Sunday, April 16, 2023

குறள்மணம்விருது



குறள்மணம் விருதளித்துப் பெருமை சேர்த்த கல்லைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றியும் வாழ்த்தும்!

நாள்: 16.04.23 ஞாயிறு

குடும்ப உணர்வும் குழுவுணர்வும் சேர்ந்து
தொடுக்கும் தமிழ்த்தொண்டை வாழ்த்துகிறேன் இன்று.

குறள்மணம் என்ற விருதை அளித்துச் 
சிறப்பித்த கல்லைத் தமிழ்ச்சங்கத் தாரை
நிறைவுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்! நன்றி
மறவாமல்  வாழ்ந்திருப்பேன் இங்கு.

புலவர் வரதராசன் சங்கம்  நிறுவி
பலவாறாய்ப் பாடுபட்டு வேரூன்றி நிற்க
தளமமைத்தார்! இன்று மணிவிழா கண்ட
விருட்சமாய் உள்ளதை வாழ்த்து.

ஊர்கூடித் தேரிழுக்கும் கோலத்தைப் போலத்தான்
ஆர்வலர்கள் கூடி குழுவுணர்வில் பாடுபடும்
நேர்மையை உண்மையை வாழ்த்தி வணங்குகிறேன்!
நூறாண்டு காணுமென வாழ்த்து.

நண்பர் இராமா நுசனார் அருந்தமிழர்!
வண்டமிழ்த் தூதர்! தயங்காமல் தூயதமிழ்
செந்தமிழ் பேசுகின்ற வித்தகர்! பண்பாளர்
நன்றி நவில்கின்றேன் இன்று.

வள்ளுவத்தை ஆராய்ந்த வல்லுநர்கள்
பெற்றனர்
இவ்விருதை வாழ்த்துகிறேன்! அந்த மலர்களுடன்
இவ்விருதை நாரான நானுமின்று ஏற்கின்றேன்
நல்லார்க்கு என்வணக்கம் தந்து.

பொன்னாடை வாழ்த்துமடல் பொற்கிழி  அழகுமாலை
என்றெல்லாம் தந்தே சிறப்புகள் செய்துவிட்டார்!
முன்னணியால் நாங்கள் வருவதற்குப் பின்னணியில்
நிற்பவர்கள் சங்கத்தார் சொல்.

விழாவில் கலந்துகொண்டு இங்கே மகிழ்ந்த
தலைவர் முதலாய் அனைவருக்கும் நன்றி!
பலபடப் பாராட்டி வாழ்த்துகிறேன் இங்கு!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

விருது சிறக்க விருது பெற்றவர்க்கு வாழ்த்துகள்!

கவிஞர் இரவாபிலன்

Ramanathan Kathiravan:
🌹🌹🌹
சிறப்பு.
மகிழ்ச்சி.
🙏🙏🙏🙏

மதுரை பாபாராஜ்:
உங்களால் வீஓவியில் சேர்ந்தேன்.
சிஆர் ஏற்றுக்கொண்டார். குறள்களைப் பற்றிப் பேசும் துணிவு நண்பர்கள் அளித்த ஊக்கம். நன்றி

VovKavignariravakabilan:
விருது சிறக்க விருது பெற்றவர்க்கு வாழ்த்துகள்!

கல்லைத் தமிழ்ச்சங்க குறள்மணம் விருதுபெறும்
குன்றா இளமையுடன் பாப்புனையும்
பன்முகத்தோன்
கவி காளமேகம் மதுரகவி பாபாவை
குவலயம் போற்றிடவே வாழ்த்து.

இமயவரம்பன்
 

 

0 Comments:

Post a Comment

<< Home