Monday, April 22, 2024

அழகர் திருவிழா பழைய நினைவு


மருமகள் சத்யாவின் கைவண்ணம் இன்று


 [23/04, 06:48] Madurai Babaraj: அழகர் திருவிழாவுக்குச் சென்றுவந்த நினைவு!

பாக்யம் பாட்டி--எங்கள் குடும்பம்-- அழகர்சித்தப்பா குடும்பம்--பத்மா சித்தப்பா குடும்பம்!

அந்தக்காலத்தில் மதுரை மோதிலால் இரண்டாம் தெருவில் இருந்து பாக்யம் பாட்டி தலைமையில் நாங்களும்,பத்மா சித்தப்பா குடும்பமும்,அழகர் சித்தப்பா குடும்பமும் சேர்ந்து அதிகாலையில் சிம்மக்கல் நோக்கி நடப்போம். கூட்டத்துடன் கூட்டமாக செல்வதே மகிழ்ச்சிதான். வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை் பார்த்துவிட்டு நடந்தே திரும்புவோம். வரும் வழியில் மாடர்ன் கபேயில் ஆளுக்கொரு காபி குடிப்போம். நீர்ப்பந்தல் மோர்ப்பந்தல் என்று ஒரே அமர்க்களந்தான்.

இன்று நினைத்தாலும் இனிக்கிறது.

மீண்டும் வருமா?

மதுரை பாபாராஜ்

[23/04, 06:59] Saravananddl: இனிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. ஆளுக்கொரு பாதையிலே பயணம். ஒரு குடும்பம் ஒன்று சேருவதே பெரும் பிரயத்தனம். சேர்ந்தாலும் செல்லிடப்பேசியே பிரதானம். மீண்டும் வாய்ப்பு வருவது கனவுதான்.

0 Comments:

Post a Comment

<< Home