Monday, March 14, 2022

அம்மா


 அம்மா!


பத்துமாதம் மட்டுமா வாழ்வில் சுமக்கின்றாள்?

எப்போதும் ஏதோ ஒருகோலம் ஏற்றேதான்

எப்படியும் நாளும் சுமக்கின்றாள் அம்மாதான்!

இல்லறத்தின் ஆணிவேர் தாய்.


விட்டுக் கொடுக்கும் தியாக மனப்பான்மை,

சுற்றம் சிறக்கவைக்கும் பக்குவப் பண்புகள்,

தன்னலத்தை விட்டே  குடும்பம் தலைநிமிர

என்றும் துணையாவாள் தாய்.


மதுரை பாபாராஜ்

VOV தீத்தாரப்பன்

தாய் ஒரு சுமைதாங்கி என்பதைக் காட்சிப் படுத்திவிட்டீர்கள்!  வள்ளுவரும் தாயைச் சொல்லும் இடங்களிலெல்லாம் ( குறள் எண்கள்: 69,656,923,1047) எவ்வளவு உயர்வு கொடுக்கிறார் என்பதைப் பார்க்கிறோம்! ஒருவர் துறவி ஆகிவிட்டால் வயதில் மூத்தோரும் தந்தையும் கூட அவர் காலில் விழவேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது! ஆனால் அந்தத் துறவி தன் தாயின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்ற சிறப்பு தாய்க்கு இருக்கிறது! பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் தங்கள் தாய் இறந்தபோது இறுதி மரியாதை செய்தனர்!

0 Comments:

Post a Comment

<< Home