Thursday, August 11, 2022

பவளவிழா நாயகர் ஐயா மோகனராசு


பவளவிழா நாயகரே வாழி!


மதிப்பிற்குரிய மோகனராசு ஐயா அவர்களுக்கு வாழ்த்து!


திருக்குறளே மூச்சாக பேச்சாக வாழும்

திருக்குறள் தூயராம் மோகன ராசு

பெருமையை இவ்வுலகே நன்கறியும்! நாளும்

திருக்குறள் தொண்டாற்றும் ஐயா வளமும்

நலமும் நனிசூழ நூறாண்டு வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home