மீண்டும் திரும்பியதே அன்புடன்!

தாய்ப்பாசம்! ஈடற்ற பண்பு.


மதுரை பாபாராஜ்

Monday, September 19, 2022

ஆதித்யா அம்மாவுக்கு வாழ்த்து


ஆதித்யா அம்மா 

திருமதி G. சுமதிஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்து!


கதிரவனின் மஞ்சள் கதிர்களோ வானில்

தகத்தகாய மாக ஒளிவீசித் தோன்ற

அகமகிழும் காட்சியை 

ஆதித்யா அம்மா

அனுப்பினார் ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் வாழ்க!

 தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் வாழ்க வளர்க!


ஐந்தாண்டு நிறைவு

ஆறாவது ஆண்டு தொடக்கம்!


புலவர் ஐயாவுக்கு வாழ்த்து:


ஒல்காப் புகழ்கொண்ட தொல்காப் பியத்திற்கே

அல்லும் பகலும் அருந்தொண்டு செய்துவரும்

தொல்காப் பியச்செம்மல் காளியப்பன் நற்றமிழ்போல்

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

Sunday, September 18, 2022

எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


உலகில் உரிமை பொறுப்பை எடுக்க

தயக்கம் இருக்கும் பொழுதுதான் நீங்கள்

தலைமைப் பொறுப்பினை ஏற்றே உரிமை

பொறுப்புகளை முன்னெடுத்துச் சாதனை செய்ய

உறுதிகொள்ள வேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

தொல்காப்பியப்புலவர் காளியப்பன்


ஒல்காப் புகழ்கொண்ட தொல்காப் பியத்திற்கே

அல்லும் பகலும் அருந்தொண்டு செய்துவரும்

தொல்காப் பியச்செம்மல் காளியப்பன் நற்றமிழ்போல்

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

ஜாடியை குலுக்கியது யார்?

 


 ஜாடியை குலுக்கியது யார்?

ஜாடிக்குள் கட்டெறும்பை தீஎறும்பை போட்டாலும்
ஈடற்ற ஒற்றுமையில் வாழ்ந்திருக்கும்! ஜாடியை
ஆட்டிக் குலுக்கினால் சண்டையிட்டு மாண்டுவிடும்!
ஆட்டிக் குலுக்கியது யார்?

அமைதி தவழும் உலகமென்னும் ஜாடிக்குள்
அமைதியாக வாழ்கின்ற மக்களைப் போரால்
அமளியாக்க  ஜாடியை ஆட்டுகின்றார்!
மக்கள்
அமைதி இழந்தார் உணர்.

மதுரை பாபாராஜ்


நெருப்பிலும் தூங்கலாம்

 நெருப்பிலும் துஞ்சலாம்!


அலைச்சல் உளைச்சல் நிலையாகிப் போனால்

மலைப்பிலே தூக்கம் விலகித்தான் ஓடும்!

நெருப்பிலும் துஞ்சலாம்! இத்தகைய வாழ்வில்

ஒருகாலும் தூக்கமில்லை சொல்.


மதுரை பாபாராஜ்

Saturday, September 17, 2022

நண்பர் பன்னீர் செல்வம்


நண்பர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு நன்றி.


பன்னீர் அவர்களின் அன்பு வணக்கத்தைச்

சொன்ன பறவையே! நண்பருக்கு நன்றியை

என்சார்பில் கொண்டுபோய்ச் சேர்.



மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில் புத்தன்


ஒருவர்  குறிப்பிட்ட நேரம் மனதை

ஒருமுகம் கொள்ளவைக்கும் தேவைகள் உண்டு!

இயற்கைப் பரிசுகளைக் கண்டு பிடிக்க

அனுமதித்த போதும் ஒருமையந் தன்னில் 

கவனித்தல் சாதனைக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியம்


நம்முன்னே உள்ள பணிச்சுமையை எண்ணித்தான்

சற்றும் கவலைப் படவேண்டாம்! ஒன்றின்மேல்

முற்றும் கவனம் செலுத்தி முடித்துப்பார்!

