Wednesday, March 22, 2023

தன்னலமற்ற தலைவர்களை வணங்கு


தன்னலமற்ற தலைவர்களை வணங்கு!

இந்திய  நாட்டை நடுநிலைப் பாதையில்
செம்மாந்து வீரநடை போடவைத்தார் நேருதான்!
நேர்மை நியாயம் எளிமை நடுநிலைமை
வாழ்வியலாய்ப் பின்பற்றி வாழ்ந்தவர் காமராசர்!
ஏழைகள் நாயகன் காமராசர், தேன்மழலை
நாயகர் நேரு இருவரும் புன்னகையில்
தேசத்தின் தூண்களாக உட்கார்ந்து பேசுகின்றார்!
பாடுபட்டு வாழ்த்தவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home