Tuesday, January 29, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அம்மா அப்பா வாங்க
இந்தக் குறள சொல்லுங்க

படிச்சு முடிச்ச பெற்றோரே
என்ன பொருளோ சொல்லுங்க!

செல்லக் குட்டி என்கண்ணே
சொல்லித் தாரேன் கேட்டுக்க

உரிய வயதில் படித்துக்கொள்
ஒழுக்கந் தன்னைக் கற்றுக்கொள்

அடக்கம் பணிவே இமையாகும்
அதுவே வாழ்வின் வழியாகும்

அறிவில் மூத்த சான்றோரை
வணங்கும் பண்பைக் கற்காதோர்

என்ன கல்வி கற்றாலும்
எந்தப் பயனும் இல்லையம்மா!

பெரியோர் ஆசிகள் வாழவைக்கும்
வணங்கி வாழக் கற்றுக்கொள்

அம்மா அப்பா புரிந்துகொண்டேன்
நன்றி நன்றி உங்களுக்கு!

0 Comments:

Post a Comment

<< Home