உற்பத்தி காட்டும் திறனதிக மாய்விடும்!

எப்போதும்  முன்னேற்றம் உண்டு.


மதுரை பாபாராஜ்

Wednesday, September 14, 2022

கவிஞர் இமயம் வாழ்க

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் வாழ்த்து!

ஈரோட்டுப் பாதையிலே

       ஈர்க்கப் பட்டு

ஈராண்டே ஆண்டாலும்

       இருண்ட தமிழ்நிலத்தை

காரிருளைக் கிழித்தெறியும்

       கதிரவனாய் வந்துதித்து

இன்னலுற்ற எம்மக்கள்

       இன்பமுடன் இருந்திடவே

இருமொழிக் கொள்கையை

       இருவிழியாய்த் தந்து

தாய்த்திரு நாட்டிற்கு

       தமிழ்நாடு பெயரைச்சூட்டி

சுயமரியாதைத் திருமணத்தை

       சட்டப்படி செல்லவைத்து

இன்றைய திராவிடமாடலுக்கு

       அன்றே வித்திட்டு

ஆணிவேராய் இருக்கும்

       அறிவாசான் அண்ணாவே!

அன்பையும் அறிவையும்

       ஆயுதமாய்க் கொண்டு

சொல்லும் திறனாலும்

       செயற்கரிய செயலாலும்

அனைவரையும் ஆட்கொண்ட

      அறிஞர் அண்ணாவே!

பேராற்றல் கொண்ட

       பேரறிஞர் அண்ணாவே!

நின்தடம்பற்றி எந்நாளும்

       நிலம்காக்கும் அரணாய்

திராவிடத் தலைமகனாம்

       செயலறிஞர் ஸ்டாலின்

வாளும் கேடயமாய்

       நாளும் இருப்போமென்று

அண்ணா! நின்புகழ்

       போற்றி வணங்குகின்றேன்!

 

கோ.இமயவரம்பன்

15.09.2022

கவிஞர் இமயம் வாழ்க.


ஒவ்வொரு சொல்லும் உண்மையே! உள்ளத்தில்

உள்ளதை அப்படியே பாவில் வடித்தளித்த

வல்லவர் பாவலர் நண்பர் இமயமே!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

 

காலமே மாற்றும்

 காலமே மாற்றும்!


வாழ்க்கையில் காட்சிப் பிழைகள் தோன்றிடும்

நேரத்தில் உள்ளம் தடுமாறும்! தத்தளிக்கும்!

வேரூன்றி நகைக்கும் நிகழ்வுகள்! நாமிங்கே

சாரம் இழந்துவிட்ட சக்கைபோல் மாறிடுவோம்!

காலமே மாற்றும் உணர்.


மதுரை பாபாராஜ்


புதுமைப் பூ


Rajublr: 👆👆👆👆👆👆👆 Beauty of this flower is...it is WHITE in pre-noon (locate the buds there) and, slowly turns into pink by evening...and, there its end..one-day-life !

@mjr-gala53m5g-220914 

வியக்கவைக்கும் மலர்!

நண்பர் ராஜூ அனுப்பிய படத்திற்குக் கவிதை!

முற்பகலில் மொட்டின் நிறம்வெண்மை! மாலையில்

அற்புதமாக கண்கவரும் வண்ணம் இளஞ்சிவப்பு!

முற்றும் புதுமைப்பூ! செப்பு.

மதுரை பாபாராஜ்

 

Tuesday, September 13, 2022

அற்பமன மாந்தர்

 அற்பமன மாந்தர்!


அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்

முற்றும் பறந்துவிடும் நீர்வற்றிப் போய்விட்டால்!

கொட்டியும் ஆம்பலும் நீர்வற்றிப் போயினும்

ஒட்டி உறவாடும் ! சேர்ந்தே உடன்வாடும்!

தட்டுத் தடுமாறும் சூழ்நிலையில் கைநீட்டி

உற்றதுணை யாகவேண்டும்! தட்டிவிட்டுப் போவோர்கள்

அற்பமன மாந்தரெனச் சாடு.


