Monday, June 27, 2022

சம்பந்தி ஐயா தெய்வத்திரு இராமகளஞ்சியம்



 சம்பந்தி ஐயா தெய்வத்திரு இராமகளஞ்சியம் அவர்களுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

வாழ்க்கை இருவரையும் சம்பந்தி என்றுதான்

சேர்த்தே உறவினைத் தந்தது! வாழ்ந்திருந்தோம்!

காலம் பிரித்தபோதோ உங்களை மட்டுமே

ஏனோ பிரித்தது? நானும் வருவதற்குக்

காத்திருக் கின்றேன்! வருவேன் அழைப்புவரும்!

மண்ணகம் நம்மைப் பிரித்தாலும் நாமிருவர்

விண்ணகத்தில் சந்திப்போம் அன்று.


திருவள்ளுவர் கழகம்,தென்காசி

கவியரங்கம்! 01.06.2018 


தென்காசி ஊரிலே எந்தன் கவியரங்கம்

என்றவுடன் வந்திருந்து கேட்டு ரசித்ததை

என்னால் மறக்க முடியுமா? வெள்ளந்தி

உள்ளமுடன் பேசுகின்ற பண்பை மறப்பேனோ?

கம்பீர மாக நடந்துவரும் காட்சியைக்

கண்கள் படம்பிடித்து வைத்திருக்க பார்க்கின்றேன்

எந்தன் அகக்கண்ணால் தான்.


இந்தப் பிறவியில் சந்திக்க வைத்திட்ட

பொன்னான காலமோ நன்றிக் குரியதுதான்!

உங்கள் புகழ்நிலைக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home