Sunday, September 26, 2021

பழமொழிக்குக் கவிதை!

 பழமொழிக்குக் கவிதை!


ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூ சூடிநிற்க

உள்ளே இருக்குமாம் ஈருகளும் பேன்களுமே!

நல்லழகுப் பெட்டகமாய் மேனி தெரிந்தாலும்

உள்ளேயோ வக்கிர எண்ணங்கள் ஊற்றெடுக்கும்

கள்ளமனம் கொண்டதுபோ லாம்.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home