Monday, January 20, 2020

சிரிப்பு!

சிரிக்கும் உணர்ச்சி மனிதருக்கே
சிறப்பாய்  இருக்கு தெரிஞ்சுக்கோ!

நகைச்சுவை உணர்ச்சி இல்லையென்றால்
தற்கொலை செய்து கொண்டிருப்பேன்
என்றே சொன்னவர் காந்தியண்ணல்!

வாய்விட்டுச் சிரித்தால் நமக்கிங்கே
நோய்விட்டுப் போகும் பொன்மொழியாம்!

சிரித்து வாழ்ந்தால் நிம்மதிதான்-- பிறர்
சிரிக்க வாழ்ந்தால் உளைச்சல்தான்!

சிரிப்பே அருமை மருந்தாகும்
கவலை நோய்கள் பறந்துவிடும்!

தனியாய் நீயும் சிரிக்காதே!
சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!

அன்பாய் சிரித்தால் மதித்திடுவார்!
ஆணவச் சிரிப்போ அழித்துவிடும்!
இன்முகச் சிரிப்பே இன்பந்தான்!
ஈனச் சிரிப்போ துன்பந்தான்!
உண்மைச் சிரிப்பே அழகாகும்!
ஊனச் சிரிப்பே அசிங்கந்தான்!
எதற்கெடுத் தாலும் சிரிக்காதே!
ஏளன மாகச் சிரிக்காதே!
ஐயம் கொண்டு் சிரிக்காதே!
ஒற்றுமை காண சிரித்திருப்போம்!
ஓரம் பேசி சிரிக்காதே!
ஔவைத் தமிழைப் புகழ்ந்தேதான்
மாசே இன்றி சிரித்திருப்போம்!





0 Comments:

Post a Comment

<< Home