மதுரை பாபாராஜ்

Sunday, September 11, 2022

போதைப் பொருளை விலக்கு


போதைப் பொருளை விலக்கு!


போதையில் உள்ள மனிதனின் பேச்செல்லாம்

வேதனை தந்தே அவமானம் கொள்ளவைக்கும்!

போதைப் பொருள்களால் சீரழியும் உன்வாழ்க்கை!

போதைப் பொருளை விலக்கு.


மதுரை பாபாராஜ்

 

கவிஞர் ராஜூ பிறந்தநாள்

 கவிஞர் நண்பர் ராஜூ பிறந்தநாள்!

அகவைத் திருநாள் வாழ்த்து

நாள் 11.09.22

எழுபத்து மூன்றை நிறைவுசெய்தே இன்று

எழுபத்து நான்கில் அடியெடுத்து வைக்கும்

கெழுதகை நண்பராம் ராஜூ வளமும்

நலமும் நனிசூழ வாழ்வாங்கு வாழ்க!

குடும்பத்தார் நண்பர்கள் வாழ்த்திசைக்க வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

[9/11, 11:59] Rajublr:

மொழிக்கு இலக்கணம்..

முத்தமிழுக்கு மகுடம் !

நட்புக்கு இலக்கணம்.. 

நான்மறையும் பகரும் !

அன்பு நண்பர் பாபாவின் 

நட்பு, அன்றும், இன்றும், என்றும், 

ஆல்போல் வளர்ந்(த)து.. ஆண்டுகள், ஐம்பது கடந்தும் !!

இறையருள், தொடர வேண்டும் !!

 

ஆதித்யா அம்மா அனுப்பிய படம்


ஆதித்யா அம்மா திருமதி G.சுமதிஸ்ரீ அனுப்பிய படம்!


பட்டமரம் உச்சியிலே

பச்சக்கிளி நிக்குது

எப்படித்தான் நிக்குதோ

உச்சியிலே அந்தக்கிளி?

எந்த ஊரோ எந்த நாடோ

வந்தக் கிளி சொல்வாயா?

இங்கு வந்து நின்னாக்க

உன்னைத்தான் பிடிப்பாங்க

ஜோசியந்தான் சொல்லவேணும்!

உன்ன வச்சு காசு பண்ணி

தன்பிழைப்பை நடத்துவாங்க!


மதுரை பாபாராஜ்

 

Saturday, September 10, 2022

கணிப்பு

 கணிப்பு!


வெற்றியா? தோல்வியா? என்றே கணிப்பதற்குள்

முற்றிலும் மூச்சிழந்து வாழ்வை முடித்திருப்போம்!

சுற்றிநிற்போர் தங்களுக்குள் பேசிக் கணித்திருப்பார்!

எப்படி வாழ்ந்தவரோ இப்படிப் போய்விட்டார்!

என்றே வியந்திருப்பார் இங்கு.


மதுரை பாபாராஜ்


ஏர்வாடியார் பொன்விழா மணநாள்

ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பொன்விழா மணநாள்!

10.09.22

நற்றமிழ் நாயகன் ஏர்வாடி இல்லறத்தில்

பொன்விழா நாயகராய்ப் பேருடன் வாழ்கின்றார்! 

பண்பாளர் தம்பதி நூறாண்டு வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

Friday, September 09, 2022

நண்பர் பன்னீர்செல்வம்


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய காட்சிக்குக் கவிதை!


மணற்பரப்பில் கன்றின்மேல் சாய்ந்து படுத்து

அழகாய் உலகை ரசிக்கும் மழலைப்

பருவத்தில் மாசில்லை சொல்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, September 08, 2022

CR WEDDING DAY


மதிப்பிற்குரிய 

இராஜேந்திரன் மலர்க்கொடி இணையருக்குத் திருமணநாள் வாழ்த்துகள்!


36 ஆவது மணநாள்: 08.09.22


வள்ளுவம் போற்றும் இணையரை வாழ்த்துவோம்!

இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றி வாழ்கின்றார்!

