Saturday, April 29, 2023

தென்காசி கிருஷ்ணன் அன்பளிப்பு


 

ஆதித்யா அம்மா எடுத்த படம்


மதியநேர வானத்தில் மஞ்சள் கதிரோன்! 

விமானம் உயரத்தில் காட்சிதர ஆகா

 அமர்க்களமாய் ஆதித்யா அம்மா எடுத்த 

படம் அருமைதான் சொல். 

மதுரை பாபாராஜ்

 

நல்லோரே வாழவைப்பார்

 நல்லோரே வாழவைப்பார்!


பல்வளங்கள் கூடித்தான் சேர்கின்ற நேரத்தில்

நல்லவர்போல் வந்தே மகிழ்ந்தேதான் சூழ்ந்திருப்பார்!

செல்வம் கரைந்தே வறுமையில் வாடுகின்ற

பொல்லாத காலத்தில் ஓடி ஒளிந்திடுவார்!

நல்லவர்கள் தோள்கொடுப்பார்! பொல்லாதோர் தேளாவார்!

நல்லோரே வாழவைப்பார் சொல்.


மதுரை பாபாராஜ்


Thursday, April 27, 2023

மனசாட்சி போற்ற வாழ்வோம்!

 மனசாட்சி போற்ற வாழ்வோம்!


ஒழுக்கம், ஒழுங்கீனம் இந்த இரண்டில்

ஒழுக்கமாய் வாழ்ந்தால் மனசாட்சி போற்றும்!

ஒழுக்கமின்றி வாழ்ந்தால் மனசாட்சி தூற்றும்!

ஒழுக்கமுடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தனுக்கு வாழ்த்து


நண்பர் எழில் புத்தனுக்கு வாழ்த்து! 

 கம்பீர மாகவே வெற்றி  நடைபோட்டு 

புன்னகை யோடு  அலுவலர்கள் சூழ்ந்துவரும்

நண்பரின் கோலத்தைக் கண்டு ரசித்திருந்தேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, April 26, 2023

எப்படிச் செல்ல?

 எப்படிச் செல்ல?


இப்படிச் சென்றால் இடிக்கிறது! மாற்றித்தான்

அப்படிச் சென்றால் அடிக்கிறது! நானிங்கே

எப்படிச் சென்றாலும் இப்படித்தான் கோலமென்றால்

எப்படிச் செல்லவோ சொல்?


மதுரை பாபாராஜ்

Monday, April 24, 2023

யூடியூப் வினோத்



 ஆசியா நெட் யூடியூப் நண்பர் வினோத் அவர்களுக்கு வாழ்த்து!


பன்முக ஆற்றலைப் பன்முகத்தில் காட்டுகின்ற

நண்பர் வினோத்தின் ஒளிப்படங்கள் 

எல்லாமே

நன்றாய் இருந்தன! பார்த்தேன்! ரசித்தேன்நான்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Sunday, April 23, 2023

வேடம் கலையும்

 வேடம் கலையும்!


காலத்தின் சக்கரம் என்றும் சுழன்றிருக்கும்!

கோலங்கள் எப்போது எப்படி மாறுமென்று

கூற முடியாது! காலத்தின் பாடங்கள்

வேடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்!

தண்டிக்கும்!

வேடம் கலைந்தால் துரோகிகள் மாட்டுவார்!

பாடம் கடுமை உணர்.


மதுரை பாபாராஜ்

Saturday, April 22, 2023

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்கு மொழியாக்கம்!


தலைநிமிர்த்து வாழ்வேன்!


கடந்துவந்த பாதை! திரும்பித்தான் பார்த்தேன்! 

தவறும்  வலிகளும் மற்றும் உளைச்சல்

அடங்கிய கோலம் தெரிந்தது! நானோ

 உடனடியாய்க் கண்ணாடி பார்த்தேன்! வலிமை, 

உணர்த்திய பாடம் உணர்ந்தேன்! எனக்குள் 

பெருமிதம் ஆட்கொள்ள நானும்  மகிழ்ந்தேன்!

தலைநிமிர்ந்து வாழ்வேன் உணர்.


மதுரை பாபாராஜ்

 

Friday, April 21, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை

பல்வகை யான நிகழ்வுகள் உங்களைச்
சுற்றி நடக்கலாம்! ஆனாலும் உங்களுக்கும்
உங்களாலும் என்ன நடக்கிறதோ அத்தகைய
ஒன்றுதான் முக்கியம் முக்கியத்வம் வாய்ந்ததாம்!
உங்களது வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்புதான்!
பண்பட்டு வாழ்தல் சிறப்பு.
மதுரை பாபாராஜ்
 

Wednesday, April 19, 2023

கேட்வே பள்ளிவாகன ஓட்டுநருக்கு வாழ்த்து

 GATEWAY SCHOOL BUS! 


