Saturday, September 03, 2022

ஒன்றுபோனால் ஒன்று

 ஒன்றுபோனால் ஒன்று!


ஒருகவலை தீர்ந்ததே என்றேதான் இங்கே

ஒருவாறாய் ஓய்வெடுத்தேன்! தோள்களைத் தட்டி

மறுகவலை பார்த்துச் சிரித்ததும் நொந்தேன்!

கவலைகள் ஒன்றுபோனால் இன்னொன்று வந்தே

துவளவைத்துப் பார்க்கின்ற வாழ்க்கை -- அவலை

நினைத்தே உரலை இடிக்கும்

நிலையால்

கணப்பொழுது நிம்மதியும் போச்சு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home