எல்லா வளங்களும் பெற்றே நலமுடன்

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


 

Wednesday, September 07, 2022

குறள்நெறி போற்றுவோம்


குறள்நெறி போற்றுவோம்!


கடிவாளம் இல்லையெனில் கண்டபடி ஓடும்!

தறிகெட்டுப் போகும்! அதுபோல வாழ்வில்

நெறிதவறிப் போனால்

நிலையிழந்து போவோம்!

குறள்நெறி போற்றினால் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

தம்பி மகியும் பேரனும்


தம்பி மகியும் பேரனும்!


தம்பி மகியின் கரம்தழுவப் பேரனைக்

கொஞ்சுகின்ற காட்சியைக் கண்டே ரசித்திருந்தேன்!

தந்தையின் சாயல் மகியிடம் கண்டேன்நான்!

செந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

ஓணம் வாழ்த்து


ஓணம் திருநாள் வாழ்த்து!

08.09.22


ஓணம் திருநாளில் நல்லிணக்கம் சூழ்ந்திருக்க

வான்சிறப்பு இவ்வுலகை ஆட்சிசெய்ய வள்ளுவம்

நாடுதோறும் நல்லறத்தைப்

போற்றித் தழைத்திருக்க

வாழ்த்தி மகிழ்ந்திருப்போம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, September 06, 2022

எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை


நம்முடைய வாழ்க்கையில் திட்டமிடல் என்பது

அன்றாடம் முக்கியப் பங்கு வகிக்கிறது!

திட்டத்தைத் திட்டமிட்டு முன்பே நிறைவேற்று!

திட்டமிட நாமும் சிலநிமிடம் ஏற்கவேண்டும்!

அப்போது தானே அமல்படுத்தும் நேரத்தில்

எத்தவறும் தோன்றா(து)  உணர்.


மதுரை பாபாராஜ்

 

Monday, September 05, 2022

தம்பி கெஜராஜ்


Today My 75th Movie


 தம்பி நடித்த திரைப்படங்கள் 75


அகவை அறுபதுக்கு மேலே திரையில்

பலவேடம் தாங்கி நடித்த திறமை

வரவேற்பு பெற்றேதான் இன்று நடிக்கும்

திரைப்பட எண்ணோ எழுபத்து ஐந்தாம்!

வளரட்டும் வாழ்த்துகிறேன் தம்பி கெஜாவை!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

Sunday, September 04, 2022

பாலுவுக்குப் பிறந்தநாள்


மருமகன் மு. பால முரளிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள் : 05.09.22


மகிழ்ச்சியுடன் வாழ்க! மகத்தாக வாழ்க!

அகங்குளிர வாழ்க! அருந்தமிழ்போல்  வாழ்க!

நிறைவுடனே வாழ்க! அறம்மணக்க வாழ்க!

திறம்பட வாழ்கபல் லாண்டு.


மனைவி மகள்கள் மருமகன் சூழ

மனையறம் காத்து மனங்குளிர வாழ்க!

இணையற்ற இல்லறத்தில் இன்பமுடன் வாழ்க!

அனைத்துவளம் பெற்றுவாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

Saturday, September 03, 2022

ஒன்றுபோனால் ஒன்று

 ஒன்றுபோனால் ஒன்று!


ஒருகவலை தீர்ந்ததே என்றேதான் இங்கே

ஒருவாறாய் ஓய்வெடுத்தேன்! தோள்களைத் தட்டி

மறுகவலை பார்த்துச் சிரித்ததும் நொந்தேன்!

கவலைகள் ஒன்றுபோனால் இன்னொன்று வந்தே

துவளவைத்துப் பார்க்கின்ற வாழ்க்கை -- அவலை

நினைத்தே உரலை இடிக்கும்

நிலையால்

கணப்பொழுது நிம்மதியும் போச்சு.


மதுரை பாபாராஜ்


ETERNAL SLEEP

 ETERNAL SLEEP!


OH! MY ETERNAL SLEEP!

WHERE ARE YOU?


WHEN WILL YOU COME?

TELL ME! TELL ME!


