Wednesday, January 22, 2020

சாயம் வெளுத்த நரி

சாயம் வெளுத்த நரி!

சாயத்தைப் பூசி நரியொன்று வந்தது!
பார்த்த விலங்குகள் அஞ்சி அரசனாக
ஏற்றது! காட்டில் மழைபெய்ய கூடிநின்று
ஓலமிட்ட குள்ளநரிக் கூட்டத்தைக் கண்டேதான்
சாயநரி ஆர்வத்தில் சேர்ந்தேதான் தானுமங்கே
ஓலமிட மாமழையில் சாயம் கரைந்தோட
சாயம் வெளுத்ததும் மற்ற விலங்குகள்
பார்த்து நகைத்தன பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home