பள்ளி வாகன ஓட்டுநர் திரு.சசிக்குமார் அவர்களுக்கு வாழ்த்து!


பள்ளியின் வாகனத்தில் மாணவ மாணவியர்

பள்ளிக்கு நேரந் தவறாமல் செல்வதற்குத்

துல்லியமாய்த் தன்கடமை ஆற்றிவரும் ஓட்டுநர்

வல்லமையை வாழ்த்துகிறேன் நான்.


அடக்கம் பணிவு மரியாதைப் பண்பில்

சிறந்து விளங்கும் சசிக்குமார் வாழ்க!

நிறைவுடன் பல்லாண்டு நற்றமிழ்போல் வாழ்க!

நலமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

எ.ச. நிக்கில் அபிசேக் தாத்தா


மாறுமோ?

 மாறுமோ?


தலைநிமிர்ந்து வாழ்ந்தவனை வாழ்க்கைச் சூழல்

தலைகுனிய வைத்தேதான் வேடிக்கை பார்க்க

நிலைகுலைந்து போனேன்நான்! நிம்மதி எங்கே?

நிலையென்று மாறுமோ? சொல்.


மதுரை பாபாராஜ்

Tuesday, April 18, 2023

குறள்மணம் நன்றிப்பா


குறள்மணம் விருதளித்துப் பெருமை சேர்த்த கல்லைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி!


குடும்ப உணர்வில் குழுவுணர்வு!


நாள்: 16.04.23 ஞாயிறு


தந்தை புலவர் செ.வரதராசனார்


தமிழ்ச்செம்மல்கள்:

செ.வ.புகழேந்தி

செ.வ.மதிவாணன்

 செ.வ.மகேந்திரன்

செ.வ.இராமாநுசன்


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!

தந்தை கடமைகள் செய்தே நிறைவேற்றி

தந்துவிட்டார்! பண்புதனை வாழ்த்து.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

நான்கு மகன்களும் நற்புகழ் ஏந்துகின்றார்!

ஊராரும் மெச்சுகின்றார்! தாயோ மகிழ்ச்சியின்

தேருலா கண்டுவிட்டார் காண்.


மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் வள்ளுவர்!

பண்பான நான்கு மகன்களும்

தந்தையின்

நற்பெயரைக் காக்கின்றார்! இக்குறளுக் கேற்பவே

இப்புவியில் வாழ்கின்றார் வாழ்த்து.


குடும்ப உணர்வும் குழுவுணர்வும் சேர

நடுநிலைப் பண்புடன் வள்ளுவத்தைக் காக்கும்

தொடரோட்டந் தன்னைச் சளைக்காமல் ஏற்றே

கடமைகள் ஆற்றுவதை வாழ்த்து.


முப்பெருமை கொண்ட விழாவினை செந்தமிழ்ப்

பற்றுடன் தொய்வின்றி ஏற்பாடு செய்தேதான்

கற்றறிந்த ஆசான்கள் முன்னிலையில் எங்களுக்கு

வெற்றி விருதளித்தார் வாழ்த்து.


மகுடமுடிப் பண்பாளர் ஆற்றொழுக்குப் பேச்சில்

மகுடத்தைச் சூட்டினார் எங்களுக்கு! நன்றி

வெகுவாகச் சொல்லி மகிழ்கின்றோம் நாங்கள்!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


அருந்தமிழ் போற்றும் அனந்த சயனார்

கருத்துடன் வந்தார்! சிறப்புகள் செய்தார்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


கல்லைத் தமிழ்ச்சங்கம் நூறாண்டு வாழியவே!

நல்லவர்கள் வாழ்த்திசைக்க பல்லாண்டு வாழியவே!

தெள்ளுதமிழ்த் தொண்டுகளை நாள்தோறும் செய்தேதான்

பல்வளங்கள் பெற்றுவாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

[4/18, 8:03 PM] Vovramanujan: 

பெருமகிழ்ச்சி ஐயா!

நிலைக்கத்தக்க பாவில் ஊடுபயிர்க் கருத்துகளோ கோடி!

