Tuesday, March 24, 2026

நீத்தார் பெருமை -குழந்தைப்பாடல்

 நீத்தார் பெருமை --3

----------------------------------------------------------------

புலன்களை அடக்கு புகழின் சிகரம் நிச்சயம்

----------------------------------------------------------------

ஆசையை விட்டே ஒழுக்கமுடன்

வாழ்ந்தால் புகழும் நூல்கள்தான்!

இறந்தவர் எண்ணிக்கை அளவிடல் அரிது!

துறந்தவர் பெருமையும் அளவிடல் அரிது!

இல்லறம் துறவறம் இரண்டையுமே

நன்றாய் அலசி ஆராய்ந்து

துறவை ஏற்றோர் பெருமைதான்

உலகில் உயர்ந்தது பார்!பார்!பார்!

வலிமை என்னும் அங்குசத்தால்

அய்ம்புலன் அடக்கும் தூயவனே

வீடு பேற்றின் விதையாவான்!

ஐம்புலன் ஆசையை அடக்கியவன்

ஆற்றலின் சாட்சி இந்திரன்தான்!

செய்ய முடியாப் பெருஞ்செயலைச்

செய்து முடிப்பவர் பெரியோராம்!

முடிக்கத் தவிப்போர் சிறியோராம்!

ஐம்புலன் ஆசையை வேரறுத்தால்

வையகம் வசப்படும் உணர்வாயே!

அறிவில் சிறந்தவர் என்பதையோ

பேசும் மணிமொழி காட்டிவிடும்!

துறவிகள் கோபம் சீண்டாதே!

நம்மைக் காப்பது அரிதாகும்!

ஏற்றத் தாழ்வே இல்லாமல்

அன்பாய்ப் பழகுவோர் சான்றோராம்.


0 Comments:

Post a Comment

<< Home