COME AND HUG ME SOON!

RELIEVE ME FROM THIS GLOOM!


IF YOU COME IT IS A BOON!

OTHERWISE IT IS A BANE!


PAINS AND SUFFERINGS ARE ENOUGH! 

THIS DUSTY LIFE IS ENOUGH!


HAPPINESS IS ALWAYS ELUSIVE!

SORROW IS ALWAYS EXCLUSIVE!


HANDS OF TIME BEAT ME

RUTHLESSLY HERE AND THERE


THRASH ME EVERYWHERE I GO

TAUNT ME WITH UNBEARABLE WORDS !


I AM STAGGERING AND SOBBING

I AM WANDERING IN SEARCH OF PEACE!


PEACE IS MIRAGE INVITING ME YONDER!

WHEN I GO NEAR IT GOES FAR AND FAR!


SO I WANT TO HUG THE ETERNAL SLEEP!

PLEASE COME AND HUG ME SOON!


MADURAI BABARAJ








Friday, September 02, 2022

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


மழையில் மரத்தடியில் நிற்காதே! உன்னை

உளைச்சலும் துன்பமும் வாடவைக்கும் நேரம்

உறவுகளின் வீட்டுக்குச் செல்லாதே! வாழ்வில்

வளமுடன் வாழ்கின்ற நேரம் பிறர்க்கு

உதவ மறக்காதே நீ.


மதுரை பாபாராஜ்

 

மதுரை நினைவு

 நினைவில் நிற்கும் மதுரை:


1952--1995


சிகையழகு நிபுணர்களும் நிலையங்களும்:


மோதிலால் 2 வது தெரு:


நிபுணர்கள் இராமு மற்றும் லட்சுமணன். தரையில் பலகையில் உட்காரவேண்டும். பிறகு நாற்காலியில் பலகை போட்டு உட்கார்ந்தேன்.


மோதிலால் முக்கியச்சாலை:


நிபுணர் கணபதி, கிருஷ்ணன்.


கணபதி கண்டிப்பானவர். கிருஷ்ணன் அரசியல் அரட்டை அதேசமயம் கடமை உணர்வு.


வடக்குமாசி வீதி சந்திரா திரையரங்கு எதிரில் சிங்கப்பூர் சலூன்:


தந்தையுடன் செல்வேன்.

வீட்டிலே தந்தை,நான்,தம்பி,பாவா,

4 சிறுவர்கள் எனவே சிங்கப்பூர் சலூனில் இருந்து வீட்டுக்கு நிபுணர் வந்து சிகையழகு செய்த காலமுண்டு.


டவுன்ஹால் ரோடு புளூ மவுண்டன் சலூன்:


போனதும் ஒருவர் பணிவுடன் வந்து அழைத்துச் சென்று உட்காரவைப்பார்.

நவீன சலூன் அதுதான்.


குரு திரையரங்கு அருகில் பைபாஸ் ரோடு முத்து சிகையழகு நிலையம் சிலகாலம்.


வெளியிலே பேச்சு இருக்கும் .அங்கே அமர்ந்து நண்பர் ராஜுவுடன் அரசியல் பேசியே பொழுது போகும்.

நட்புடனே பழகியவர் முத்து. 


மதுரை பாபாராஜ்


Thursday, September 01, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


முதலிலே மன்னிப்பைக் கேட்போர் துணிச்சல்

நிறைந்தோர்! முதலிலே மன்னிக்கும் பண்பு

 மனம்படைத்தோர் என்றும் 

வலிமையுள்ளோர் ஆவர்!

முதலில் மறக்கத் தெரிந்தோர் மகிழ்ச்சி

மனம்படைத்தோர் ஆவார்கள் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

சவுக்கடிகள்

 சவுக்கடிகள்!


சிலுவையில் வைத்தே அறைந்து சவுக்கால்

சுளீர்சுளீர் என்றே தொடர்ந்தே அடிதான்!

விழுந்து விழுந்து தடுமாறு கின்றேன்!

எழுந்தால் அடிதான் எனக்கு.


மதுரை பாபாராஜ்