Sunday, January 27, 2008

வயதுக் கோளாறு!

புரியாத வயதில்
புரிந்துபோல்
தோன்றும்!

தெரிந்தோ தெரியாமலோ
காதலிக்கத்
தூண்டும்!

தூண்டிலுக்குள் சிக்கித்
தவிக்கின்ற போது
கண்மூடி வாழ்ந்ததைக்
கண்டிக்கத் துள்ளும்!

பாதிவழி வந்தபின்பு
பட்டறிவு
தீண்டும்!

மீதிவழி தத்தளித்து
மீள்வதற்கே
உள்ளம் வேண்டும்!

0 Comments:

Post a Comment

<< Home