தக்கார்க்கு விருதளித்து பாராட்டுவதை நாங்களும் கடமையெனக் கொண்டியங்கி வருகின்றோம். தங்களது வாழ்த்து பா எங்களுக்கு கிடைத்த வரிசைப் பா! அன்பளிப்பு பா!

மிக்க நன்றி ஐயா!

வணக்கம்!

 

Sunday, April 16, 2023

குறள்மணம்விருது



குறள்மணம் விருதளித்துப் பெருமை சேர்த்த கல்லைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றியும் வாழ்த்தும்!

நாள்: 16.04.23 ஞாயிறு

குடும்ப உணர்வும் குழுவுணர்வும் சேர்ந்து
தொடுக்கும் தமிழ்த்தொண்டை வாழ்த்துகிறேன் இன்று.

குறள்மணம் என்ற விருதை அளித்துச் 
சிறப்பித்த கல்லைத் தமிழ்ச்சங்கத் தாரை
நிறைவுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்! நன்றி
மறவாமல்  வாழ்ந்திருப்பேன் இங்கு.

புலவர் வரதராசன் சங்கம்  நிறுவி
பலவாறாய்ப் பாடுபட்டு வேரூன்றி நிற்க
தளமமைத்தார்! இன்று மணிவிழா கண்ட
விருட்சமாய் உள்ளதை வாழ்த்து.

ஊர்கூடித் தேரிழுக்கும் கோலத்தைப் போலத்தான்
ஆர்வலர்கள் கூடி குழுவுணர்வில் பாடுபடும்
நேர்மையை உண்மையை வாழ்த்தி வணங்குகிறேன்!
நூறாண்டு காணுமென வாழ்த்து.

நண்பர் இராமா நுசனார் அருந்தமிழர்!
வண்டமிழ்த் தூதர்! தயங்காமல் தூயதமிழ்
செந்தமிழ் பேசுகின்ற வித்தகர்! பண்பாளர்
நன்றி நவில்கின்றேன் இன்று.

வள்ளுவத்தை ஆராய்ந்த வல்லுநர்கள்
பெற்றனர்
இவ்விருதை வாழ்த்துகிறேன்! அந்த மலர்களுடன்
இவ்விருதை நாரான நானுமின்று ஏற்கின்றேன்
நல்லார்க்கு என்வணக்கம் தந்து.

பொன்னாடை வாழ்த்துமடல் பொற்கிழி  அழகுமாலை
என்றெல்லாம் தந்தே சிறப்புகள் செய்துவிட்டார்!
முன்னணியால் நாங்கள் வருவதற்குப் பின்னணியில்
நிற்பவர்கள் சங்கத்தார் சொல்.

விழாவில் கலந்துகொண்டு இங்கே மகிழ்ந்த
தலைவர் முதலாய் அனைவருக்கும் நன்றி!
பலபடப் பாராட்டி வாழ்த்துகிறேன் இங்கு!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

விருது சிறக்க விருது பெற்றவர்க்கு வாழ்த்துகள்!

கவிஞர் இரவாபிலன்

Ramanathan Kathiravan:
🌹🌹🌹
சிறப்பு.
மகிழ்ச்சி.
🙏🙏🙏🙏

மதுரை பாபாராஜ்:
உங்களால் வீஓவியில் சேர்ந்தேன்.
சிஆர் ஏற்றுக்கொண்டார். குறள்களைப் பற்றிப் பேசும் துணிவு நண்பர்கள் அளித்த ஊக்கம். நன்றி

VovKavignariravakabilan:
விருது சிறக்க விருது பெற்றவர்க்கு வாழ்த்துகள்!

கல்லைத் தமிழ்ச்சங்க குறள்மணம் விருதுபெறும்
குன்றா இளமையுடன் பாப்புனையும்
பன்முகத்தோன்
கவி காளமேகம் மதுரகவி பாபாவை
குவலயம் போற்றிடவே வாழ்த்து.

இமயவரம்பன்
 

 

Saturday, April 15, 2023

மணிப்படம் பாலு


மணிப்படம் வைத்திருக்கும் பாலு!


மனுநீதிச் சோழன் மணிதானா? கோயில் 

மணிதானா? மாதாவின் கோயில் மணியா

மணிக்கூண்டில் கட்டும் மணிதானா? நண்பா!

மணிகளில் எம்மணி? இம்மணி? சொல்க!

மணிப்படம் வைத்திருக்கும் பாலு.


மதுரை பாபாராஜ்

 

Friday, April 14, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!

