Friday, April 29, 2022

கோபி பாவா


கோபி பாவா நினைவு!


மதுரை சகாயமாதா தெரு வீடு!


கோபி மிதிவண்டி தன்னில் வருவார்கள்!

வேப்ப மரத்தடியில் நிற்கவைத்து வீட்டுக்குள்

பாசமுடன் வந்திடுவார்! அப்பாவைப் பார்த்தேதான்

நேசமுடன் புன்னகைத்து அம்மா இருக்கின்ற

கூடத்தில் வந்திடுவார் அங்கு.


அடுக்களையில் நாங்களெல்லாம் சேர்ந்தேதான் கூடி

அரட்டை அடித்திருப்போம் எல்லோரும் சேர்ந்து !

இரண்டுவீடாய் உள்ளதால் அப்பக்கம் அப்பா

இருப்பார்கள்! இப்பக்கம் நாங்கள் கோபி

அரட்டை அடிப்போம் மகிழ்ந்து.


அக்காலம் மீண்டு வருமோதான்? ஏங்குகிறோம்!

பொற்காலம் என்றுரைப்பேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home