Tuesday, November 28, 2023

சுரங்கத்தொழிலாளர் மீண்டநாள்


 உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா!


குறள் 619:


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


41 தொழிலாளர்கள் 17 நாள்கள்

மீட்புப் பணியில் அனைவரின் முயற்சி!


மீண்டநாள்: 28.11.23


சுரங்கத்துப் பாதை அமைத்தபோது அங்கே

சரிந்து விழுந்த நிலம்மூட உள்ளே

தொழிலாளர் சிக்கினர்! சிக்கியோரை மீட்க

பதினேழு நாள்களாகப் போராடி இன்று

புதிதாய்ப் பிறந்தது போல வெளியே

வருகின்றார் சிக்கியோர் தான்


கூட்டு முயற்சி! இமாலய வெற்றியை

நாட்டியது என்றே முழங்கலாம்! திக்திக்திக்

காட்சிகள் கண்முன் அரங்கேற எப்போது

பார்ப்போமோ எப்படி மீட்பாரோ என்றேதான்

ஆர்வமுடன் உற்றார் உறவினர்கள் காத்திருக்க

நாள்கள் நகர்ந்தன வே.


பதினேழு நாள்கள் முயற்சியால் வெற்றிக்

கனிபறித்த நிர்வாகந் தன்னைத்தான் வாழ்த்து!

மனிதர்கள் ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home