சிக்கலைத் தீர்ப்பதற்கு நாளும் பலவழிகள்
உள்ளன! ஆனால் சிலது தெரியுமிங்கே
மற்றவை நேரடியாய் இங்கே தெரியாது!
நன்றாக ஆராய்ந்து கண்டுணர வேண்டும்நாம்!
அந்த வழியே எளிதாய் விரைவாக
சிக்கலைத் தீர்க்கலாம் செப்பு.

மதுரை பாபாராஜ்
 

பயணமும் பருவமாற்றமும்

 பயணமும் பருவமாற்றமும்!


பருவத்தின் மாற்றத்திற் கேற்ப பயணம்

கருத்துடன் சிந்தித்துப் போகவேண்டும் நாம்தான்!

பருவநிலை பார்க்காமல் செல்வோர்க்குத் துன்பம்

நெருங்கிவரும் நாளும் உணர்.


மதுரை பாபாராஜ்

Thursday, April 13, 2023

வக்கிரம்

 வக்கிரம்!

சொந்தத்தை விட்டுவிட்டுச் சொந்தமற்ற ஒன்றினைச்

சொந்தமென்று சொல்கின்ற வக்கிரத்தை என்னென்பேன்?

சொந்தங்கள் கண்ணீரில்!

வந்தேறி பன்னீரில்!

இந்ததிலை மாறுவ தென்று?

மதுரை பாபாராஜ்

Tuesday, April 11, 2023

பாசம் கொடிது

 வாழ்க்கை கொடிது!

அப்பா! வரவேண்டாம்! மைந்தன் வரவேண்டும்!

இப்படி நாளும் கயிறிழுக்கும் போட்டியென்றால்

எப்படி உள்ளம் உளைச்சலின்றி வாழ்ந்திருக்கும்?

அப்பப்பா! பாசம் கொடிது.

மதுரை பாபாராஜ்

Saturday, April 08, 2023

மனநலம்

 மனநலம்!

உடல்நலம் இங்கே சரியாய் இருந்தும்

உடலுக்குள் நாளும் மனநலம் துன்பக்

கடலிலே சிக்கித் துடித்திருந்தால் வாழ்க்கை

நடையோ தளரும் உணர்.

மதுரை பாபாராஜ்

பொய்யுரு!


பொய்யுரு!

உள்ளம் உளைச்சல் நெருப்பில் கருகினால்

கொல்லும் துயரம் வளைத்தேதான் தாக்குதடா!

துள்ளும் மகிழ்ச்சியோ கைதட்டிப் பார்த்தாலும்

உள்ளமோ வாடி வதங்கும் நிலையெடுக்கும்!

உள்ளத்தில் கண்ணீர்! முகத்தில் சிரிப்பலைகள்

பொய்யுரு வேடமேந்தும் சொல்.


மதுரை பாபாராஜ்

Thursday, April 06, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

எப்போதும் நாமோ விடைகாண விட்டுவிட்டு
முற்றும் எதிர்வினை ஆற்றப் பதறுகிறோம்!
என்றும் விடைகாண்போம்! இங்கே எதிர்வினை
தந்துவிட்டுப் பின்னர் வருந்துவதைக் காட்டிலும்
நன்றாம் விடைகாணல் தான்.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


உள்ளம் முழுதும் உலவுகின்ற எண்ணங்கள்!
எண்ணத்தை நாம்தான் ஒழுங்கு படுத்தவேண்டும்!
நன்னெறிப் பாதையில் சீர்படுத்தி வாழ்க்கையில்
நன்கு செயலாற்றப் பார்.

மதுரை பாபாராஜ்

Tuesday, April 04, 2023

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!

அலைகளைப் போலிருக்க வேண்டும்! அவைகள் 

உயரும் விழுந்தோடும்! ஆனாலும் மீண்டும் 

எழுந்துவிடும்! நேர்மறை எண்ணமுடன் வாழ்ந்தால்

அழுத்துகின்ற சோதனைகள் யாவும் மறையும்!

நிரந்தர மல்ல! உணர்!


மதுரை பாபாராஜ்

Monday, April 03, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச்சொல்லோவியத்திற்குக் கவிதை!

எந்தஒரு நேரம் எனினும் எதுவிங்கே
முக்கியம் என்றால் மகிழ்ச்சியாய் உள்ளதுதான்!
எக்கணமும் இங்கே மகிழ்ந்தே இருப்பதுதான்!
அக்கறை கொள்தல் மகிழ்வு.

மதுரை பாபாராஜ்