Wednesday, September 14, 2022

கவிஞர் இமயம் வாழ்க

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் வாழ்த்து!

ஈரோட்டுப் பாதையிலே

       ஈர்க்கப் பட்டு

ஈராண்டே ஆண்டாலும்

       இருண்ட தமிழ்நிலத்தை

காரிருளைக் கிழித்தெறியும்

       கதிரவனாய் வந்துதித்து

இன்னலுற்ற எம்மக்கள்

       இன்பமுடன் இருந்திடவே

இருமொழிக் கொள்கையை

       இருவிழியாய்த் தந்து

தாய்த்திரு நாட்டிற்கு

       தமிழ்நாடு பெயரைச்சூட்டி

சுயமரியாதைத் திருமணத்தை

       சட்டப்படி செல்லவைத்து

இன்றைய திராவிடமாடலுக்கு

       அன்றே வித்திட்டு

ஆணிவேராய் இருக்கும்

       அறிவாசான் அண்ணாவே!

அன்பையும் அறிவையும்

       ஆயுதமாய்க் கொண்டு

சொல்லும் திறனாலும்

       செயற்கரிய செயலாலும்

அனைவரையும் ஆட்கொண்ட

      அறிஞர் அண்ணாவே!

பேராற்றல் கொண்ட

       பேரறிஞர் அண்ணாவே!

நின்தடம்பற்றி எந்நாளும்

       நிலம்காக்கும் அரணாய்

திராவிடத் தலைமகனாம்

       செயலறிஞர் ஸ்டாலின்

வாளும் கேடயமாய்

       நாளும் இருப்போமென்று

அண்ணா! நின்புகழ்

       போற்றி வணங்குகின்றேன்!

 

கோ.இமயவரம்பன்

15.09.2022

கவிஞர் இமயம் வாழ்க.


ஒவ்வொரு சொல்லும் உண்மையே! உள்ளத்தில்

உள்ளதை அப்படியே பாவில் வடித்தளித்த

வல்லவர் பாவலர் நண்பர் இமயமே!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home