ஓவியர் பாலாஜிக்கு வாழ்த்து!
நீரோடும் அந்தக் கரையிலே வீடொன்று
வேரூன்றி நிற்கும் மரமொன்று விண்ணகத்தில்
சீருலா காணும் நிலவும் பறக்கின்ற
கார்வண்ணப் புள்ளும் கரிக்கோலைக் கொண்டேதான்
ஆர்வமுடன் ஓவியமாய்த் தீட்டிய பாலாஜி
ஆற்றலை வாழ்த்தினேன் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home