Thursday, September 23, 2021

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய பறவையே! உனக்கொரு கவிதை!



 

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய பறவையே!
உனக்கொரு கவிதை!

மனிதனே பக்குவம்கொள்!

உன்னுடலை மூடி மறைப்பதற்கே நீயிங்கே
எண்ணற்ற ஆடைகளை மாற்றி அணிந்தாலும்
உன்னுள்ளே உள்ள அடிப்படைப் பண்புகள்
பக்குவப் பட்டால்தான் உந்தன் மதிப்புயரும்!
பக்குவமே வாழ்வின் உயிர்.

மதுரை பாபாராஜ்

நம் பாபா ராஜுவின் 
கவிதை சிந்தனை,
அவர் தமிழ் மேல் 
கொண்ட பற்று ,  
ஒரு வற்றாத ஊற்று ! 
அள்ள அள்ள வரும் 
ஒரு அட்சய பாத்திரம்,
அவர் தமிழுக்கு அடிமை !
நாம் அவர் அன்புக்கு அடிமை !
                  இவண் 
                    அன்பு🙏

0 Comments:

Post a Comment

<< Home