Monday, July 31, 2023

பெற்றோர்



 பெற்றோர்க்கு நிகர் பெற்றோரே!


அம்மா அப்பா தெய்வங்கள்!

அகத்தில் வைத்தே வணங்கிடுவோம்!


பிள்ளை களுக்கு பாதுகாப்பு

பெற்றோர் தவிர யாருள்ளார்?


உழைப்பை இங்கே திரியாக்கி

உடலை நாளும் உருக்கிடுவார்!


கண்ணை இமைபோல் காத்திடுவார்!

அன்பை மழைபோல் பொழிந்திடுவார்!


எதிர்பார்ப் புகளோ எதுவுமின்றி

குழந்தை களுக்குத் தந்திடுவார்!


படிப்பு பட்டம் வாங்கிடவே

பலவழி யாக முயன்றிடுவார்!


சமுதா யத்தின் அரங்கினிலே

முன்னணி யாக நிறுத்திடுவார்!


குழந்தைகள் நாளும் பெற்றோர்க்கு

நற்பெயர் வாங்கித் தரவேண்டும்!


நன்றி உணர்வைக் குழந்தைகள்

காட்டினால் வாழ்வில் உயர்ந்திடலாம்!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home