Saturday, April 29, 2023

நல்லோரே வாழவைப்பார்

 நல்லோரே வாழவைப்பார்!


பல்வளங்கள் கூடித்தான் சேர்கின்ற நேரத்தில்

நல்லவர்போல் வந்தே மகிழ்ந்தேதான் சூழ்ந்திருப்பார்!

செல்வம் கரைந்தே வறுமையில் வாடுகின்ற

பொல்லாத காலத்தில் ஓடி ஒளிந்திடுவார்!

நல்லவர்கள் தோள்கொடுப்பார்! பொல்லாதோர் தேளாவார்!

நல்லோரே வாழவைப்பார் சொல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home