Saturday, April 08, 2023

பொய்யுரு!


பொய்யுரு!

உள்ளம் உளைச்சல் நெருப்பில் கருகினால்

கொல்லும் துயரம் வளைத்தேதான் தாக்குதடா!

துள்ளும் மகிழ்ச்சியோ கைதட்டிப் பார்த்தாலும்

உள்ளமோ வாடி வதங்கும் நிலையெடுக்கும்!

உள்ளத்தில் கண்ணீர்! முகத்தில் சிரிப்பலைகள்

பொய்யுரு வேடமேந்தும் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home