Wednesday, February 23, 2022

அது ஒரு பொற்காலம்


அது ஒரு பொற்காலம்! 


1976 முதல் 2012 முடிய


நாங்கள் பழைய திரைப்படப் பாடல்கள்  பாடித் தூங்கவைத்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.நாங்கள் பாடித் தூங்கவைத்த பாடல்கள்:


1. சின்னஞ்சிறு கண்மலர்

2. பூஞ்சிட்டுக் கன்னங்கள்

3. நீலவண்ணக்கண்ணா வாடா

4. என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

5. எங்கிருந்தாலும் வாழ்க

6. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

7. காதலிலே தோல்வியுற்றாள்

8. உன்னைக் காணாத கண்ணும்

9. என்னை யாரென்று எண்ணியெண்ணி

10. நான் பேச நினைப்பதெல்லாம.

11. கண்ணும் கண்ணும் பேசியதும்

12.துள்ளாத மனமும் துள்ளும்

13.தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

14.சின்னச்சின்ன நடை நடந்து

15. எங்கிருந்த போதும் உன்னை

16. சொன்னது நீதானா

17.உள்ளம் என்பது ஆமை

18. சின்னபாப்பா எங்க செல்லபாப்பா

19.சின்னப் பயலே

20.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

21.அவளுக்கென்ன தூங்கிவிட்டாள்

22.அண்ணன் காட்டிய வழியம்மா

23.மலர்ந்தும் மலராத


எங்கள் பாடலைக் கேட்டுத் தூங்கிய குழந்தைகள்:


1.ராஜ்குமார்

2.சுபா

3.எழில்

4.பொம்மி

5. கார்த்திக்

6. சேனா

7.பெனிட்டா

8.ஹரி

9.சுசாந்த்

10. நிக்கில்

11. வருண்

ஒருமுறை நீலவண்ணக் கண்ணா பாடிய போது தொட்டிலுக்குள் இருந்து அதே பாடலை எங்களுடன் நிக்கிலும் பாடியது இன்றும்நினைவில் உள்ளது.


தம்பி கெஜாவின் நண்பர் செல்வா மதுரையில் வீட்டிற்கு வருவார். பாடத்தொடங்கியதும் "அண்ணனும் அண்ணியும் பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சாச்சு என்று சொல்வார்.


அக்கா மகன் பாலு கூறியது:

மலர்ந்தும் மலராத பாட ஆரம்பிச்சாச்சு. 

இத்துடன் பாட்டுக் கச்சேரி முடிஞ்சுச்சு

என்பார்.


அது ஒரு பொற்காலம்!


 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home