Wednesday, November 09, 2022

யார்தடுப்பார்?


நடப்பதை யார்தடுக்கக் கூ(டும்?


எத்தனைக் கோயில்கள் சென்றாலும் அங்கேநாம்

எத்தனை பூசைகள் செய்தே கடவுளை

எப்படி வேண்டினாலும் வாழ்வில் நடப்பதோ

எப்படியும் இங்கே நடந்துவிடும்! ஆனாலும்

மக்களோ கோயிலைத் தேடி அலைகின்றார்!

இத்தரணி வாழ்க்கைதான் செப்பு.

மதுரை பாபாராஜ்


ஊரெல்லாம் ஓடி

உலகெல்லாம் வலம்வந்து

பாட்டெல்லாம் பாடி

பரிதவிக்கும் மடநெஞ்சே

ஏடெல்லாம் தேடி

எங்கெங்கோ சென்றாயே

கூடெல்லாம் குடியிருக்கும்

கொற்றவனைக் காணலியோ?


VOV SUBRSMANIAN,THANE


0 Comments:

Post a Comment

<< Home