Tuesday, April 18, 2023

குறள்மணம் நன்றிப்பா


குறள்மணம் விருதளித்துப் பெருமை சேர்த்த கல்லைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி!


குடும்ப உணர்வில் குழுவுணர்வு!


நாள்: 16.04.23 ஞாயிறு


தந்தை புலவர் செ.வரதராசனார்


தமிழ்ச்செம்மல்கள்:

செ.வ.புகழேந்தி

செ.வ.மதிவாணன்

 செ.வ.மகேந்திரன்

செ.வ.இராமாநுசன்


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!

தந்தை கடமைகள் செய்தே நிறைவேற்றி

தந்துவிட்டார்! பண்புதனை வாழ்த்து.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

நான்கு மகன்களும் நற்புகழ் ஏந்துகின்றார்!

ஊராரும் மெச்சுகின்றார்! தாயோ மகிழ்ச்சியின்

தேருலா கண்டுவிட்டார் காண்.


மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் வள்ளுவர்!

பண்பான நான்கு மகன்களும்

தந்தையின்

நற்பெயரைக் காக்கின்றார்! இக்குறளுக் கேற்பவே

இப்புவியில் வாழ்கின்றார் வாழ்த்து.


குடும்ப உணர்வும் குழுவுணர்வும் சேர

நடுநிலைப் பண்புடன் வள்ளுவத்தைக் காக்கும்

தொடரோட்டந் தன்னைச் சளைக்காமல் ஏற்றே

கடமைகள் ஆற்றுவதை வாழ்த்து.


முப்பெருமை கொண்ட விழாவினை செந்தமிழ்ப்

பற்றுடன் தொய்வின்றி ஏற்பாடு செய்தேதான்

கற்றறிந்த ஆசான்கள் முன்னிலையில் எங்களுக்கு

வெற்றி விருதளித்தார் வாழ்த்து.


மகுடமுடிப் பண்பாளர் ஆற்றொழுக்குப் பேச்சில்

மகுடத்தைச் சூட்டினார் எங்களுக்கு! நன்றி

வெகுவாகச் சொல்லி மகிழ்கின்றோம் நாங்கள்!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


அருந்தமிழ் போற்றும் அனந்த சயனார்

கருத்துடன் வந்தார்! சிறப்புகள் செய்தார்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


கல்லைத் தமிழ்ச்சங்கம் நூறாண்டு வாழியவே!

நல்லவர்கள் வாழ்த்திசைக்க பல்லாண்டு வாழியவே!

தெள்ளுதமிழ்த் தொண்டுகளை நாள்தோறும் செய்தேதான்

பல்வளங்கள் பெற்றுவாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

[4/18, 8:03 PM] Vovramanujan: 

பெருமகிழ்ச்சி ஐயா!

நிலைக்கத்தக்க பாவில் ஊடுபயிர்க் கருத்துகளோ கோடி!

தக்கார்க்கு விருதளித்து பாராட்டுவதை நாங்களும் கடமையெனக் கொண்டியங்கி வருகின்றோம். தங்களது வாழ்த்து பா எங்களுக்கு கிடைத்த வரிசைப் பா! அன்பளிப்பு பா!

மிக்க நன்றி ஐயா!

வணக்கம்!

 

0 Comments:

Post a Comment

<< Home