Saturday, April 30, 2022

கவனம்சிதறாதே

 

கவனம் சிதறாதே!

பொங்கிவரும் பேரலைகள்! துள்ளும் திமிங்கலங்கள்!
அங்கங்கே பாறை! குமுறும் எரிமலைகள்!
என்றே நிறைந்திருக்கும் ஆழியில் மாலுமி
இந்தத் தடைகளை எல்லாம் புறக்கணித்தே
தன்னுடைய கப்பலை நாளும் இலக்குநோக்கி
கண்ணுங் கருத்துமாய்க் கொண்டுசெல்வார் ஆர்வமுடன்
எண்ணம் சிதறாமல் தான்.

வாழ்க்கைக் கடலில் பலவித சூழ்நிலைகள்
சூழ்ந்தே புரட்டினாலும் நாமோ இலக்குகளை
விட்டே விலகாமல் வெற்றிப் பயணத்தைத்
தொட்டுத் தொடரவேண்டும்! சூழ்நிலைகள் எல்லாமே
விட்டு விலகிவிடும் ஓடி ஒளிந்துவிடும்!
கற்பதே உந்தன் இலக்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home