Friday, September 02, 2022

மதுரை நினைவு

 நினைவில் நிற்கும் மதுரை:


1952--1995


சிகையழகு நிபுணர்களும் நிலையங்களும்:


மோதிலால் 2 வது தெரு:


நிபுணர்கள் இராமு மற்றும் லட்சுமணன். தரையில் பலகையில் உட்காரவேண்டும். பிறகு நாற்காலியில் பலகை போட்டு உட்கார்ந்தேன்.


மோதிலால் முக்கியச்சாலை:


நிபுணர் கணபதி, கிருஷ்ணன்.


கணபதி கண்டிப்பானவர். கிருஷ்ணன் அரசியல் அரட்டை அதேசமயம் கடமை உணர்வு.


வடக்குமாசி வீதி சந்திரா திரையரங்கு எதிரில் சிங்கப்பூர் சலூன்:


தந்தையுடன் செல்வேன்.

வீட்டிலே தந்தை,நான்,தம்பி,பாவா,

4 சிறுவர்கள் எனவே சிங்கப்பூர் சலூனில் இருந்து வீட்டுக்கு நிபுணர் வந்து சிகையழகு செய்த காலமுண்டு.


டவுன்ஹால் ரோடு புளூ மவுண்டன் சலூன்:


போனதும் ஒருவர் பணிவுடன் வந்து அழைத்துச் சென்று உட்காரவைப்பார்.

நவீன சலூன் அதுதான்.


குரு திரையரங்கு அருகில் பைபாஸ் ரோடு முத்து சிகையழகு நிலையம் சிலகாலம்.


வெளியிலே பேச்சு இருக்கும் .அங்கே அமர்ந்து நண்பர் ராஜுவுடன் அரசியல் பேசியே பொழுது போகும்.

நட்புடனே பழகியவர் முத்து. 


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home